Tuesday, March 20, 2018

சிலுவை தரும் அவமானம்


ஊடகங்களால் நிறைந்த இவ்வுலகில் அவமானங்கள் ஒரு சாதாரன காரியமாகி விட்டது. மலேசியா உட்பட எல்லா நாடுகளும் பல துஷ்ட காரியங்களால் அவமானப்படுகின்றன. சபைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. நெறி தவறிய செயல்கள், சட்டத்துக்கு விரோதமானவை, சமுதாயத்தால் நிராகரிக்கப்படுபவை, ஆத்திரத்தை மூட்டக் கூடியவை யாவம் அவமானம் தரும் செயல்களே. பவுல் 1 கொரிந்தியர் 1.23ல் சிலுவை அவமானத்தைத் தரும் என்று குறிப்பிட்டிருக்கிறார். பின்வரும் காரணங்களால் அது அவமானத்தின் சின்னமாகிறது:

1.        குற்றவாளிகளைத் தண்டிக்கும் கருவியாக சிலுவை பயன்படுத்தப்பட்டு வந்தது – ரோமாபுரி சாம்ராஜ்யம் திருடர்கள், கொலையாளிகளைத் தண்டிக்கும் கருவியாக சிலுவையைப் பயன்படுத்தி வந்தனர். எலும்புக்கூடுகளின் ஸ்தலம் என்று வர்ணிக்கப்படும் கொல்கொதா போன்ற இடங்களில் இந்தத் தண்டனை விதிக்கப்படும். குற்றச்செயல்களுக்குப் பறிகாரம் இல்லை என்பதை உணர்த்துவதற்கு இப்படிப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டது. இயேசு கொலை செய்தாரா? திருடினாரா? எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. அவர் பாவமற்றவர் என்று வேதம் சொல்ல, சமுதாயம் அவரைத் தவறாகத் தீர்த்தது. குற்றமற்றவரைக் குற்றவாளி என்று தீர்ப்பது தவறாகும்.

2.        சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பு – இயேசு எருசலேமிக்குள் நுழையும்போது மக்களிடமிருந்து கிடைத்த அபாரமான வரவேற்பினால் சிலர் அலற்சியடைந்தனர். ஜனங்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப இயேசு வாழாததால், மகிழ்ச்சி கோபமாக மாறியது. ரோம ராஜயத்திடம் இருந்து தாங்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று எதிர்ப்பார்த்ததால் ஜனங்கள் \ஓசன்னா, ஓசன்னா, ஓசன்னா’ என்று பாடினார்கள். ஆனால், இயேசு அதற்காக வரவில்லை. அவர் உலகை இரட்சிக்கவே வந்தார். தங்கள் பாவங்களில் இருந்து விமோஷனம் தருவதைக் குறித்து ஜனங்கள் அக்கறை காட்டவில்லை. மோசே தங்கள் மூதாதையார்களை எகிப்தில் இருந்து மீட்டது போல, தங்களையும் ரோமாபுரியரிடம் இருந்து மீட்பார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

3.        சீஷர்கள் எங்கே போனார் – பிதா தம்மை விட்டு விலகியிருந்ததால் ஆழமான துக்கத்தில் இயேசு மூழ்கியிருந்த போது, சீஷர்கள்கூட அவரைப் பொருட்படுத்தாமல் போனார். இயேசுவோடு பக்கபலமாக நிற்பதாக வாக்குறுதி கொடுத்த பேதுருகூட மூன்றுமுறை அவரை மறுதலித்தான். யூதர்களாலும் ரோமாபுரி அதிகாரிகளாலும் இயேசு தவறாக நியாயந்தீர்க்கப்பட்டதோடு சாட்டையடியும், தலையில் முள் கிரீடமும் மேலும் வேதனையைத் தந்தது. அவர் மன ரீதியாகவும் சரீர ரீதியாகவும் துன்பத்தை அனுபவித்தார். அவருடைய கடைசி நேரத்தில் யாரும் அவருக்குப் பக்கத்தில் இல்லை. இயேசுவின் சிலுவை மரணம் உண்மையிலேயே வியாகூலமானது. 

4.        மனித பாவம் – தேவனுடைய வார்த்தை திரும்பத் திரும்ப மனுஷர்கள் யாவருக்குமான தேவ அன்பைப் பகர்கிறது (யோவான் 3:16). அன்பு வெளிப்படுத்தப்பட வேண்டும். தேவன் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது – உன் ஆண்டவராகிய தேவனை முழு இருதயத்தோடும், முழு ஆத்மாவோடும், முழு சிந்தையோடும் நேசிப்பாயாக என்பதாகும். இந்த முன்னுதாரன ஜீவியத்தையே அவர் வெளிப்படுத்தினார். ஆயினும் தேவ ஜனங்கள் இந்த அழைப்பைப் புரிந்து கொள்ளத் தவறியதோடு அந்த உடன்படிக்கையையும் புறக்கணிக்கின்றனர். அவர்களின் எரிச்சலும் தற்பெருமையும் இயேசுவை சிலுவைக்கு இழுத்துச் சென்றது. சிலுவையில் தொங்கிய போது இயேசு, ‘பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’, என்று சொன்னார். வேதனையின் உச்ச கட்டத்தில் இருந்த போதும் இயேசு உலக மக்களின் இரட்சிப்புக்காக வேண்டுதல் செய்கிறார்.

5.        சித்தத்தை ஒப்புக் கொடுத்தல் – சிலுவை கிருபையை அடையாளப்படுத்துகிறது. நமது எந்தக் கிரியையும் தேவ உள்ளத்தை சமாதானப்படுத்த போதுமானதாயிருக்காது. ஆதித் திருச்சபை சூழ்நிலையில் உணவு பேணப்பட வேண்டியது கட்டாயமாயமானது. இது ஆதி விசுவாசிகளுக்கு குறிப்பாக புறஜாதியாருக்குக் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. சிலுவையில் இருந்து நமக்குக் கிடைத்த தியாகபலி ஒட்டுமொத்த மனிதர்களின் பாவ விமோஷனத்துக்கும் போதுமானதாயிருந்தது. கூடுதலான பணி எதுவும் தேவையில்லை. கிறிஸ்துவைப் பின்பற்றுதல் என்பதை அவர் சிலுவையில் அனுபவித்த பாடுகளை நாமும் சுமப்பது என்று வேதம் நமக்குப் போதிக்கிறது.

சிறந்த மறுமலர்ச்சியாளரான மார்ட்டின் தூதர், முழு கிறிஸ்தவ உலகமும் மனுகுலமும், சிலுவையில் தொங்கியிருக்கும் நலனை எதிர்ப்பார்க்கிறார்கள் என்றார். தேவன் நம்மை நேசிப்பதால் அந்தச் சிலுவை இன்னும் இருக்கிறது. பாவம் ஒரு பரிகாரத்தில் யாவருக்கும் தீர்க்கப்படவேண்டியிருப்பதால் சிலுவை இன்னும் இருக்கிறது. சுயம் மரித்து, கிறிஸ்து நம்மில் ஜீவிப்பதற்காக சிலுவை இன்னும் இருக்கிறது. இதுவே நம்பிக்கை. இதைப் புரிந்து கொள்ளத் தவறினால் நம் ஜீவியம் குழப்பம் நிறைந்ததாக இருக்கும்.


Tuesday, November 21, 2017

ஞாபகார்த்த, ஸ்தோத்திர ஜெப ஆராதனை முறைமை

பரி. யாக்கோபின் ஆலயம்
243 ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா (ஈப்போ சாலை), கோலாலம்பூர்









நிற்கவும்
---------
பிதாவாகிய தேவனின் குடும்பத்தாராகிய நாம் அனைவரும் துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் குறிப்பாக உமது அடியாராகிய  _________________________________ அவர்களுக்காக ஏறெடுப்பதற்காக திரண்டு வந்திருக்கிறோம். தேவனுடைய பரிசுத்த செய்தியை அறிவதற்கும், உலகின் தேவைகளை அவரண்டை கொண்ட வருவதற்கும், அவருடைய கிருபையை நாடுவதற்கும் இந்த ஆராதனையில் கலந்து கொள்கிறோம்.

கீதம்

சுருக்க ஜெபம்
எங்கள் பரம பிதாவாகிய நித்திய கடவுளே, எங்கள் நீடிய அன்பால் நேசித்து, மரண இருளை அதிகாலையாக மாற்றக்கூடியவரே, பயபக்தியும் தாழ்மையும் உள்ள இதயத்தோடு உம்மிடம் காத்திருக்க எங்களுக்கு உதவி புரியும். உமது வேதத்தினாலும் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாங்கள் நம்பிக்கையைப் பெற்று எங்களுடைய இருளினின்றும் உபத்திரவங்களினின்றும் உம்முடைய பிரசன்னத்தின் ஒளிக்குள்ளும் சமாதானத்திற்குள்ளும் உயர்த்தப்பட்ட இந்த அமைதியான நேரத்தில் நித்திய காரியங்களைக் குறித்து எங்களோடு பேசியருள வேண்டும் என்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.

அஞ்சலி/சாட்சி

சிறப்புப் பாடல்  (இருந்தால்)

வேத பாடங்கள்
1ல் பாடம்              சங்கீதம் 23/சங்கீதம் 130
2ம் பாடம்              யோவான் 5:19-25/ரோமர் 14:7-9

அருளுரை

பாமாலை/பாடல்

ஸ்தோத்திர துதிபாடல்
சகலத்தையும் படைத்த பிதாவாகிய தேவனே
உமது அடியாரின் ஆத்மாவின் மீது கிருபையாயிரும்

உலகை இரட்சித்த குமாரனாகிய தேவனே
உமது அடியாரின் ஆத்மாவின் மீது கிருபையாயிரும்

சபையைப் பரிசுத்தப்படுத்தும் பரிசுத்த ஆவியாகிய தேவனே
உமது அடியாரின் ஆத்மாவின் மீது கிருபையாயிரும்

திரித்துவரே, மூவரில் எகமானரே
உமது அடியாரின் ஆத்மாவின் மீது கிருபையாயிரும்

உமது அன்பில் வளர்வதற்குத் தடையாக இருக்கின்ற யாவற்றிலும் இருந்து
எங்களை மன்னித்தருளும் பிதாவே

உமது சமூகத்தில் இருந்து வழிதப்பச் செய்யும் யாவற்றிலும் இருந்தும்
எங்களை மன்னித்தருளும் பிதாவே

காலஞ்சென்ற அடியாரை உணவழித்து கவனித்துக் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் யாவருக்கும்
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.




காலஞ்சென்ற அடியாரை முழு அன்போடு கவனித்து அவர்களின் ஜீவித்து கொண்ட சபையாருக்காக
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

உலகைப் பார்வையை விரிவாக்குவதில் உதவிய காலஞ்சென்ற உமது அடியாரின் குருமார்கள், போதகர்கள், அத்தை-மாமன்மார்கள், சிற்றப்பா-சித்திமார்கள், நண்பர்கள் யாவருக்கும்
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

காலஞ்சென்ற உமது அடியார் _____________________________
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

காலஞ்சென்ற உமது அடியார் தம் குடும்பத்தாரிடத்தில் உம் அன்பை வெளிப்படுத்தியமைக்காக
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

காலஞ்சென்ற உமது அடியார் தம் கடமையை நிறைவேற்றிய முறைக்காக
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

சபையிலும் குறிப்பாக பரி.யாக்கோபின் ஆலயத்திலும், சமூகத்திலும் உமக்கு சாட்சி பகர்ந்த முறைமைக்காக
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

உமது மகிமைப்பும் மாட்சிமையும் வளரும் பொருட்டு காலஞ்சென்ற உமது அடியார் பொழிந்த உம் அன்புக்காக
பிதாவே உம்மை ஸ்தோத்தரித்துத் துதிக்கிறோம்.

காலஞ்சென்ற உமது அடியாரின் குடும்பத்தாரை ஆற்றித் தேற்றியருளும். அவர்களுக்கு உயிர்த்தெழுதலின் ஆவியைத் தாரும்.
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்

எதிர்காலத்தில் நாங்கள் உமதண்டை கிட்டிச் சேரும் பொருட்டு எங்களை வழிநடத்தியருளும்
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்


சபையார் சேர்ந்து சொல்வது
என்றென்றும் நிலைத்திருக்கிறவரும் வரப்போகிறவருமான ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். சகலத்தையும் படைத்தவரும் உமது சித்தம் நிறைவேறுவதற்குப் பாத்திரருமாகிய நிலைவரம் பெற்ற கர்த்தராகிய ஆண்டவரே, நீர் கனமும் மகிமையும் பெறப் பாத்திரராய் இருக்கிறீர். ஆமென்.

காணிக்கைப் பாடல்

ஜெபம்
குரு:       ஆண்டவரே, எங்கள் மீது கிருபையாய் இரும்
சபை:     கிறிஸ்துவே எங்கள் மீது கிருபையாய் இரும்
குரு:       ஆண்டவரே, எங்கள் மீது கிருபையாய் இரும்

சபை:     பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்,

ஜெபம்  (சபை):
உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் எங்களுக்கு மெய்யான அன்பையும் உறுதியான நம்பிக்கையையும் அருளிய பரலோக பிதாவே, இந்த விசுவாசத்தை எங்களிடத்தில் அனுதினமும் உறுதிப்படுத்தியருளும். இவ்விதமாய் நாங்களும் பரிசுத்தவான்களைப் போல், பாவ மன்னிப்பைப் பெற்று, நித்திய ஜீவனுக்கான உயிர்த்தெழுதலைப் பெற கிருபை அருளும். ஆமென்.




சிறப்புப் பாடல்

ஆசீர்வாதம்:

எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம் ஜெயத்தை அருளிய எங்கள் கர்த்தாவே, விசுவாசத்தின் மூலம் எங்களுக்கு மகிழ்ச்சையையும் சமாதானத்தையும் அருளும். தேவனாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதம் இன்றும் என்றென்றும் உம்மோடு நிலைத்திருப்பதாக. ஆமென்.

சபை:     ஆமென்

குரு:       சமாதானத்தோடே உலகத்திற்குள் சென்று ஆண்டவரை சேவியுங்கள்
சபை:     கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்

கீதம்



Wednesday, August 30, 2017

குடும்ப நிறுவனம் முன்னேற்றம் காண்கிறதா?

மலேசிய இந்தியக் குடும்பங்களுக்கு ஷலோம்

குடும்ப நிறுவனம் முன்னேற்றம் காண்கிறதா? சிதைவுறுகிறதா? பழமைவாதிகள் ஒருவேளை முன்னேற்றம் காண்கிறது என்று சொன்னாலும், தீவிரவாதப் போக்குடையவர்கள், ஆதி நோக்கத்தில் இருந்து வெகு தொலைவு சென்றுவிட்டதால், இன்றைய குடும்ப நிறுவனத்திற்கு எதிர்காலம் இல்லை என்று வாதிடுவர். அற்ப காரணங்களுக்காக விவாகங்கள் முறிகின்றன. இல்லங்களில் பாதுகாப்பும் சமாதானமும் இல்லாததாலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நேரத்தை ஒதுக்க முடியாததாலும், அவர்கள் வெளியே சென்று நண்பர்களிடமும் சகாக்களிடமும் பாதுகாப்பை நாடுகின்றனர். தங்கள் பாடுகளுக்கு காரணம் மற்றவர் என்று ஒருவரை மற்றவர் குறைகூறுவதால், வெறுப்பில் மூழ்குகின்றனர். தாங்கள் வறுமையில் வாடினால், அரசாங்கத்தையும், கல்வி முறையையும், இந்திய சமுதாயம் ஓரங்கட்டப்படுவதையும் வேறு பல காரணங்களையும் பட்டியல் போடுவர். எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும், நம் குடும்ப நிறுவனம் ஓர் இக்கட்டான பயணச் சந்திப்பில் இருக்கின்றது என்ற முடிவுக்கு வருவோம். குடும்ப உறுப்பினர்கள் மிக அணுக்கமாக பிணையப்பட்டிருந்த முத்தான பழைய காலத்தை நாடுகிறோம். அந்தக் காலத்திற்கு நாம் திரும்பச் செல்ல முடியுமா? அதற்குப் பின்வரும் ஆலோசனைகளை முன் வைக்கிறோம்.

1.     கலந்துரையாடலுக்கான தேவைகள் – ஒருவரை மற்றவர் புரிந்து கொள்வதற்கும் பிரச்சனையைச் சமாளிப்பதற்கும் இது வழிவகுக்கும். தேவனோடு உரையாடி (இதை ஜெபம் என்று அழைக்கிறோம்) வாழ்க்கைப் பிரச்சனையை அவரிடத்தில் வைப்போம்.

2.     பெலவீனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் – தோல்வி மற்றும் நம்பிக்கையற்ற நிலையை ஏற்றுக் கொள்வதற்கு இந்த முயற்சி அவசியம். நம்மை நாமே ஆராய்ந்து, தோல்வியடைந்த சூழ்நிலைக்கு நானும் காரணம் என்று ஒப்புக்கொள்ளுவோம்.

3.     நம்பிக்கையில் ஜீவிக்க வேண்டிய அவசியம் – இயேசு கிறிஸ்துவை நம் வாழ்க்கைக் கணக்கில் சேர்த்துக் கொண்டால், எப்படிப்பட்ட நம்பிக்கையற்ற சூழ்நிலையாய் இருந்தாலும், புது நம்பிக்கையால் பற்றிக் கொள்வோம்.

4.     விடாமுயற்சியின் அவசியம் – முயற்சிக்கு அளவே இல்லை என்று புரிந்து கொள்வோம்.

5.     நண்பர்களுக்காக அவசியம் – சமுதாய மூலதனங்கள் யாவற்றையும் சமுதாய ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வோம்.

6.     மத ரீதியான தேவை – சபைகள் தன்னில் பிளவுபடாமலும் சமுதாய நலனில் சுய மகிமை தேடாமலும் உழைக்க வேண்டும். 


7.     நேசிக்க வேண்டிய அவசியம் – எந்தத் தொடக்கத்திற்கும் நிச்சயமாக இது முக்கியம். தேவன் நம்மை நேசித்ததால் தம் பரிசுத்த குமாரனை இவ்வுலகுக்கு அனுப்பினார். ஆகவே, மலேசிய இந்திய சமுதாயத்தை மேம்படுத்த நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் அன்பால் அணிவிக்கப்பட வேண்டும். 

Sunday, August 20, 2017

தனி நபர் சுவிசேஷ ஊழிய வழிகாட்டி



தனி நபர் சுவிசேஷ
ஊழிய வழிகாட்டி

1. முன்னுரை – தனி நபர் சுவிசேஷ ஊழியம்:

தற்பரிசோதனைக் கேள்வி: இந்த ஊழியத்தில் நீ ஈடுபடுவதன் காரணம் யாது?

1.1 மனுகுல இரட்சிப்புக்கான தேவ திட்டம்:

V மனிர்கள் யாவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற தேவ திட்டத்தை நாம் வேதத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்:



யோவான் 3:16

தேவன்தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்குஅவரைத் தந்தருளிஇவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

தீமோத்தேயு 2:4

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

பேதுரு 3:9
தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடிகர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பிநம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

V கிறிஸ்தவர் என்ற முறையில் நம் அனுதின ஜீவியத்தில் தேவன் நம்மை இரட்சிக்கும் திட்டத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

1.2 தனி நபர் சுவிசேஷத்திற்கான அழைப்பு:

கொரிந்தியர் 9:16-17
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும்மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லைஅது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறதுசுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால்எனக்கு ஐயோ. நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டுஉற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும்உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.


V சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஊழியம் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பொதுவானது என்று அப்போஸ்தலர் பவுல் தெளிவு படுத்துகிறார்:

  அவர் பின்வரும் பதங்களைப் பயன்படுத்துகிறார்:
(a) கடமை               (b) உக்கிராணம்                 (c) உத்தியோகம்
V இயேசு கிறிஸ்துவின் வழி கிடைக்கும் இரட்சிப்பின் பலனைப் பகிர்ந்து கொள்வதில் இருந்து யாரும் விலக முடியாது (தீமோத்தேயு 2:10).


V கிறிஸ்தவர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்குச் சிறப்பு அழைப்பு தேவையில்லை.

2. தனி நபர் சுவிசேஷத்தின் யதார்த்தங்கள்:

V இந்த ஊழியத்தில் முழுமூச்சாக ஈடுபடுவதற்கு முன் சுய ஆயத்தங்கள் செய்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது.

2.1 ஆவிக்குரிய யுத்தத்தில் தனி நபர் சுவிசேஷம் சம்பந்தப்படுகிறது:

V சுவிசேஷத்தை அறியாதவர்கள் அல்லது அதற்குத் துலங்காதவர்கள் ஆவிக்குரிய குருட்டுத்தனத்தில் உள்ளனர் என்று வேதாகமம் தெளிவாகச் சொல்கிறது.

கொரிந்தியர் 4:4

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளிஅவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்குஇப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

V பரிசுத்த ஆவியில் சார்ந்திருந்து, நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு, தனிப்பட்ட சுவிசேஷத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

V சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதான கடமை பின்வரும் காரியங்களைக் கொண்டிருப்பதாக வேதாகமம் போதிக்கிறது:

அப்போஸ்தலர் 26:17-18

உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாகஅவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும்சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டுஇப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.


(a) அவர்கள் கண்கள் திறக்கப்படும் பொருட்டு
(b) இருளில் இருந்து ஒளியினிடத்திற்கு வருகை
(c) தேவனைப் பற்றும் விசுவாசத்தில் இருந்து விலகி சாத்தானின் அதிகாரத்திற்கு உட்படுதல்
(d) பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுதல்
(e) தேவ வாரிசுரிமையைப் பெறுதல்
(f) தேவனால் பரிசுத்தமாக்கப்படுதல்
(g) தேவனிடத்தில் விசுவாசம்

V பரிசுத்த ஆவியின் பணியில் சார்ந்திருந்து தேவனுடைய கிரயத்திற்காக ஆயத்தம் பெற வேண்டும். (எபேசியர் 6:10-17)

2.2 இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கப்பெறும் இரட்சிப்புக்கான சுவிசேஷத்தை அறிதலும் பகிர்தலும்

V சுவிசேஷத்தின் ஒட்டுமொத்த செய்தியை அறிந்து கொள்வதோடு, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு ஆயத்தமாக இருப்பது மிகவும் இன்றியமையாதது:

இயேசுவின் ஜீவியம்:
(a)பிறப்பு
(b)ஜீவியமும் ஊழியமும்
(c)இறப்பு
(d)உயிர்த்தெழுதல்
(e)பரமேறுதல்
(f)
2ம்வருகை





சுவிசேஷம்( 4 ஆவிக்குரிய விதி)
ஆவிக்குரிய விதி 1
ஆவிக்குரிய விதி 2
ஆவிக்குரிய விதி 3
ஆவிக்குரிய விதி 4
தேவன் உன்னை நேசிக்கிறார். உனக்காக அருமையான திட்டத்தை வகுத்துள்ளார்.
பாவத்தால் கலங்கப்பட்ட நாம் தேவனிடத்தில் இருந்து பிரிந்திருக்கிறோம்.
இயேசு கிறிஸ்து மாத்திரமே பாவ விமோஷனத்திற்கான ஒரே தீர்வு.
இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம் விசுவாசத்தை வைக்க வேண்டும்..

V பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடு முழு கடமையுணர்வோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நாம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

2.3. தனி நபர் சுவிசேஷத்திற்கான மண்டலங்கள்:

V ஜெபத்தோடு நோக்கும் போது, தனி நபர் சுவிசேஷத்திற்கான பல்வேறு மண்டலங்களை (அ. வாய்ப்புகளை) காணலாம்:

குடும்பம்
உறவினர்
நண்பர்
சக மாணவர்
அந்நியர்
அயலார்
சபை
V இவை யாவும் தேவனால் தனி நபர் சுவிசேஷத்திற்காக அருளப்பட்ட மண்டலங்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

2.4 சுவிசேஷத்திற்குச் சாத்தியப்படும் ஆலோசனைகள்

(a) அவர்களை அறிந்து கொள்ளுங்கள்
(b) அவர்களிடம் மெய்யன்பையும் அக்கறையையும் காட்டுங்கள்.
(c) அவர்களிடம் மெய்யான நட்புறவைப் பேணுங்கள்
(d) அவர்களோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

V உரையாடலைத் தொடங்குவதற்கு முன்பு தகுதியான கேள்விகள் கேட்பது தனிநபர் சுவிசேஷத்தில் முக்கியமான அணுகுமுறை.

V தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொள்வதே நமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். அவர்களைக் குறை கூறுவது அல்லது, புண்படுத்திப் பேசுவது நம் கடமையல்ல.

V தனிநபர் சுவிசேஷம் தேவனுடைய வழிநடத்துதலால் அமையும் தொடர்ச்சியான செயற்பாங்கு ஆகும். அவருடைய ஞானத்திற்கும் பணிக்கும் நம்மை நாம் ஒப்புக் கொடுக்க வேண்டும.

3. கேள்வி பதில் அங்கத்தோடு முடிவுரை:

V தனிநபர் சுவிசேஷம் விசுவாசிகள் யாவர் மேலும் விழுந்த கடமையும் தயவுமாய் இருக்கிறது. (மத்தேயு 28:18-20)