Sunday, June 5, 2016

மெதடிஸ்ட் திருச்சபை வரலாறு

கடந்த ஞாயிற்றில் அங்கிள் பிடி சாமுவேலிடம் இருந்து அச்சரியமான பரிசைப் பெற்றோம். அது ஒரு புஸ்தகம். அது ஒரு சாதாரன புஸ்தகம் அல்ல. அவருடைய தந்தையான மறைதிரு எல்.ஏ. சாமுவேலின் சுய சரிதை அது. சிங்கப்பூரில் வசிக்கும் அவருடைய சகோதரரான டி.எஸ்.சாமுவேல் எழுதிய புஸ்தகம் அது. அது சிறிய புஸ்தகம் என்றாலும் ஒரு மாமனிதனின் வாழ்க்கை வரலாறு அடங்கியிருக்கிறது.

மறைதிரு எல்.ஏ.சாமுவேல் மலாயாவின் மூத்த மெதடிஸ்ட் குருவானவரில் ஒருவர். அவர் 58 வருடம் மெதடிஸ்ட் திருச்சபையில் பணியாற்றியிருக்கிறார். பேராயர் ஓல்ட்ஹமிடம் அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. (அவரும் பேராயர் தோர்புனும் மெதடிஸ்ட் உபதேசத்தை முதலில் சிங்கப்பூரிக்கும் பின்னர் மலாயாவுக்கும் கொண்டு வந்தவர்கள்). பின்னர் அவர் ஏழை எளியோர் மத்தியில் ஊழியம் செய்தார்.

அவர்கள் மனிதர்கள் வாழ்வதற்குச் சற்றும் பொருத்தம் இல்லாத குருமனைகளில் வாழ்ந்தார்கள் என்று புஸ்தக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். "சபையார் இல்லை,,,, சம்பளம் இல்லை,,,, பிள்ளைகள் படிப்பதற்குப் பள்ளிகள் இல்லை. அவர் முறுமுறுக்காமல் தேவ ஊழியத்தைத் தொடர்ந்தார்." இப்படி அந்த புஸ்தக ஆசிரியர் எழுதியிருக்கிறார். அவர்கள் தேவனுக்காக மலாயா நிலத்தை கதிரூட்டினார்கள்.

இந்த புஸ்தகம் என்னைச் சிந்திக்கச் செய்தது. திருச்சபை முன்னோடிகளுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். தேவ ஊழியத்தைச் செய்ய அவர்கள் எவ்வளவு கஷ்டங்களைக் கடந்து சென்றுள்ளார்கள்! மெதடிஸ்ட் திருச்சபையை வளர்க்க அயர்வில்லாத உழைப்பை வழங்கிய எல்.ஏ.சாமுவேல் மற்றும் பேராயர் ஓல்ட்ஹம் போன்ற சுவிசேஷகர்களுக்காக ஒரு நிமிடம் தேவனிடம் நன்றி செலுத்தி ஜெபிப்போம்.


அதே வேளையில் தேவன் நம்மை ஆளுகை செய்து, நமது சொந்த வழியில் வரலாற்று வித்தகர்களாக மாற்ற வேண்டும் என்றும் ஜெபித்துக் கொள்வோம். இந்த அறுமையான தேவ ஊழியர்களைத் தேவன் ஆசீர்வதிப்பாராக.

தவக் காலம் (லெந்து காலம்)

கடந்த புதன் கிழமையில் இருந்து தவக் காலம் தொடங்கி விட்டது. நான் சொன்னதுபோல, முடிந்தவரை உண்மையான உபவாசத்தில் ஈடுபடுங்கள். தவக்காலம் ஆவிக்குரிய தற்பரிசோதனை செய்யும் காலம். இக்காலத்தில்தான் விசுவாசிகள் ஆவிக்குரிய மற்றும் சரீர ஜீவியத்தைப் பரிசோதித்துப் பார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்: ஆவியின் பிரகாரமும் சரீர பிரகாரமும் சொந்த வளர்ச்சியை அளந்து பார்க்கும் காலம் இது.

பின்வருவன போன்ற கேள்விகளை நாம் அறிய வேண்டியதுள்ளது:
·         கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு நான் ஆவிக்குரிய வளர்ச்சி அடைந்துள்ளேனா?
·         தனிப்பட்ட தியானத்தில் நான் வளர்ச்சியடைந்திருக்கிறேனா அல்லது அவசர அலங்கோலமாக அதில் ஈடுபடுகிறேனா?
·         ஆண்டவரை விசுவாசிப்பதற்கும் முழுமையாக அவரில் சார்ந்திருந்து என் ஜீவியத்திற்கோ இயேசுவானவரைப் புரிந்து கொள்ளும் முயற்சி எளிதாக அமைகிறதா?
·         என் தொழில் சார்ந்த ஜீவியம் மேம்படைந்துள்ளதா?
·         இயேசுவானவர் என் ஜீவியத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதைப் பிறருக்குச் சாட்சியாக கூற முடிகிறதா?

வேதத்தை வாசிக்க நேரம் ஒதுக்குங்கள். அன்றாட கடமைகளுக்கு மத்தியில் தனிப்பட்ட தியானத்திற்கு நேரத்தை ஒதுக்குங்கள். இயேசுவானவர் உன்னைச் சூழ்ந்து வாசம் செய்கிறார் என்பதை விழிப்புடன் உணர்ந்து கொள்ள பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடுங்கள்.


தேவன் நமது தவக் காலத்தை ஆசீர்வதிப்பாராக.

கண் சரீரத்தின் வெளிச்சமாயிருக்கிறது

இன்றைய தினம் நான் தேர்வு செய்த புதிய ஏற்பாட்டுப் பகுதி மத்தேயு 6.22 ஆகும். அந்த வசனம் பின்வருமாறு அமைகிறது: கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.

இயேசுவானவர் தமது மலைப் பிரசங்கத்தின்போது இந்த வசனத்தைக் கூறுகிறார். மத்தேயு 5 முதல் 7 வரை இதன் விபரம் அடங்கியிருக்கிறது.

இந்த வசனங்கள் மஹாத்மா காந்தியின் வாழ்க்கையில் முத்தாய்ப்பாய் அமைந்தது. இந்த வசனத்தின் தாக்கத்தால் ஒரு, ‘கிறிஸ்தவர்களின் கிறிஸ்துவைக் கொடுங்கள்; கிறிஸ்துவின் கிறிஸ்தவர்கள் வேண்டாம்’, என்றார்.

நமது கண்கள் சரீரத்தின் விளக்காய் இருக்கிறது. நாம் காண்கின்ற காரியங்கள் நம்மைப் பல நிலைகளில் தாக்கம் செய்கின்றன. இறுதியில், நாம் பார்க்கின்றவை அடிப்படையில் நாம் நல்லவர்களாகவோ பொல்லாதவர்களாகவோ மாறுகிறோம். நமது பார்வையின் ஜீவியம் ஆவிக்குரிய ஜீவியத்தைப் பேரளவில் தாக்கம் செய்வது ஓர் அற்புதமான காரியமாகும்!

  • இயேசுவானவர் திரள் ஜனங்களைக் கண்டு அவர்களிடத்தில் பச்சாதாபம் கொண்டார். அது வெறுப்புக்குப் பதில் அன்பைப் பெருக்கிற்று.
  • இயேசுவானவர் ஐசுவரியவனான இளம் வணிகனை கண்டு அவனிடத்தில் கவலை கொண்டார். அது சமரசத்திற்குப் பதில் மேன்மைக்குச் சவால் விட்டது.
  • இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். இது அற்பமானதற்கு அப்பால் தெய்வீகப் பார்வையாகும்.
  • இயேசு பேதுருவைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். இது நியாயந்தீர்ப்பதற்கு அல்லாமல் பேதுருவின் தனித் திறமையை உணர்த்தும் பார்வையாகும்.


இது உண்மையிலேயே ஓர் ஆழமான உபதேசம். உங்களுக்கும் அப்படியே அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். நமது பார்வையில் கவனமாய் இருப்போம். அது நாம் மூழ்கியிருப்பது வெளிச்சமா அல்லது இருளா என்பதை உறுதி செய்யும். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்வதால் என்ன நன்மை?

இயேசு கிறிஸ்துவை நமது சொந்த ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக் கொள்வதால் அவர் நமக்கு பாவ மன்னிப்பு, நித்திய ஜீவனுக்கான வாக்குறுதி ஆகியவற்றைத் தவிர வேறு எதைத் தருகிறார்? கலாத்தியர் 3:26 - 4:7 ஆகிய வசனங்களை என்னோடு வாசிக்கவும். இந்த வசனம் அடிப்படையில் பதிலளிக்கிறேன்.

A. கலாத்தியர்  3: 26-28 – நமது சிந்தை பயனடைகிறது
பிறரைக் குற்றப்படுத்தாதபடி தேவன் நமது சிந்தையை மாற்றியமைக்கிறார். "யூதரானாலும், கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் அனைவரும் சுதந்திரவாளிகளே......" கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்றாய் இருக்கிறோம். எந்தவிதமான வேறுபாடும் இருக்கத் தேவையில்லை. தோல் நிறம், மொழி, ஜாதி வேறுபாட்டின் அடிப்படையில் வெறுப்பு, வன்முறை, பேதம் தோன்றாததால், அதிக சந்தோஷம் கிடைக்கிறது.

B. கலாத்தியர்  3:29 – நமது உடைமை பயனடைகிறது
நாம் ஆபிரகாமின் உண்மையான வாரிசாக இருப்பதால், நமது கற்பனைக்கு எட்டாத சுதந்திரத்தை வழங்கியுள்ளார். நாம் மிக மிக செல்வந்தர்களாகியிருக்கிறோம்! உலக பிரகாரமாக அல்ல, வேறு விதமான செல்வந்தர்கள் ஆவோம். தேவன் ஆபிரகாமுக்கு வழங்கிய ஆசீர்வாதம் மிக அறுமையானதும் புரிந்து கொள்ளக்கூடாததுமானது. நாம் மாபெரும் செல்வத்துக்கு சுதந்திரவாளியாக இருக்கிறோம். மிகப் பெரிய ஈவைத் தேவன் வழங்கியிருப்பதால் இது மிகப் பெரிய சந்தோஷமான காரியமாகும்.

C. கலாத்தியர்  4:6 – அளவை ரீதியாக நாம் பயனடைகிறோம்.
தேவன் தமது அற்புதமான பிரசன்னத்தால், புதிய உறவின் அளவையை அருளியுள்ளார். நமது தேவனை, ‘அப்பா, பிதாவே’, என்று அழைப்பது எவ்வளவு பெரிய காரியம்! இது அற்புதத்திலும் அற்புதம். நான் எந்த அளவுக்கு தேவனை நெறுங்கியிருக்கிறேனோ, அந்த அளவுக்கு நீங்களும் மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். ஏப்படி? நான் தேவனுடைய புத்திரன் (புத்திரி)! ஒரு புத்திரனுக்கும் அடிமைக்கும் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்! ஒன்று வீட்டுக்குள் வாசம் செய்யமுடியும், மற்றொன்றால் முடியாது.


இயேசு கிறிஸ்துவினால் கிடைத்த இந்த ஆசீர்வாதங்களைப் பற்றிச் சிந்திப்போம்.

Friday, June 3, 2016

இன்றையே கேள்வி:

இயேசு கிறிஸ்துவை நமது சொந்த ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக் கொள்வதால் அவர் நமக்கு பாவ மன்னிப்பு, நித்திய ஜீவனுக்கான வாக்குறுதி ஆகியவற்றைத் தவிர வேறு எதைத் தருகிறார்? கலாத்தியர் 3:26 - 4:7 ஆகிய வசனங்களை என்னோடு வாசிக்கவும். இந்த வசனம் அடிப்படையில் பதிலளிக்கிறேன்.

A. கலாத்தியர்  3: 26-28 – நமது சிந்தை பயனடைகிறது
பிறரைக் குற்றப்படுத்தாதபடி தேவன் நமது சிந்தையை மாற்றியமைக்கிறார். "யூதரானாலும், கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் அனைவரும் சுதந்திரவாளிகளே......" கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்றாய் இருக்கிறோம். எந்தவிதமான வேறுபாடும் இருக்கத் தேவையில்லை. தோல் நிறம், மொழி, ஜாதி வேறுபாட்டின் அடிப்படையில் வெறுப்பு, வன்முறை, பேதம் தோன்றாததால், அதிக சந்தோஷம் கிடைக்கிறது.

B. கலாத்தியர்  3:29 – நமது உடைமை பயனடைகிறது
நாம் ஆபிரகாமின் உண்மையான வாரிசாக இருப்பதால், நமது கற்பனைக்கு எட்டாத சுதந்திரத்தை வழங்கியுள்ளார். நாம் மிக மிக செல்வந்தர்களாகியிருக்கிறோம்! உலக பிரகாரமாக அல்ல, வேறு விதமான செல்வந்தர்கள் ஆவோம். தேவன் ஆபிரகாமுக்கு வழங்கிய ஆசீர்வாதம் மிக அறுமையானதும் புரிந்து கொள்ளக்கூடாததுமானது. நாம் மாபெரும் செல்வத்துக்கு சுதந்திரவாளியாக இருக்கிறோம். மிகப் பெரிய ஈவைத் தேவன் வழங்கியிருப்பதால் இது மிகப் பெரிய சந்தோஷமான காரியமாகும்.

C. கலாத்தியர்  4:6 – அளவை ரீதியாக நாம் பயனடைகிறோம்.
தேவன் தமது அற்புதமான பிரசன்னத்தால், புதிய உறவின் அளவையை அருளியுள்ளார். நமது தேவனை, ‘அப்பா, பிதாவே’, என்று அழைப்பது எவ்வளவு பெரிய காரியம்! இது அற்புதத்திலும் அற்புதம். நான் எந்த அளவுக்கு தேவனை நெறுங்கியிருக்கிறேனோ, அந்த அளவுக்கு நீங்களும் மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். ஏப்படி? நான் தேவனுடைய புத்திரன் (புத்திரி)! ஒரு புத்திரனுக்கும் அடிமைக்கும் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்! ஒன்று வீட்டுக்குள் வாசம் செய்யமுடியும், மற்றொன்றால் முடியாது.

இயேசு கிறிஸ்துவினால் கிடைத்த இந்த ஆசீர்வாதங்களைப் பற்றிச் சிந்திப்போம்.


வெளிப்படுத்தலில் உள்ள 7 திருச்சபைகள் (8ல் 1ம் பகுதி)
——————————————————————————–———————————————–
முன்னுரை:
நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து பெந்தேகொஸ்தே நாளிலே சபையை நிறுவினார்.
கலந்துரையாடல் கேள்விகள்:
1. நாம் எப்படிப்பட்ட சபையின் உறுப்பினர்?
2. ஒரு திருச்சபையின் பொதுவான தன்மைகள் யாவை?
வெளிப்படுத்தலில் இயேசுவானவர் குறிப்பிடும் ஏழு விதமான சபைகளைப் பற்றி கற்போம்.

1. மனித ஆசிரியர்:
இந்த விஷேசத்தை எழுதியவர் தம்மை யோவான் என்று அடையாளம் கூறுகிறார். (1:1, 4,9; 22:8) அவர் இயேசுவுக்கு அப்போஸ்தலனாகவும் செபெதேயுவின் குமாரனும் ஆவான் (மத்தேயு 10:2).
இந்த புஸ்தகம் சுவிசேஷத்தை நன்கு கற்றறிந்த யூதன் என்றும், சிறிய ஆசியாவில் உள்ள 7 திருச்சபைகளின் தலைவன் என்றும் வெளிப்படுத்துகிறது.

2. நேரமும் தேதியும்:
கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்படும் ஆரம்ப காலத்தில் இது எழுதப்பட்டது.
நீரோ அரசாட்சியின் பிற்காலம் என்று காலக்கட்டம் காட்டப்படுகிறது. (கிபி 54–68) அல்லது டோமிஷன்* அரசாட்சியின் (கிபி 81–96) பிற்காலம்

3. சம்பவம்:
ரோம அதிகாரிகள் தங்கள் அரசரை ஆராதிக்க கட்டளையிட்டனர். கிறிஸ்தவர்களோ காசியர்* அல்லாமல் கிறிஸ்துவை ஆராதித்ததால், அதிகதிகமான ஒடுக்கப்படுதலை எதிர்நோக்கினர்.
சிமிர்னாவில் உள்ள விசுவாசிகள் வரப்போகும் எதிர்ப்புகளைக் குறித்து எச்சரிக்கப்பட்டனர். (2:10), பிலதெல்பியா சபைக்கு உலகுக்கு வரப்போகிற ஒரு மணிநேர சோதனை குறித்து கூறப்பட்டது. (3:10).
அந்திப்பா ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டான் (2:13) பிறரும் கொல்லப்பட்டனர் (6:9).
கிறிஸ்தவ சாட்சிகளின் நிமித்தம் யோவான் பத்முவுக்கு நாடு கடத்தப்பட்டான் (1:9).
ஆயினும் சபையில் உள்ள சிலர் துஷ்டத்தைச் சமாளிக்க சமரசத்தில் ஈடுபட்டனர். (2:14–15,20), இதனால் ஆவிக்குரிய புற்றி நோயாக மாறாமல் இருக்க சரி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

4. நோக்கம்:
பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட இப்புத்தகம், கிறிஸ்தவர்கள் பேரரசனின் கோரிக்கைகளுக்கு எதிர்த்து நிற்க வலியுறுத்துகிறது. உயிரே பரிபோனாலும் கூட பெருகி வரும் ஒடுக்கப்படுதலுக்கு அடி பணியக்கூடாது.
கிறிஸ்து திரும்ப வரும்போது அவர்களுடைய கொள்கை உண்மையென்று நிரூபிக்கப்படும். துஷ்டர்கள் அழிக்கப்படுவார்கள். தேவ ஜனங்கள் நீடித்த மகிமைக்கு உட்படுத்தப்படுவார்கள்.


5. வெளிப்படுத்தலின் துணைத் தலைப்புகள்:

முன்னுரை (1-3)

எபேசு (வெளிப்படுத்தல் 2:1-7) – முதற்பங்கான் அன்பைப் புரக்கணித்த சபை (2:4).
சமாரியா (வெளிப்படுத்தல் 2:8-11) – ஒடுக்கப்படுதலைச் சந்திக்கும் சபை (2:10).
பெர்காமு (வெளிப்படுத்தல் 2:12-17) – மனந்திரும்ப வேண்டிய சபை (2:16).
தியத்துரா (வெளிப்படுத்தல் 2:18-29) – கள்ள தீர்க்கதரிசிகளைக் கொண்ட சபை (2:20).
சர்தை (வெளிப்படுத்தல் 3:1-6) – நித்திரையில் ஆழ்ந்துள்ள சபை (3:2).
பிலதெல்பியா (வெளிப்படுத்தல் 3:7-13) – பொறுமையோடு சகித்துக் கொண்ட சபை (3:10).
லவோதிக்கேயா (வெளிப்படுத்தல் 3:14-22) – மத்தமான விசுவாசத்தைக் கொண்ட சபை (3:16).

பரலோகமும் ஏழு முத்திரைகளும் (4:1-8:1)
ஏழு எக்காளங்கள் (8:2-11:19)
ஸ்திரியும் நாகமும் (12-14)
ஏழு கிண்ணங்களில் வெஞ்சினம் (15-16)
பாபிலோனின் வீழ்ச்சியும் கிறிஸ்துவின் மறு வருகையும் (17-19)
புதிய வானமும் புதிய பூமியும் (20-22)

முடிவுரை:
இந்தப் பயணத்தைத் தொடங்கும் நாம் இயேசுவின் சத்தத்தை அறிய ஜெபித்துக் கொள்வோம்.


வெளிப்படுத்தலில் உள்ள 7 திருச்சபைகள் (8ல் 1ம் பகுதி)




வெளிப்படுத்தலில் உள்ள 7 திருச்சபைகள் (8ல் 1ம் பகுதி)

முன்னுரை:
நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து பெந்தேகொஸ்தே நாளிலே சபையை நிறுவினார்.
கலந்துரையாடல் கேள்விகள்:
1. நாம் எப்படிப்பட்ட சபையின் உறுப்பினர்?
2. ஒரு திருச்சபையின் பொதுவான தன்மைகள் யாவை?
வெளிப்படுத்தலில் இயேசுவானவர் குறிப்பிடும் ஏழு விதமான சபைகளைப் பற்றி கற்போம்.

1. மனித ஆசிரியர்:
இந்த விஷேசத்தை எழுதியவர் தம்மை யோவான் என்று அடையாளம் கூறுகிறார். (1:1, 4,9; 22:8) அவர் இயேசுவுக்கு அப்போஸ்தலனாகவும் செபெதேயுவின் குமாரனும் ஆவான் (மத்தேயு 10:2).
இந்த புஸ்தகம் சுவிசேஷத்தை நன்கு கற்றறிந்த யூதன் என்றும், சிறிய ஆசியாவில் உள்ள 7 திருச்சபைகளின் தலைவன் என்றும் வெளிப்படுத்துகிறது.

2. நேரமும் தேதியும்:
கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்படும் ஆரம்ப காலத்தில் இது எழுதப்பட்டது.
நீரோ அரசாட்சியின் பிற்காலம் என்று காலக்கட்டம் காட்டப்படுகிறது. (கிபி 54–68) அல்லது டோமிஷன்* அரசாட்சியின் (கிபி 81–96) பிற்காலம்

3. சம்பவம்:
ரோம அதிகாரிகள் தங்கள் அரசரை ஆராதிக்க கட்டளையிட்டனர். கிறிஸ்தவர்களோ காசியர்* அல்லாமல் கிறிஸ்துவை ஆராதித்ததால், அதிகதிகமான ஒடுக்கப்படுதலை எதிர்நோக்கினர்.
சிமிர்னாவில் உள்ள விசுவாசிகள் வரப்போகும் எதிர்ப்புகளைக் குறித்து எச்சரிக்கப்பட்டனர். (2:10), பிலதெல்பியா சபைக்கு உலகுக்கு வரப்போகிற ஒரு மணிநேர சோதனை குறித்து கூறப்பட்டது. (3:10).
அந்திப்பா ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டான் (2:13) பிறரும் கொல்லப்பட்டனர் (6:9).
கிறிஸ்தவ சாட்சிகளின் நிமித்தம் யோவான் பத்முவுக்கு நாடு கடத்தப்பட்டான் (1:9).
ஆயினும் சபையில் உள்ள சிலர் துஷ்டத்தைச் சமாளிக்க சமரசத்தில் ஈடுபட்டனர். (2:14–15,20), இதனால் ஆவிக்குரிய புற்றி நோயாக மாறாமல் இருக்க சரி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

4. நோக்கம்:
பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட இப்புத்தகம், கிறிஸ்தவர்கள் பேரரசனின் கோரிக்கைகளுக்கு எதிர்த்து நிற்க வலியுறுத்துகிறது. உயிரே பரிபோனாலும் கூட பெருகி வரும் ஒடுக்கப்படுதலுக்கு அடி பணியக்கூடாது.
கிறிஸ்து திரும்ப வரும்போது அவர்களுடைய கொள்கை உண்மையென்று நிரூபிக்கப்படும். துஷ்டர்கள் அழிக்கப்படுவார்கள். தேவ ஜனங்கள் நீடித்த மகிமைக்கு உட்படுத்தப்படுவார்கள்.


5. வெளிப்படுத்தலின் துணைத் தலைப்புகள்:

முன்னுரை (1-3)

எபேசு (வெளிப்படுத்தல் 2:1-7) – முதற்பங்கான் அன்பைப் புரக்கணித்த சபை (2:4).
சமாரியா (வெளிப்படுத்தல் 2:8-11) – ஒடுக்கப்படுதலைச் சந்திக்கும் சபை (2:10).
பெர்காமு (வெளிப்படுத்தல் 2:12-17) – மனந்திரும்ப வேண்டிய சபை (2:16).
தியத்துரா (வெளிப்படுத்தல் 2:18-29) – கள்ள தீர்க்கதரிசிகளைக் கொண்ட சபை (2:20).
சர்தை (வெளிப்படுத்தல் 3:1-6) – நித்திரையில் ஆழ்ந்துள்ள சபை (3:2).
பிலதெல்பியா (வெளிப்படுத்தல் 3:7-13) – பொறுமையோடு சகித்துக் கொண்ட சபை (3:10).
லவோதிக்கேயா (வெளிப்படுத்தல் 3:14-22) – மத்தமான விசுவாசத்தைக் கொண்ட சபை (3:16).

பரலோகமும் ஏழு முத்திரைகளும் (4:1-8:1)
ஏழு எக்காளங்கள் (8:2-11:19)
ஸ்திரியும் நாகமும் (12-14)
ஏழு கிண்ணங்களில் வெஞ்சினம் (15-16)
பாபிலோனின் வீழ்ச்சியும் கிறிஸ்துவின் மறு வருகையும் (17-19)
புதிய வானமும் புதிய பூமியும் (20-22)

முடிவுரை:
இந்தப் பயணத்தைத் தொடங்கும் நாம் இயேசுவின் சத்தத்தை அறிய ஜெபித்துக் கொள்வோம்.