Wednesday, October 19, 2016

தேவ வார்த்தையை தியானிப்பதில் ஏற்படும் நன்மை

தேவ வார்த்தையை தியானிப்பதில் ஏற்படும் நன்மையைப் பற்றி எடுத்துக் கூறுவதற்கு சங்கீதத்தின் இன்னொரு பகுதியை எடுத்துக்கூற விரும்புகிறோம். சங்கீதம் 19.7-8ஐ எடுத்துக் கொள்ளுங்கள். சங்கீதக் காரன், தேவ வசனத்தால் கிடைக்கும் எண்ணிலடங்கா நன்மைகைளைப் பட்டியலிட்டுள்ளான். பின்வரும் நன்மைகள் தேவ வசனத்தைத் தியானிப்பதால் கிடைக்கின்றன:
1.             வசனம் 7: ஆத்துமாவைப் புதுப்பிக்கிறது. (உங்கள் உள்ளார்ந்த மனிதம் பெலப்படுத்தப்பட்டு, உங்கள் ஆத்துமா புதுப்பிக்கப்படுகிறது. – நீங்கள் தீர்க்கதரிசனம் கூறத் தொடங்குகிறீர்கள்!)
2.             வசனம் 7b: உங்களை ஞானவானாக மாற்றுகிறது (ஞானம் என்பது, எந்த பிரச்சனைகளையும் எல்லாவிதமான பிரச்சனைகளையும் தீர்க்கவல்லது. நீங்கள் பிரச்சனையைத் தீர்ப்பவராக மாறுகிறீர்கள். – ஞானத்தின் வசனங்கள் உங்களில் செயல்படத் தொடங்குகிறது.
3.             வசனம் 8: உங்கள் உள்ளத்தை மகிழச் செய்கிறது. (நமது உணர்வுகள் சந்தோஷத்தைத் தரும் ஆரோக்கியமான ஔடதமாக மாறுகிறது. – கவலைகளையும் அச்சங்களையும் ஜெயங்கொள்கிறீர்கள். – புத்தாக்கம் மூலம் நீங்கள் ஆராதிப்பதற்கு விடுதலை பெறுகிறீர்கள்)
4.             வசனம் 8b: நமது பார்வையை பிரகாசிக்கச் செய்கிறது. (தெய்வீகப் பார்வையைப் பெற்றவராக நீங்கள் மாறுகிறீர்கள் – சராசரி தீர்மானங்களை மாற்றும் அளவுக்கு வல்லமை மிகுந்தவராக நீங்கள் மாறுகிறீர்கள். – வெளிப்படுத்தலின் வரம் உங்களில் செயல்படுகிறது.)

ஆகவே, நண்பர்களே, தியானம் என்பது வல்லமாயன ஆவிக்குரிய கருவியாகும். இந்த ஒழுக்கத்தைக் கடைபிடித்த இயேசுவின் உண்மைத்துவத்தை நம்மைச் சூழ்ந்துள்ளவர்களிடம் பரப்புவோமாக.


உங்கள் தியானம் சந்தோஷகரமாக அமையட்டும்!

No comments:

Post a Comment