Tuesday, November 8, 2016

பாதுகாப்பான கோட்டை

2 சாமுவேல் 5ம் அதிகாரத்தைச் சார்ந்த்து இது.

1.             பாதுகாப்பான கோட்டை அல்லது மறைந்திருக்கும் இடம்.
நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்பான இடத்தை அடையாளம் காண வேண்டும். – தேவ சமூகத்தில் நிம்மதியாக மறைந்திருப்பதற்கான பாதுகாப்பான இடம். மறைந்திருப்பதற்கு பாதுகாப்பான இடத்தை அடையாளம் காண்பதற்கு 3 முக்கிய காரணங்கள் இருக்கின்றன:
-     நமது ஆவி புதுப்பிக்கப்படுகிறது.
-     பிரச்சனை அல்லது நமது சூழ்நிலையைக் குறித்து தெளிந்த புத்தி உண்டாகும்.
-     தேவ சித்தத்திற்கு ஏற்ப நாம் நாடும் முக்கியத்துவம் மாற்றமடையும்.
இது வெற்றிக்கு முக்கியம்.

2.             மீண்டுவரும் அனுபவம் அல்லது நிலை.
தாவீது, தான் மறைந்திருந்த இடத்தை விட்டு வெளியாகி தேவனின் விசாரனைக்கு வந்தான். தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் வல்லமை வாய்ந்த பிலிஸ்திய போர் வீரர்களை ஜெயங் கொண்டான். தேவன் வெற்றியைத் தேடித் தந்ததாக தாவீது அறிக்கையிடுகிறான். பின்வரும் நிலைமைகளில் வெற்றி தேவை என்று ஜெபித்துக் கொள்ளுங்கள்:
-       ஆகக்கூடாத காரியம் கைகூடவேண்டுமென்று.
-       கற்பனைக்கு எட்டாத காரியமும் நிறைவேறவேண்டுமென்று.

3.             உங்கள் ஜெபம் கேட்கப்பட்டாலும் கூட தொடர்ந்து ஜெபித்துத் தேவனைத் தேடுங்கள். – சில பாதகங்களும் எதிர்ப்புகளும் நிலவினாலும் கூட!
-       தேவன் ஆழமான வெளிப்படுத்தலைத் தந்திருக்கிறார்.
-       தேவன் நமது ஜீவியத்தில் நெருங்கிய பங்காளியானார்.
ஒட்டுமொத்த வெற்றியையும் நாம் கொண்டாடுவோம்.


தேவன் உங்கள் ஜெப ஜீவியத்தை ஆசீர்வதிப்பாராக

Thursday, November 3, 2016

நமது பாவமும் கிருபையும்

தவறான இடத்தில் என் காரை நிறுத்தி வைத்ததற்கு, பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக அலுவலகத்தில் அபராதம் செலுத்தக் காத்திருக்கும் தருவாயில் இதனை எழுதுகிறேன். நூறு ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும்! ஆனால், முகப்பில் உள்ள நபர் 30 ரிங்கிட் மாத்திரமே அபராதப் பணம் வாங்கினார். ஒரு சிறிய கவனக்குறைவுக்கு அத்தொகை பெரிய தண்டனை!

நாம் தேவனுடைய கற்பனைகளை மீறும்போது இதுபோன்றே தண்டனை அனுபவிக்கிறோம். ஆம்! கூடவே கிருபையும் வருகிறது. அந்தக் கிருபைக்குக் கிரயம் தேவையில்லை. ஆனால், நம்மை ஒழுக்கப்படுத்தாத கிருபை அற்பமானது.

நாம் கற்பனைகளை மீறும்போது, உடனடியாக பாவ மன்னிப்பு கேட்கிறோம். கிருபையுள்ள தேவனோ, 1யோவான் 1.9ல் எழுதப்பட்டதுபோல், நம்மிடத்தில் கிருபையாய் இருக்கிறார். ஆனால், பாவத்திற்கான பின் விளைவுகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்!

தேவன் நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக்கவும் கிருபை அருளவும் நமது ஜீவியங்களில் காணப்படும் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்போமாக. பரலோகத்தில் இருக்கும் நமது பிதா நல்லவர்.


தேவனுக்கே ஸ்தோத்திரம்.