3ல் 3வது பகுதி 3 of 3:
‘பெரிய நகரத்தில் யோனா ’
——————————————————————————————————
முன்னுரை:
பகுதி 2ல் தேவன் எப்படி யோனாவைக் காப்பாற்றினார் என்றும் மீனின் வயிற்றில் அவனை எப்படிப் பராமரித்தார் என்றும் பார்த்தோம்.
கடந்த வார பாடத்தின் முக்கிய குறிப்புகள்:
1. கடலிலும் மீனின் வயிற்றிலும் யோனா
2. மீனின் வயிற்றல் யோனாவின் ஜெபம்
3. இரட்சிக்க தேவனின் வாஞ்சை
இந்த 3வது பகுதியில் யோனா தீர்க்கதரிசி ஓர் உலர்ந்த நிலத்தில் கக்கப் பட்டதையும் புதுப்பிக்கப்பட்ட தரிசணத்தையும் காண்போம். (யோனா 1:2, 3:1-2).
1. நினிவேயில் யோனா :
யோனா 3:3-4
யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.
யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.
தேவனின் நியாயத்தீர்ப்பு வரப்போகிறது என்பதும் ஜனங்கள் மனந்திரும்ப வேண்டும் என்பதும் செய்தியாய் இருந்தது.
நினிவே ஜனங்கள் யோனாவின் செய்திக்கு விநோதமான மறுமொழி வழங்கினர். (யோனா 3:5-9).
மனந்திரும்புதல் பின்வரும் நிலைகளில் ஜனங்களில் இருந்து ராஜா வரை பின்வருமாறு வருகிறது:
i) ஜனங்கள் உபவாசித்து தங்களைத் தாழ்த்தினர் (வ. 5).
ii) ராஜா உபவாசித்துத் தன்னைத் தாழ்த்தினான் (வ. 6).
iii) உபவாசித்துத் தேவனைத் தேடுமாறும் துன்மார்க்கத்தில் இருந்து திரும்புமாறும் உத்தரவிட்டான். (vவ. 7-10)
மறுமொழியாக தேவன் நியாயத்தீர்ப்பை நிறுத்தி வைக்கத் தீர்மானித்தார்.
உண்மையான மனந்திரும்புதல் ‘உள்ளேயிருந்து வெளியே வருகிறது’ – விசுவாசமும் கிரியையும் (லூக்கா 3:8)
நல்ல வேலையாக நினிவேயின் மனந்திரும்புதலை இயேசுவானவர் அங்கீகரித்தார்:
மத்தேயு 12:41
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
2. தேவனுக்கு விரோதமாக யோனாவின் விசனம்:
யோனா 4:1, 4
யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு,,,, அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்.
நினிவே மெய்யாக தேவனின் சார்பாக மனந்திரும்பினார்கள். ஆனாலும் யோனா தேவனுக்கு விரோதமாக விசனமடைந்தான். (வ. 1-2).
பின்வரும் தேவனுடைய குணங்களை அவன் உண்மையில் அறிந்து வைத்திருந்தான்:
i) கிருபை அருள்பவர்
ii) இரக்கமுள்ளவர்
iii) அவரின் எரிச்சல் மெதுவாக இரங்கும்
iv) அன்பிலும் மனவுறுக்கத்திலும் தயாளமானவர்
v) பேரிடரை வரச் செய்வதில் தயக்கம் காட்டுபவர்
கப்பலிலும், கடலிலும், மீனின் வயிற்றிலும் தேவன் அவனிடம் எவ்வளவு கிருபையாய் இருந்தார் என்பதை யோனா மறந்து போனான்.
3. யோனாவின் VWW உபதேசம்:
யோனா 4:6
யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.
யோனா தன் உள்ளத்தையும் புரிந்து கொள்ள தேவன் உதவினார்:
i) யோனா தனக்கென்று ஒரு தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொண்டான் (வ. 5)
ii) மறைவிடத்திற்காக தேவன் ஒரு ஆமணக்குச் செடியைக் கட்டளையிட்டார் (வ. 6)
iii) அது நிழல் தருமறு தேவன் அதற்குக் கட்டளையிட்டார் (வ. 7)
iv) சூரியனையும் கிழக்குக் காற்றையும் தேவன் வரப்பண்ணி வெப்பக் காற்றைப் போக்கினார் (வ. 8)
மனந்திரும்ப வேண்டும் என்று ஜெபித்த யோனா தான் சாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டான் (வவ. 3 & 8)
யோனா 4:10-11
அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
சொல்லணி கொண்ட வார்த்தையால் தேவன் மறுமொழி கூறி யோனாவின் புஸ்தகம் பூர்த்தியடைகிறது. (vவ. 10-11)
முடிவுரை:
காணாமற்போனோரை தேட தேவன் கொண்டுள்ள வாஞ்சையான உள்ளைத்தை இன்று நாம் அறிவோமாக