Sunday, September 11, 2016

மலேசியாவில் அச்சுறுத்தல்கள்

பள்ளி தவணை விடுமுறை மீண்டும் தொடங்கி விட்டது. டெங்கி காய்ச்சலைத் தவிர்த்து அயல் நாடுகளில் இருந்து ஷீக்கா என்று நச்சுக் கிருமியும் நம்மை அச்சுருத்திக் கொண்டிருக்கின்றன. நீரிழிவும்  வாய் சம்பந்தப்பட்ட நோயும் நம்மை வளம் வந்து கொண்டிருக்கின்றன என்பதையும் சமீபத்தில் அறிவேன்.

இவை எல்லாம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று உணர்த்துகின்றன. குறிப்பாக பிள்ளைகளையுடையோர் மிகந்த விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.

நமது ஜெபத்தைக் கொண்டு அவர்களை வாதைகளில் இருந்து மீட்க வேண்டும். அதே வேளையில் நற்குடிமகனுக்குரிய பண்புகளும் இருக்க வேண்டும். உதாரணமாக குப்பைக் கூளங்களை முறையாக அப்புறப்படுத்துதல், சுற்றுப்புறத்தைப் பேணுதல் போன்ற காரியங்களைக் கடைபிடிக்க வேண்டும்.
‘தெய்வத்துக்கு அடுத்து தூய்மை நிற்கிறது’ யாரோ சொல்லியிருக்கிறார்கள். உண்மைதான்!

தம் படைப்புகளைப் பேண தேவன் நமக்குப் பொறுப்பளித்திருப்பதால் நமது சுற்றுப்புறச் சூழலைப் பேண உபதேசிப்போமாக.


கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. இந்த விடுமுறை காலத்தில் ஆசீர்வாதமான முறையில் உங்கள் பிள்ளைகளோடு நேரத்தை செலவிடுவீர்களாக. 

No comments:

Post a Comment