Thursday, December 1, 2016

கிறிஸ்மஸ் நம்பிக்கை

நம்பிக்கைக்காப் போராடும் ஜனங்களால் நமது சமூகம் சூழ்ந்துள்ளது.  இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான மாண்புமிகு கைரி ஜமாலுடின், மலேசியா ‘நம்பிக்கை பற்றாக்குறை’ சூழ்நிலையை எதிர்நோக்குகிறது என்று கூறியிருக்கிறார்.

இந்த அவநம்பிக்கையின் இயற்கை நீட்டிப்பு ஆன்மீக விஷயங்களை நோக்கி, அதை வெளிப்படுத்த வேண்டும். எனவே, நாம் தேவனிலும் அவருடைய வாக்குத்தத்தத்திலும் நாம் சார்ந்திருப்பதற்கு சிரமப்படச் செய்கிறது. உண்மையில் இந்த அவநம்பிக்கை நம்மைத் தோல்வியாளர்களாக்கச் செய்கிறது. இது சோகம் நிறைந்த காரியமாகும்.

இந்த கிறிஸ்மஸ் காலத்திலாவது நாம் உணர்வுடன் தேவனை விசுவாசிக்கக்கூடியவர்களாக  வளர்வோமாக. தேவனை நாம் நிச்சயம் நம்ப முடியும். இந்த உண்மையை வேதாகமம் முழுவதும் உணர்த்துகிறது. இவ்விதமாய் நமது ஜீவியத்தில் தேவனின் நிதர்சணத்தை வெளிப்படுத்த முடியும். அவருடைய வாக்குத்தத்தத்தில் நாம் களிகூறலாம். இது நற்செய்தியைச் சுமந்து செல்லக்கூடியவர்களாக உயர்த்துகிறது.

கிறிஸ்மஸ் கதையையும் இவ்வுலகத்துக்குத் தேவனுடைய அன்பையும் பகிர்ந்து கொள்ளும்போது, இந்த சமுதாயத்திற்கு சுகத்தைக் கொண்டு வருவதில் அவருக்குப் பங்காளியாகிறோம். அதுதான் உண்மையான கிறிஸ்மஸ் உணர்வு.


உங்கள் கிறிஸ்மஸ் ஆயத்தங்கள் சந்தோஷத்தையும் இயேசு கிறிஸ்துவின் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். 

No comments:

Post a Comment