Monday, December 12, 2016

ராஜரீக ஆசாரியக்கூட்டம்

முன்னுரை:

 தாய்லாந்தில் பூமிபால் அடுல்யதெஜ் 70 ஆண்டுகள் 126 நாள் என்ற கணக்கில் நீண்ட காலம் ஆட்சி ஆட்சி செய்த மன்னர் ஆவார்.
 ஆனாலும், அவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய புதல்வரான மஹா வஜிராலோக்கோர்ன் அரியணை அமர்ந்தார்
 தேவன் நம்மைக் கையாண்ட விதத்தை அறியும் போது எப்படிப்பட்ட மாற்றம் உண்டாகிறது.

1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

1. லேவிய ஆசாரியக்கூட்டம்:
 தொடர்ந்து செல்வதற்கு முன்பு, பழைய ஏற்பாட்டில் லேவிய ஆசாரியக்கூட்டத்தைப் பற்றி ஆராய்வோம்.

யாத்திராகமம் 19:5-6
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.

 இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரால் ராஜரீக ஆசாரியக்கூட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 பின்வரும் தேவைகளைப் பூர்த்திசெய்ததன் வழி அவர்கள் கர்த்தரின் அழைப்புக்குச் செவிசாய்த்தனர்:
(i) கர்த்தரின் குரலுக்குக் கீழ்ப்படுதல்
(ii) அவருடைய கற்பனைக்குக் கீழ்ப்படிதல்

 ஆயினும் லேவியர்கனை இந்த அழைப்புக்குச் செவிசாய்க்க கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதைக் காண்கிறோம்.

எண்ணாகமம் 8:14-18
இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.
பின்பு லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,

 ஆனால், ஏன் இஸ்ரவேல் புத்திரர்களில் முதற்பேறுவிற்குப் பதில் லேவியர் தெரிந்து கொள்ளப்பட்டனர்?

யாத்திராகமம் 32:26-28
 பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.
 லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.

2. புதிய ராஜரீக ஆசாரியக்கூட்டம்:

வெளிப்படுத்தல் 1:5-6
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

 பேதுரு கிறிஸ்தவர்களை ராஜரீக ஆசாரியக்கூட்டமாக முகமண் கூறுகிறார்.

1 பேதுரு 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

 அவர் அவர்களை கட்டப்பட்டு வருகிற மாளிகையாக அடையாளப்படுத்துகிறார்
2.1 கிறிஸ்து நமது பிரதான ஆசாரியராய் இருக்கிறார்
எபிரேயர் 4:14-16 (எபிரேயர் 8:1-2யும் வாசிக்கவும்)
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

2.2 ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துதல்
1 பேதுரு 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
 ஆவிக்குரிய பலிகளைச் செலுத்த நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 12:1)
 இது தேவனுடைய பார்வைக்கு உகந்த பலிகளாக இருக்க வேண்டும்.

வர்ணனை: காயின் மற்றும் ஆபேலின் பலிகள்

எபிரேயர் 11:4
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.

முடிவுரை:
 கர்த்தருக்குக் கிறிஸ்துவில் ஆவிக்குரிய பலிகளைச் செலுத்தும் ராஜரீக ஆசாரியக்கூட்டமாய் இருக்கிறோம்.
———————————————————–————————————
சுய மதிப்பீட்டுக்கும் கலந்துரையாடலுக்குமான கேள்வி:
கிறிஸ்துவில் ராஜரீக ஆசாரியக்கூட்டத்தில் உருவனாய் இருப்பது உன்னை எப்படி மாற்றியமைத்துள்ளது?


No comments:

Post a Comment