எபேசியர் 2ம் அதிகாரம்
10ம் வசனத்தில் அப்போஸ்தலர் பவுல் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:
“ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.”
மூன்று காரியங்களைக்
குறிப்பாக நம் வாலிபர் மத்தியில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:
1.
உன் மூலம் தேவனுடைய கனவு
நிதரிசனமாகியுள்ளது – நீ தேவனுடைய திட்டமும் கனவுமாய் இருக்கிறாய். இது மற்ற
படைப்புகளைக் காட்டிலும் முந்தியது.
2.
தேவ சிருஷ்டிப்பில் நீ சிறந்தவன். – ஒவ்வொரு
வாலிபரும் இதை நினைவுகூற வேண்டும்.
3.
உனக்கு ஒரு தெய்வீகப் இலக்கு உண்டு – சாலச்
சிறந்தவனாய் இருந்து சாலச் சிறந்த காரியத்தைச் செய்ய வேண்டியது உன் கடமையாய்
இருக்கிறது. இந்த இலக்கை அடைவதற்குப் பிறவியிலேயே உனக்கு தேவன் அபிஷேகித்து
விட்டார்.
அன்பார்ந்த இளம் வாலிபர்களே,
வாலிபர் தினத்தைக் கொண்டாடும் இவ்வோளையில் இந்தச் சத்தியங்களை நினைவில் நிறுத்திக்
கொள்ளுங்கள். சிறப்பாக வாழுங்கள். இயேசு கிறிஸ்து உனக்காக மாண்டதால் இது சத்தியம்.
கர்த்தர் நம்
அனைவரையும் ஆசீர்வதிப்பாராக
No comments:
Post a Comment