ஸ்தோத்திரம். நமது துதித்தல்
ஆராதனைக்கு வரவேற்கிறோம். இன்று பேராயர் ஹிஷார் சிம்மாங்சொங் நம் மத்தியில் வாசம்
செய்வதோடு அருட்செய்தியையும் வழங்குவதால் பெருமையடைகிறோம். அத்தோடு அவர்களுடைய
ஊழியங்களைப் பற்றியும் நமக்கு விளக்கம் தருவார். ஆராதனை முடிந்தவுடன் சிறு
கலந்துரையாடலுக்காக சந்திப்பு அறையில் கூடுவோம். நீங்களும் இணைந்து கொள்ள
அழைக்கப்படுகிறீர்கள்.
சங்கீதம் 138:8 பலருக்கும் ஓர்
அற்புதமான வசனம்:
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது;
உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.
படிநிலை 1: ஒவ்வொரு தனிப்பட்ட
மனுஷனுக்கும் தேவன் ஒரு திட்டத்தைக் கொண்டிருக்கிறார். உங்களுக்கான அந்த தேவத்
திட்டம் மிகவும் பிரத்தியேகமானது. அவர் உங்கள் ஜீவியத்தின் நோக்கத்தை
நிறைவேற்றுவது உறுதி: உங்கள் ஜீவியத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
படிநிலை 2: தேவ வாக்குத்தத்தங்களை
நிறைவேற்ற அவரை நம்பலாம்.
விளைவு: தேவனை ஸ்தோத்தரிப்பதோடு
அவரைத் தொடர்ந்து விசுவாசிக்கிறோம்.
படிநிலை 3: தேவ அன்பின் குணாதிசயம்
– அது தற்காலிகமானது அல்ல. அது என்றென்றும் நிலைத்திருக்கும்.
விளைவு: தேவன் உங்களை எப்போதும்
நேசிக்கிறார். உன்னுடைய எந்த காரியமும் அவருடைய நிலையான அன்பை மாற்றவியலாது.
படிநிலை 4: நமக்குத் தேவையான
காரியத்திற்காக பிரார்த்தனை செய்யவோ ஜெபிக்கவோ எப்போதும் ஓரிடம் உண்டு. நாம் தேவ
கரங்களின் கிரியையாய் இருக்கிறோம்.
விளைவு: தமக்குச் சொந்தமான உங்களை
அவர் கைவிட்டு விடுவார் என்ற கவலை கொண்டிருக்கத் தேவையில்லை!
மகிழ்ந்து பெருமையோடு தேவனை ஆராதனை
செய். உன் கட்டுப்பாட்டிலும் உனக்கு அன்பானவர்களின் கட்டுப்பாட்டிலும் அவர்
செயல்படுகிறார். அவர் ஆராதிக்கத் தகுந்தவர்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
No comments:
Post a Comment