Sunday, May 29, 2016

எதிர்காலத்தைக் குறித்து கவலை வேண்டாம்!

கடந்த வாரம் வாலிபர்கள் சந்தோஷமான நிகழ்ச்சியை நடத்தினர். செல்வம் சம்பந்தப்பட்ட விஷயம் அது. குறிப்பாக வாலிபன் தன் செல்வத்தைத் திட்டமிட்டு அதன் மூலம் சிறந்த வாரிசுகளைப் பெற முடியமா என்று பார்த்தோம். உள்ளான அர்த்தம் நிறைந்த உபதேசத்தை வழங்கிய திரு. பாண்டியனுக்கு நன்றிகள்!

எதிர்காலத்தைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படாத வாலிபர் தலைமுறையை உருவாக்குவோம். உண்மையில் வாலிபர்களும் கொஞ்ச காலம்தான் வாழ்கிறார்கள். அதனால் இந்த உபதேசம் அர்த்தமற்றுக்கூட போகக்கூடும். அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட வாலிபர்கள் யாவரும் இந்த உபதேசத்தை மிகவும் பயனுள்ளதாக எடுத்தக் கொள்ள வேண்டும் என்று ஜெபிக்கிறேன். இயேசுவானவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் நிதி நிர்வாகம் பற்றி தம் சீஷர்களுக்கு உபதேசித்தார். செல்வத்தைப் பற்றியும் அது குறித்து விவேகமாக நடந்து கொள்வது பற்றியும் அவர் உபதேசித்தார்.

இந்த உபதேசம் வாலிபர்களுக்கு மட்டும் அல்ல. கடவுளின் பிள்ளைகளாகிய நாமும் நிதி நிர்வாகம் குறித்து அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

தேவன் நாம் ஒவ்வொருவருக்கும் எதிர்கால ஜீவியம் நிலைத் தன்மை வாய்ந்தாகத் திகழ ஞானத்தை அருளுவாராக

No comments:

Post a Comment