Thursday, August 18, 2016

முறையான ஜெபம் எது?





முன்னுரை

1. மனதின் வரைபடம்
ஜெபம் ஒரு விசேஷமான சலுகை (1-4)

முறையான ஜெபம் எது? எப்படி ஜெபிப்பது (5-9)
- ஜெபத்தில் தவிர்க்க வேண்டிய இடற்குழிகள் - மாய்மாலமான ஜெபம் (5)
- தேவனை மகிழ்;விக்கும் ஜெபம்
- அந்தரங்கத்தில் ஜெபித்தல் (6, 7)
- உளராமல் தெளிவுடன் ஜெபித்தல் (8, 9)
ஜெபத்தில் அடங்கியுள்ளது (10-13)
- கர்த்தருடைய ஜெபம் (10)
- ஜெபத்தில் முதலிடம் (அல்லது முதன்மை) (11, 12)
- ஒருவருடைய ஜெபத்திற்கான விஷயங்களில் மாற்றம் செய்யத் தீர்மானம் (13)

2. நோக்கங்கள்
- ஜெபம், தேவனுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள் விசேஷமான சலுகை என்பதை உணர்ந்து கொள்வதற்கு
- ஜெபத்தில் ஒருவர் எளிதாக விழுந்து விடக் கூடிய ஆபத்தான இடற்குழிகள்.
- ஜெபத்தில் முதலிடம் கொடுக்கப்பட வேண்டியவற்றை முன் வைத்தல்
- தங்களுடைய ஜெப ஜீவியத்தின் மையமாகக் கொண்டதில் தேவையான திருத்தங்கள் செய்வதற்கு
3. துதி
4. ஆரம்ப ஜெபம்
- தேசத்திற்க்hக
- உலக முழுவதிலுமுள்ள ஊழியங்களுக்காக, உங்கள் தேசத்திலுள்ள திருச்சபைகளுக்காக, உங்களுடைய குறிப்பிட்ட சபைக்காக ஜெபிக்கவும்
- உங்கள் சபையின் குருவானவர்களுக்காக
- பயிற்சி பெறுவோருக்காக
- சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளுக்காக.
5. வீட்டுப் பாடப் பயிற்சியை சரிபார்த்தல்
வீட்டுப்பாடப் பயிற்சியின் ஒவ்வொரு விஷயங்களையும் சரிபார்க்க ஒதுக்கப்படும் நேரமும், முறையும் ஒவ்வொரு தலைவரின் அனுமானத்தின்படி செய்யப்படலாம்.

1) தியான நேரம்
முயைhன ஜெபம் எது?
மத்தேயு 20:17-28

2) மனப்பாட வசனங்கள்
3) நீயோ ஜெபம் பண்ணும் போது, உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன்  பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். மத்தேயு 6:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரர்ததோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும். பிலிப்பியர் 4:6-7


3) அன்றாடக வாழ்க்கை வீட்டுப்பாடப் பயிற்சி

4) வாசிக்கும்படியாகக் கொடுக்கப்பட்ட பகுதி


6. முன்னுரை
தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் அவருடைய கிருபாசனத்தண்டை சேரக்கூடிய ஒரு சீரான ஜெப ஜீவியத்தைக் காட்டிலும் வேறே முக்கியத்துவம் வாய்ந்தது எதுவுமில்லை. ஜெபம் என்பது ஆத்துமாவுக்காக ‘சுவாசித்தல்’ என்று ஒருவர் கூறினார். இது ஜெபத்தின் முக்கியத்துவத்தை உளமுருக உணர்த்திக் கூறுகிறது. நாம் சுவாசிக்காமல் எப்படி ஜீவிக்க முடியாதோ, அது போல், ஜெபம் இல்லாமல் நமது ஆன்மீக வாழ்க்கையும் தொடர்ந்து நிலை நிறுத்த முடியாது. பின்வரும் வார்த்தைகளில் ‘கார்டன்’ என்பவர் நமது இருதயத்தில் நன்கு பதியத்தக்கதான புத்திமதி சொல்வதாவது: ‘இன்றைய உலகிலுள்ள மாமனிதர்கள் யாவரும் ஜெபிக்கிற மக்களாகவே இருக்கின்றனர். ஜெபத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள் அல்லது ஜெபத்தில் நம்பிக்கை வைக்கிறோம் என்று சொல்லுகிறவர்கள் அல்லது ஜெபத்தைப் பற்றி விளக்கம் கூறுகிறவர்கள், இவர்களை நான் குறிப்பிடவில்லை. ஆனால், ஜெபிக்கும்படி நேரம் எடுத்துக் கொள்ளும் மக்களையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். இவர்களுக்கும் நேரம் இல்லை. அந்த நேரம் வேறு எதிலிருந்தாவது எடுக்கப்பட வேண்டும். அந்த ‘வேறு எதிலிருந்து என்பது முக்கியம். அது ஜெபத்தைக் காட்டிலும் கூட முக்கியமானதாக இருக்கலாம். இருப்பினும், வாழ்க்கையில் உள்ள மற்ற செய்லதிட்டங்களைத் தொகுத்து, ஜெபத்தோடே அல்லது ஜெபத்திற்குப் பிறகோ அவற்றை செய்;து, இவ்வாறு ஜெபத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்களும் உள்ளனர்’ என்று கூறுகிறார்.


7. முன்னுரையின் சுருக்கம்
- ஜெபம் முக்கியமானதாக இருப்பதினால், அது சில நேரங்களி;ல், ’ஆத்துமாவுக்காக சுவாசித்தல் என்று குறிப்பிடப் படுகிறது.
- மிகச் சிறந்த கிறிஸ்தவர்கள், ஜெபிக்கும் மக்களாக இருக்கின்றனர்.
 ஜெபத்தைக் காட்டிலும் அதிக முக்கியமானதும் உடனடித் தேவையானதும் (மிக அவசரமானதும்) வேறு எதுவுமில்லை.

8. அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்)
அளவில்லாத நேரமும், உதவியாளர்களும், பண உதவியும் உனக்குக் கொடுக்கப்பட்டால் அவற்றைக் கொண்டு நீ என்ன சாதிக்க விரும்புவாய்?
- இந்தக் கேள்வி, பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரின் தரிசனம் (தூர நோக்கு) குறித்து சற்றே அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கலாம். சிலர் எதிர்பாராத விடைகள் கூறலாம். பயிற்சி பெறுவோரில் சிலர் இந்தக் கேள்வி சிறிது கடினமாக இருப்பதாக உணரலாம். தலைவர்கள் தங்கள் உள்ளத்தி;ல் நிதானத்துடன், அமைதியாகப் பயிற்சி பெறுவோரை வழி நடத்த வேண்டும். ஒருவருடைய வாழ்வில் கொண்டுள்ள மிகப் பெரிய விருப்பம், எதுவாக இருந்தாலும், அது இயல்பாகவே அவருடைய ஜெபத்திலுள்ள மிகப் பெரிய விருப்பத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். பயிற்சி பெறுவோரின் விடைகளை முன்னுரையுடன் இயல்பாக இணைக்க முயற்சி செய்ய வேண்டும்.

9. நுழைவு கேள்வி.
ஒரு சரியான (முறையான) ஜெபம் எவற்றை அடக்கியுள்ளதாக இருக்கும் என்று நீ எண்ணுகிறாய்?
- ஜெபம் சரியானதாக இருப்பதற்கு தேவனை சரியானபடி அறிய வேண்டியது அவசியம். ஏனென்றால், நாம் ஜெபிப்பது தேவனிடம். நாம் அனைவரும் சேர்ந்து முதலாவது கேள்வியைப் பார்பப்போம்.

மையப் பகுதி

(குறிப்பு)
கேள்விகள் 1- 3 ஜெபத்தின் அவசியம் பற்றினதாக இருக்கிறது. ஜெபம் ஒரு விசேஷமான சலுகை என்பதை விசுவாசிகள் உணர்ந்திருப்பது குறித்து 4வது கேள்வி பேசுகிறது. எனினும் இந்தப் பிரிவின் மையம் 4-வது கேள்வியாக இருக்கிறது. கேள்விகள் 1-3 அல்ல. பயிற்சி பெறுவோரை வழி நடத்தும்போது, தலைவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.


(ஜெபம் ஒரு விசேஷமான சலுகை)

1. எபிரேயர் 4:14-16 - வசனங்களைக் குறைந்த பட்சம் 5 தடவைகளாவது வாசி. 16வது வசனத்தை மனப்பாடம் செய். இந்தப் பகுதியை சுருக்கமாக எழுது.

- பகுதியின் சுருக்கம்
வசனம் 14 - நமக்கு ஒரு மகா பிரதான ஆசாரியர் இருக்கிறார்.
வசனம் 15 - மகா பிரதான ஆசாரியர் நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கிறார்.
வசனம் 16 - மகா பிரதான ஆசாரியரைக் குறித்து நமது மனப்பான்மை.

2. இயேசு நம்முடைய ‘மகா பிரதான ஆசாரியர், தற்சமயம் அவர் எங்கே வாசம் பண்ணுகிறார் (வச. 16)
- தேவன் கிருபாசனத்தில் அமர்ந்து கொண்டிருப்பதால் இயேசு கிருபாசனத்தைண்டை, கிருபாசனத்தின் வலது பாரிசத்தில் இருக்கிறார் என்று நாம் சொல்லலாம். எபிரெயர் 8:1
- நாம் கிருபாசனத்தண்டையில் கிட்டிச் சேரும் போது, ஜெபத்தின் மூலமாக நாம் என்னென்ன ஆசீர்வாதங்களையும் கிருபையையும் பெற்றுக் கொள்ள முடியும்?
- நாம் இரண்டு விதமான ஆசீர்வாதங்கள் அல்லது கிருபையைப் பெற்றுக் கொள்ளுகிறோம். ஒன்று, நாம் ஜெபித்த பின் பெற்றுக் கொள்ளும் ஆசீர்வாதங்கள், மற்றது ஜெபிக்கும் போது நாம் அனுபவித்து உணரும் தேவனுடைய கிருபை. முந்தினது பதிலளிக்கப்பட்ட ஜெபங்களுடன் தொடர்புள்ளது. பிந்தினது, நாம் ஜெபிக்கும் போது நமது மனப்பான்மைகள், எண்ணங்கள் அல்லது குணாதிசயத்தில் நாம் அனுபவித்தது உணரும் மாற்றங்களுடன் தொடர்புள்ளது.


3. வசனம் 16ல் உள்ள ‘ஆதலால் என்ற வார்த்தையைக் கவனிப்போம். ஜெபத்தில் நாம் இயேசுவையே பற்றிப் பிடித்துக் கொள்வதற்கு இது நமக்கு நல்ல அடித்தளமாக இருக்கிறது. வசனம் 15, 16ஐ இணைத்து ஆய்வு செய்து, ஏன் இவ்வாறு அமைந்துள்ளது என்று விளக்கிக் கூறு.

- இது நமது மகா பிரதான ஆசாரியராக இயேசுவினிமித்தமே.
- அவர் பிரதான ஆசாரியர் மட்டுமல்ல, மகா பிரதான ஆசாரியர்.
- அவர் நமது ஜெப விண்ணப்பங்களை அறிந்திருப்பது மட்டுமல்ல, நமது பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கிறார்.
- எல்லா விதத்திலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டும் அவர் அதை மேற்கொண்டு பாவமில்லாதவராக இருக்கிறார். இப்படிப்பட்ட இயேசு நம்மை ஏற்றுக் கொண்டு அணைத்துக் கொண்டு எப்போதும் நமக்காக கிருபாசனத்தண்டையில் பேசிக் கொண்டு இருக்கும் போது நாம் எப்படி ஜெபிப்பதற்குத் தயங்கலாம்?
4. நமது ‘மகா பிரதான ஆசாரியர்’ அண்டையில் செல்வதற்கு ஜெபம் உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய சிலாக்கியம். எப்போதாவது நீ இந்த அரிய இலக்கியத்தை அசட்டை பண்ணி, உதாசீனம் செய்து, ஏனோ தானோவென்று ஒதுக்கி, அதினிமித்தமாக அறிவீனனாகவும், வறியவனாகவும் இருந்ததுண்டா?


என் ஜெபம் ஒரு விசேஷமான சலுகையாக இருக்கிறது?
- ராஜகுமாரர்கள் எப்படி எப்போதும் ராஜாவின் சமூகத்திற்கு முன் செல்ல முடியுமோ, அது போல் நாமும், இயேசு கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளாக எந்த சமயத்திலும் தைரியமாகக் கிருபாசனத்தைண்டை கிட்டிச் சேர முடியும்.
ஜெபம் ஒரு விசேஷமான சலுகை என்ற உண்மை எப்படி நமக்கு உதவுகிறது?
- கடமைக்காகவோ அல்லது கட்டாயத்திற்காகவோ ஜெபிக்காமல், நாம் ஜெபத்தைக் குறித்து பெருமிதம் கொள்ளவும், சந்தோஷத்துடன் ஜெபிக்கவும் இந்த உண்மை நமக்கு உதவி செய்கிறது.

(ஜெபத்தில் தவிர்க்க வேண்டிய இடற்குழிகள்)

6. ஜெபிக்கும் போது நாம் பல இடற்குpழகளைத் தவிர்க்க வேண்டும். முதலாவதாகப் பரிசேயனின் ஜெபத்தை உதாரணமாகக் கொண்டு இயேசு என்ன எச்சரிப்புக் கொடுத்தார்? (மத்தேயு 6.5)
- மாயக்காரரைப் போல் மனுஷர் காணும் படியாக ஜெபம் பண்ண வேண்டாம். வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், ‘நான் ஜெபிக்கும் மனிதன் என்று சொல்லித் தற்பெருமையடித்துக் கொள்ளக் கூடாது.
மாயக்காரன் என்பதின் பொருள் என்ன?
- இது முகமூடி அணிந்து கொண்டு நடிப்பது என்று பொருள்படும். வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், இது, மாயக்காரர் உள்ளிருப்பதை ஒளித்து வைத்து, வெளிப்புறத்தில் தாங்கள் காண்பிக்க விரும்புவதைத் திட்டம் செய்து கொள்ளுகிறார்கள்.
- நம்மைப் பார்ப்பதற்கு யாரும் இல்லாத நேரத்திலும் கூட நாம் மாய்மாலக்காரராகப் போலி நடிப்பைக் காண்பிக்க முடியும் என்பதும் கவனத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. நம்மைச் சுற்றி யாரும் இல்லாவிட்டாலும் கூட நாம் தற்பெருமையை நோக்கமாகக் கொண்டு ஜெபிப்போமானால், நாம் அவ்வாறு ஜெபிக்கிறோம் என்ற உண்மையினால், நாம் நமக்குள்ளாகவே ஜெபித்தாலும், மாய்மாலக்காரர் ஆகிறோம்.
நமது ஆன்மிக பயணத்தில் ஜெபம் தெய்வ பக்தியுள்ள காரியங்களுள் ஒன்றாக இருக்கிறது.
இருந்த போதிலும் ஜெபம் கூட மாய்மாலத்தினால் கறைப்படுத்தப்படக் கூடும் என்பதை இயேசு குறிப்பிடுகிறார். இதைக் குறித்து நீ எப்படி உணருகிறாய்?
மிகவும் பரிசுத்தமான செயல்கூட மிகவும் பரிசுத்தமற்ற செயலாகி விடலாம். இது நாம் எவ்வளவு எளிதாக மாய்மாலத்திற்குள் விழுந்து விடலாம் என்பதையும், தேவனுக்கு முன்பாகப் பரிசுத்தமும் உண்மையுமாக இருக்க வேண்டியதை நாம் எவ்வளவு சீக்கிரமாக அசுத்தப்படுத்தக் கூடும் என்பதையும் காண்பிக்கிறது.

எந்ததெந்த குறிப்பிட்ட விதங்களில் பரிசேயர், மாயக்காரராக  இருந்தார்கள்?
- பரிசேயர் ஒரு நாளில் 3 தடவை முன்குறி;க்கப்பட்ட அதே நேரத்தில் ஜெபிப்பது வழக்கம். ஜெபத்துக்காகக் குறிக்கப்பட்டுள்ள ;ஒரு நேரத்தில் - அவர்கள் ரஸ்தாவில் நடந்து கொண்டிருந்தாலும் அல்லது சந்தையில் பொருட்களைவ வாங்கி விற்றுக் கொண்டிருந்தாலும், பரிசேயர்  தாங்கள் செய்து கொண்டிருப்பது எதுவானாலும் அதை நிறுத்தி விட்டு, மக்கள் காணத்தக்க விதமாக ஜெபி;த்தார்ள். இவ்விதமாகப் பரிசேயர; தெய்வ பக்தியுள்ள மனிராக அறியப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்தார்கள். எனினும், கடைசியில் மக்களிடமிருந்து வந்த இந்தப் பாராட்டு, மக்களால் காணப்படும் படியாகவும் தற்பெருமைக்காகவும் ஜெபிக்கும் மாய்மாலகாராக இவர்களை ஆக்கிவிட்டது.

(தேவனை மகிழ்விக்கும் ஜெபம்)

7. எப்படிப்பட்ட ஜெபத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்? (மத்தேயு 6:6-7)
-அந்தரங்கத்தில் ஜெபித்தல்: மனதில் தேவனை மட்டுமே நினைத்து ஜெபித்தல்.
- வீணான வார்த்தைகளை அலப்பாமல் ஜெபித்தல்: அதாவது உள்ளத்திலிருந்து உண்மையாக வராத வார்த்தைகளை அக்கறையின்றி சொல்லாமல், செய்கிற் ஜெபம்:

(குறிப்பு)
7வது கேள்வியைப் பின்வரும் இரண்டு துணைக் கேள்விகளாகப் பிரிப்பது நல்லது.
உன்னுடைய அறைவீடு என்பது எதைக் குறிக்கிறது, உன்னுடைய அறை வீடு எங்கே இருக்கிறது? கேள்வியை மேற்கண்டவாறு பிரிப்பது வழி முறையை எளிதாக்க உதவி செய்கிறது.


7. ‘அறை வீடு’ எதைக் குறிப்பிடுகிறது? உன்னுடைய அறை வீட்டை நீ விவரிக்க முடியுமா?

- அறை வீடு என்பது ஒரு உண்மையான அறை என்பது அல்ல. அது, ஒருவர் தேவனோடு ஏகாந்தமாய் தொடர்பு கொள்ளக் கூடிய சூழ்நிலையையே குறிக்கறது. தேவனை மையமாகக் கொண்டு மற்றவர்களால் உங்கள் கவனம் சிதறாமலும் பிறர் இருப்பதைப் பொருட்படுத்தாமலும் ஜெபிக்கக் கூடுமானால், ஒரு மக்கள் கூட்டம் நிறைந்த இடம் கூட உங்களுடைய அறை வீடாகலாம்.
அறை வீட்டில் அந்தரங்க ஜெபத்தின் ஆசீர்வ்hதங்களை நீ அறிந்து அனுபவித்திருக்கிறாயா?
- பயிற்சி பெறுவோர் அறை வீட்டில் அந்தரங்கமாக தேவனை நோக்கி ஜெபிப்பதின் மகிழ்ச்சையை அறிந்து கொள்ள வேண்டுமென்று பயிற்சிபெறுவோருடன் சேர்ந்து ஜெபிக்கவும்.

8. அஞ்ஞானிகளைப்; போல வீண் வார்த்தைகளை அலப்புவது’ அல்லது ‘அதிக வசனிப்பு இவைகளின் அர்த்தம் என்ன என்று நீ நினைக்கிறாய்?
இது அர்த்தமற்ற வெறும் வார்த்தைகளை அக்கறையின்றி யோசிக்காமல் கூறுவது.


ஏதோ ஒன்றுக்காகத் திரும்பத் திரும்ப ஜெபிப்பது வீண் வார்த்தைகளை அலப்புவதாகுமா?
- ஏதோ ஒன்றுக்காகத் திரும்பத் திரும்ப ஜெபிப்பது, ஜெபிப்பதில் வீண் வார்த்தைகளை அலப்புவதல்ல. உதாரணமாக கெத்செமனே தோட்டத்தில் இயேசு மறுமபடியும் மறுபடியும் ஜெபம் பண்ணினார். பிரச்சனை என்னவென்றால், ஒருவர் ஜெபம் செய்வதை தேவனுடன் தனிப்பட்ட ஐக்கியம் கொள்வதென்று கருதாமல், ஏதோ மந்திரம் ஓதுவது போல் ஜெபிக்கும் போதுதான் பிரச்சனை ஏற்படுகிறது.
ஒரு நீண்ட ஜெபம் வீணான வார்த்தைகளை அலப்புகிற ஜெபமா?
- அதிக நீளமான ஜெபங்கள் எப்பொழுதுமே வீண் வார்த்தைகளை அலப்புகிற ஜெபமாக இருக்கத் தேவையில்லை. உதாரணமாக வனாந்திரத்தில் 40 நாள் உபவாசத்தின்போது இயேசுவின் ஜெபங்கள் பெரும்பாலும் நிச்சயமாக நீண்ட ஜெபங்களாகவே இருந்திருக்கும். ஆனால், அவை வீண் வார்த்தைகளை அலம்பபுகிற ஜெபமாக இல்லை. ஆனால் ஒருவர், தாம் செய்யும் நீண்ட ஜெபம், தாம் விரும்புவதைத் தேவன் செய்யும்படி அவரைத் தூண்டலாம் என்ற எண்ணத்துடன் செய்யும் போது அந்த நீண்ட ஜெபம் வீண் வார்த்தைகளால் அலப்பும் ஜெபமாகி விடும்.

(குறிப்பு)
முன்பு பார்த்தது போல், வீணான வார்த்தைகளை அலப்பி, தெளிவின்றி செய்யப்படும் ஜெபத்தைக் குறித்து நீண்ட விவாதம் அல்லது தர்க்கம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடாமல் இருக்கும்படி கவனமாக இருக்க வேண்டும். அன்று செய்யப்பட்ட அலப்புகிற ஜெபம் முக்கியம் அல்ல. ஆனால் இன்று தெளிவின்றி வீணான வார்த்தைகளை அலப்புகிற ஜெபம் என்பது என்ன என்பதுதான் முக்கியம். இது போன்ற எந்தெந்த வகையான ஜெபத்தை நாம் இன்று தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வண்டும்.

9. உன்னுடைய ஜெபத்தில் நீ எப்போதாவது, சற்றும் சிந்தியாமல் அர்த்தமற்ற வீணான வார்த்தைகளைக் கூறியிருக்கிறாயா?
- வீணான வார்த்தைகள் அல்லது அர்த்தமற்ற வார்த்தைகளை எளிதாகக் கூறி ஜெபி;;;;க்கக்கூடிய ஜெபத்திற்கு உதாரணங்கள் கொடு.
- நாம் அடிக்கடி, ‘தேவனே நாங்கள் உம்மில் அன்பு கூறுகிறோம், ’நாங்கள் பாவிகள்’ என்று ஜெபிக்கிறோம். இது போன்று நாம் தனி ஜெபத்திலும், பொதுவான ஜெபத்திலும் உபயோகிக்கும் மற்றும் பல சொற்றொடர்கள் உள்ளன. இந்த வார்த்தைகளை ஏதோ வழக்கமாகக் கூறுவது போல் உபயோகிக்காதபடி நாம் கவனமாக இருக்க வேண்டு;ம்.
- பிரசங்கி 5:2-இருந்து வீண் வார்த்கைளை அலப்பாமல் ஜெபிப்பது பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?
- நமது இருதயங்களிலிருந்து ஜெபிக்க வேண்டும்.
- நாம் ஜெபிக்கும் போது கூறும் வார்த்தைகளைக் கவனத்துடன தெரிந்தெடுக்க வேண்டும்.

(ஜெபத்தின் பொருளடக்கம்: கர்த்தருடைய ஜெபம்)

10. ஜெபிக்கும் போது நாம் எதைத் தேட வேண்டும் என்பதைக் கர்த்தருடைய ஜெபம் நமக்குக் கற்பிக்கிறது. மத்தேயு 6:9-14 வசனங்களை வாசித்து, ஜெபத்தில் முதன்மையானவைகள் எவை என்பதைக் கவனிப்போம்.

தேவனடைய மகிமைக்காக நாம் முதலில் தேட வேண்டிய மூனறு காரியங்கள்
- தேவனுடைய ராஜ்யத்தைத் தேட வேண்டும்.
- தேவனுடைய நாமம் பரிசுத்தப் படுவதைத் தேட வேண்டும்.
- தேவனுடைய சித்தம் நிறைவேறுவதைத் தேட வேண்டும்.
நமது தேவைகளுக்காக ஜெபிப்பதற்கு முன்பாக தேவனுடைய மகிமைக்கான ஜெபம் வருகிறது என்ற உண்மை எதைத் தெரிவிக்கிறது,
 நமது தேவைகளுக்கான ஜெபத்தைக் காட்டிலும் தேவனுடைய மகிமைக்காக ஜெபிப்பது அதிக பட்சமான முதன்மையுடையதாக இருக்கிறது.
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்பதின் அர்த்தம் என்ன?
தேவனுடைய நாமம் அவருடைய குணாதிசயத்தையும், அவர் யார் என்பதையும் குறிக்கிறது. பரிசுத்தப்படுவதாக’ என்பது பிரித்தலைக் குறிக்கிறது (தனித்திருத்தல்)
எனவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்பது, மனித அறிவுக்கு அப்பாற்பட்டவராக, சிருஷ்டி;க்கப்பட்ட எல்லாவற்றிலுமிருந்து தனித்து நிற்பவராக இருக்கும் தேவனை ஆராதனை செய்யவும், சேவிக்கவும் வாஞ்சிக்கிற ஜெபமாக இருக்கிறது. அவருடைய நாமத்துக்கு உரியதான மகிமை அவருக்குக் கொடுக்கப் படவேண்டுமென்று ஜெபிப்பதாக இருக்கிறது.

(குறிப்பு)
இந்தப் பகுதி ஜெபத்தில் அடங்கியுள்ளவற்றையும், முதன்மையானவைகளையும் பற்றிக் கூறுகிறது. இருந்த போதிலும் இந்தப் பகுதியின் ஜெபத்தில் உள்ள முதன்மையானவைகளைப் பற்றிப் பார்ப்பதே, ஜெபத்தில் அடங்கியுள்ளவற்றைப் பற்றிப் பார்ப்பதைக் காட்டிலும் அதிக முக்கியமானது என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஜெபத்தில் அடங்கியுள்ள ஏழு குறிப்புகளையும் பற்றி கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் ஆராய்ந்து அறிந்து கொள்வ்து கடினமாக இருக்கலாம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

’உம்முடைய ராஜ்யம் வருவதாக’ என்பதின் அர்த்தம் என்ன?
 ராஜ்யம் என்பது ஒரு பிரதேசம் அல்லது அரசாட்சியைக் குறிக்கிறது. அது போலவே, கர்த்தருடைய ஜெபமும் இந்த உலகில் பரவ வேண்டிய தேவனுடைய ஆளுகையின் கீழ் அடங்கும் பிரதேசத்தைக் குறிக்கலாம். அல்லது தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையின் மேலும் செலுத்தப்படும் தேவனுடைய ஆளுகை என்பதைக் குறிக்கலாம். சுருக்கமாகக் கூறுவோமானால் இது தேவனுடைய ஆட்சியும் அரசாங்கமும் வருவதைத் தேடும் ஒரு ஜெபமாக இருக்கிறது.

‘உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதாக’ என்பதின் அர்த்தம் என்ன?
 தேவனுடைய சித்தம் தேவனுடைய திட்டங்களையும் அவர் கிருபையாய் அருளுவதையும் குறிக்கிறது. எனவே, தேவனுடைய சித்தம் நிறைவேறுவதற்காக ஜெபிப்பது, தேவனுடைய சித்தத்திற்கு முரண்பட்டதாக இருக்கும் மனிதனின் சித்தம் நிறைவேற வேண்டாம் என்று ஜெபிப்பதற்கவும் பொருள்படும். இதன்படியாக தேவனுடைய சித்தம் நிறைவேறும்படி ஜெபிப்பது என்பது தேவனுடைய திட்டமும் எண்ணங்களும், தேவனுடைய முறைகளும் வழிகளும், தேவன் குறிக்கும் நேரமும் சகலத்தையும் மேற்கொண்டு வெற்றி பெறும் என்று பொருள்படும். இந்த மூன்று ஜெபங்களும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்கப்படக் கூடாதவை என்பதை மனதில் வைத்துக் கொள். தேவனுடைய ராஜ்யம் எங்கே வருகிறதோ அங்கே அவருடைய நாமம் பரிசுத்தப்படுகிறது. அவருடைய சித்தம் செய்யப்படுகிறது.

அடுத்து, நமது தேவைகளுக்காகத் தேட வேண்டிய நான்கு காரியங்கள்.
- நமது அன்றாடக அப்பத்துக்காக
- மன்னிப்புக்காக
- சோதனைக்குள் பிரவேசிக்கப்படாமலிருக்க
- தீமையிலிருந்து நம்மை; இரட்சி;த்துக் கொள்ள்

நமது தேவைகளுக்கான நான்கு ஜெபங்களில் ஒரு ஜெபம் பொருள் அல்லது சரீரப் பிரகாரமான தேவைகளுக்காகவும், மூன்று ஜெபங்கள் நமது ஆன்மீகத் தேவைகளுக்காகவும் உள்ளன என்பதன் பொருள் என்ன? நமது சரீரப் பிரகாரமான தேவைளுக்கு மேலாக, நமது ஆத்துமப் பிரகாரமான தேவைகளுக்கு நமது ஜெபத்தில் முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை இது சிறப்பித்துக் காட்டுகிறது.

அன்றன்றுள்ள அப்பத்துக்காக நாம் ஜெபிப்பது உணவுக்காக மட்டுமா?
- மூல பாஷையான கிரேக்க மொழியில் அப்பம் என்பது உணவை மட்டும் குறிக்கவில்லை. நமது அன்றாடக அப்பத்துக்காக ஜெபிப்பது, தேவனிடம் நமது அன்றாடகத் தேவைகள் அனைத்தையும் கொடுத்தருளுமாறு வேண்டிக் கொள்வதாகும்.
அன்றாடக அப்பத்துக்காக நாம் ஜெபிப்பதின் காரணம் என்ன?
- அன்றாடம் என்பது ‘ஒரு நாளுக்கு’ தேவைப்படுபவைகள் எல்லாம் என்று பொருள் படும். வேறு வார்த்தைகளில் கூறினால், அந்தந்த நாளுக்கு நமக்குத் தேவையானவற்றை நாம் கேட்க வேண்டும். ஆகையால், இந்த ஜெபம் சுய கட்டொழுங்கு, பேராசையின் மேல் கட்டுப்பாடு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுகிறது. ஏனென்றால், நம்மில் அநேகர் நம்முடைய அன்றாடகத் தேவைகளுக்கு அதிகமாகவே விரும்பிக் கேட்கிறோம்.
’எங்கள் கடன்களை (எங்கள் குற்றங்களை)எங்களுக்கு மன்னியும்’ என்பதன் அர்த்தம் என்ன?
- இந்த ஜெபம், நாம் இயேசுவில் விசுவாசம் வைத்திருந்தாலும் கூட, இன்னமும் தினந்தோறும் பாவம் செய்கிறோம் என்பதை முன்னதாகவே யூகித்து ஏற்றுக் கொள்ளுகிறது. வேறு வார்த்தைகளில் கூறப் போனால், இது நமக்குத் தொடர்ந்து அனுதினமும் தேவனுடைய மன்னிப்பு தேவைப்படுகிறது என்று பொருள்படுகிறது.
’எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாதேயும்’ என்பதின் அர்த்தம் என்ன?
- இது எந்த சோதனையும் இல்லாமலிருக்க வேண்டும் என்றோ அல்லது நாம் ஒரு போதும் சோதிக்கப்படக் கூடாது என்றோ கேட்டுக் கொள்ளும் ஜெபம் அல்ல. இதற்குப் பதிலாக, நமக்குள்ளாக இருக்கும் இயல்பான பாவ சுபாவம் நம்மைச் சோதனைக்குள் பிரவேசிக்கும்படி வழி நடத்தவோ அல்லது சோதனைக்குள் விழச் செய்யவோ கூடாது என்று வேண்டிக் கொள்ளும் ஜெபமாக இருக்கிறது.
’எங்களைத் தீமையினின்று (சாத்தானிடமிருந்து) இரட்சித்துக் கொள்ளும்’ என்பதின் அர்த்தம் என்ன?
 பொல்லாங்கன் என்பது சாத்தானைக் குறிக்கும். இவ்வாறு பொல்லாங்கனிடமிருந்து இரட்சிக்கும்படி ஜெபிப்பது, சாத்தான் நம்மை வசப்படுத்துவதிலிருந்து பாதுகாக்கப்படும்படி ஜெபிப்பதாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் அது ஆவிக்குரிய போராட்டத்தில் நாம் வெற்றி கொள்ளும்படி வேண்டிக் கொள்ளும் ஜெபமாகும்.


11 உன்னுடைய ஜெபத்தில் நீ அதிகப்பட்சமான அக்கறை காண்பிப்பது எதில்? வேறு வார்த்தைகளில் கூறப்போனால், இது நீ ஜெபிக்கும் போது நாடித் தேடுகிற மிக முக்கியமான காரியம் எது?
 கர்த்தருடைய ஜெபத்தில் இரண்டு முதன்மையான காரியங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
முதலாவது, நமது தேவைகளைக் காட்டிலும் அதிகமாக நாம் தேவனுடைய மகிமையைத் தேட வேண்டும். இரண்டாவதாக, நம்முடைய சரீரப் பிரகாரமான தேவைகளுக்கு மேலாக நமது ஆவிக்குரிய பிரகாரமான தேவைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.


12. உன்னுடைய ஜெபத்தில் நீ அக்கறை காட்டும் காரியங்களை இயேசு கற்பித்த காரியங்களுடன் ஒப்பிட்டுப் பார்.
- ஜெபத்தில் நாம் தேடும் நமக்கு முதன்மையானவற்றை கார்த்தருடைய ஜெபத்திலுள்ள முதன்மையானவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நம்மில் அநேகர், தேவனுடைய மகிமைக்கு மேலாக நமது தேவைகளுக்கு முதலிடம் கொடுத்திருக்கிறோம் என்பதை கண்டு கொள்வோம். மேலும், நமக்காக ஜெபிப்பதிலும் கூட நமது ஆன்மீகத் தேவைகளுக்கு மேலாக சரீரதத்திற்கான தேவைகளுக்கு நாம் முதலிடம் கொடுக்கிறோம்.


13. இயேசு கற்பித்த ஜெபத்தைக் கற்றுக் கொண்டபின், இப்போது உன்னுடைய ஜெபத்தைத் திருத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை நீ உணருகிறாயா? அவ்வாறு உணருவாயானால், அவைகளை எவ்விதத்திமாகத் திருத்திக் கொள்வாய்?
 நீண்ட ஜெபம் செய்வது முக்கியமல்ல. ஆனால், சரியான முறையில் நன்றாக ஜெபிப்பதே முக்கியம் என்று ஒரு முறை குறிப்பிடு. வேறு வார்த்தைகளில் கூறப்போனால், ஜெபத்தின் நீளம் முக்கியம் அல்ல. ஆனால், ஜெபத்தில் அடங்கியுள்ள பொருளே முக்கியமாகும்.


முடிவுரை

1. சுருக்கம்
மனதின் வரைபடத்தை உபயோகித்துப் பாடத்தைச் சுருக்கமாக் கூறி பயிற்சி பெறுவோர், தங்கள் இருதயங்களில் ஆவியானவர் தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களைத் திரும்ப ஆராய்ந்து பார்க்கும்படி உதவி செய்ய வேண்டும்.

2. தீர்மானங்களும் செய்லபடுத்துதலும்
பயிற்சி பெறுவோர் பாடத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைத் திரும்பவும் எண்ணிப் பார்த்து, தாங்கள் செய்ய வேண்டிய தீர்மானங்களை எழுதி, அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தும் படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

3. செய்லபடுத்த வேண்டிய காரியங்களைப் பகிர்ந்;து கொள்ளுதல்
பயிற்சி பெறுவோர் தங்கள் தீர்மானங்களையும் அவற்றைச் செய்லபடுத்துவதையும் பற்றி ஒவ்வொருவராகக் கிரமப்படி பகிர்ந்;து கொள்ள வேண்டும்,.

4. முடிவில் துதி செலுத்துதல்.



5. ஜெபம்
- பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய உள்ளங்களில் ஒளியூட்டி, தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களுக்காக நன்றி கூறி தேவனைத் துதிக்க வேண்டும்.
- அவர்கள் இருதயங்களில் தேவன் கண்டித்து உணர்த்தியுள்ள எந்தப் பாவமும் இருக்குமானால் அதை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப வேண்டும்.
- அவர்களுடைய குணமும் வாழ்க்கையிம் முற்றிலும் மாற்றம் அடைவதற்கு செய்யத் தேவைப்படும் தீர்மானங்களுக்காக ஜெபிக்கவும்.
- அவர்களுடைய குணத்தையும் வாழ்க்கையையும் பரிசுத்த ஆவியானவர் மாற்றும்படி ஜெபிக்கவும்.

6. வீட்டுப் பாடப் பயிற்சி
வழிகாட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டுப் பாடப் பயிற்சிகள் யாவும் உதாரணங்கள் மட்டுமே. ஒவ்வொரு தலைவரின் குறிக்கோள்கள் ஒவ்வொரு குழுவின் சூழ்நிலை குழுவிலுள்ள பயிற்சி பெறுவோரின் திறமைக்குத் தக்கதாக வீட்டுப்பாட பயிற்சியின் அளவை நிர்ணயிக்கலாம். ஒவ்வொருவரின் ஆற்றல் திறன் குடும்ப சூழ்நிலை ஆகியவை வேறுபட்டவையாக இருக்கும். விவேகமுள்ள தலைவர் தமது அறிவாற்றலை உபயோகித்து வீட்டுப்பாட பய்றிசியின் அளவைத் திட்டம் பண்ணலாம்.

அ) தினசரி வாழ்க்கையின் வீட்டுப்பாடம் பயிற்சி
தினசரி வாழ்க்கையின் பயிற்சியானது பயிற்சி பெறுவோர் தாங்கள் கற்ற உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த உதவி செய்யும் படி ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு கருவியாகவே இருக்கிறது. தலைவரின் வழிகாட்டியில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டுப்பாட பயிற்சி ஒவ்வொரு பாடத்தின் மையமான கருத்தை மனதில் கொண்டு தெளிவாக முறைப்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு தலைவரும் தமது சிறிய குழுவின் தனிப்பட் சூழ்நிலைகள் தேவைகளுக்குப் பொருத்தமான வேறு வீட்டுப்பாட பயிற்சியையும் கொடுக்கலாம். வீட்டுப்பாட பயிற்சியானது ஒவ்வொது பாடத்தின் கருப்பொருளையும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆ) வாசிக்கும்படி கொடுக்கப்பட்டிடி வேலை.
வாசிப்புக்கான பகுதிகளைக் கொடுக்கும் போது தலைவர்கள் 3 விதிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
வாசிக்கும் படியாகப் பயிற்சி கொடுப்பது வழிகாட்டியிலுள்ள பாடங்களை முழுமையாகக் கற்றுக் கொளவ்தற்குக் கூடுதலான ஒரு கருவி மட்டுமே. வழிகாட்டியிலுள்ள பாடல்களை விவரித்துக் கூறும் போது போதுமான அளவு சொல்லாமல் விட்டுவிடும் தவறைத் தலைவர்கள் செய்யக் கூடாது. முக்கியமாகப் பாடத்திற்குப் பதிலாக வாசிப்புப் பயிற்சியைக் கொடுத்து விடலாமே எனும் ஒரு சோதனையான எண்ணம் பல தலைவர்களுக்கு ஏற்படலாம்.
அதிகப்படியாக வாசிக்கும் பகுதியைக் கொடுப்பது எப்போதும் ஒரு நல்ல யோசனை அல்ல. வாசிக்க வேண்டிய அளவானது பயிற்சி பெறுவோரின் திறமைக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும். அத்துடன் வாராவாரம் செய்வதற்காகக் கொடுக்கப்படும் வீட்டுப் பாடப் பயிற்சியே போதுமான அளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தலைவர்கள் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
கொடுக்கப்பட்ட வாசிப்புப் பகுதி ஒவ்வொரு பாடத்தின் கருப்பொருளுக்கு ஒத்ததாகவோ அல்லது சம்பந்தப்பட்டதாகவோ இருக்க வேண்டும். மேலே கூறப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த வழிகாட்டி சிபாரிசு செய்யப்பட்ட வாசிப்புப் பாகங்களுக்காக ஒரு சிறிய கைப்புத்தகம் வெளியிட்ருக்கிறது. இவைகளும் சிபாரிசு செய்யப்பட்வைகளே தவிர கட்டாயமானவை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைவரும் தன்னுடைய குழுவிற்கு வாசிககக் கொடுக்க வேண்டிய புத்தகங்களின் படியலை அவசியம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
மனப்பாட வசனம்  ஒவ்வொரு வாரத்திற்கும் வரப்போகும் வாரத்திற்குரிய பாடத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட இரண்டு மனப்பாட வசனங்களை வழிகாட்டி குறிப்பிட்டிருக்கிறது. இருந்த போதிலும் ஒவ்வொரு குழுவின் சூழ்நிலைகளையும் பயிற்சி பெறுவோரின் திறமையையும் பொருத்து மனப்பாட வசனத்தை ஒன்று ஆகக் குறைக்கலாம். மனப்பாட வசனங்கள் கொடுக்கும் போது சில ஆலோசனைகள் பின்வருமாறு:-
மனப்பாட வசனங்களைத் தியான நேரத்தில் உபயோகிக்கலாம். அதே சமயம் தியான நேரத்தில் அதிகமான வேலை கொடுக்காதபடியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பயிற்சி பெறுவோர் மனப்பாட வசனங்களைத் தங்கள் சொந்த வார்த்தைகளில் விளக்கிக் கூறும்படி சொல்வதும் உதவியாக இருக்கும். பயிற்சி பெறுவோர் எவ்வளவு நன்றாக மனப்பாட வசனங்களைக் கொண்டு தியானம் செய்திருக்கிறார்கள் என்பதை சோதித்தறியவும் இது உதவியாக இருக்கும். தங்கள் குடும்பத்தாருடன் தினசரி உரையாடலின் போது இந்த மனப்பாட வசனங்களையும் எடுத்துக் கூறும்படி ஊக்குவிக்க வேண்டும். இப்படி செய்வது இந்த வசனங்களை மறந்து போகாமல் எப்போதும் மனதில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கிறது.
தியான நேரம்  ஒவ்வொரு வாரத்தின் தியான நேரத்திற்காக அடுத்த வாரத்திற்குரிய பாடம் சம்பந்தப்பட்ட ஒரு பகுதியை இந்தத் வழிகாட்டி தெரிந்தெடுத்திருக்கிறது. பயிற்சி பெறுவோர் அந்தப் பகுதியிலுள்ளவற்றை வாழ்க்கையில் செயல்படுத்துவது பற்றி தியானம் செய்யும்படி கூற வேண்டும். தியானத்திதுக்கான பகுதி வேதாகமத்தின் எந்தப் புத்தகத்திலிருந்தும் எடுக்கப்படலாம் என்ற போதிலும் சீஷத்துவப் பயிற்சியின் ஆரம்ப காலத்தில் கதைகள் போன்ற பகுதிகளைத் (சரித்திரங்களைக் கூறும் புத்தகங்கள் சுவிசேஷங்களிலிருந்து) தெரிந்தெடுக்க சிபாரிசு செய்யப்படுகிறது. இதன் காரணம் என்னவென்றால் பயிற்சி வெறுவோரில் பலருக்கு இந்த வேளையில் தீர்க்கதரிசனப் புத்தங்கள் அல்லது நிரூபங்களை வாசித்துப் புரிந்துணருவது கடினமாக இருக்கும். ஒரு வாரத்தில் எத்தனை தியான நேரங்கள் கொடுக்கப்படலாம் என்பதை ஒவ்வொரு தலைவரையும பொருத்ததாக இருந்த போதிலும் வாரத்திற்கு 4-5 தியான நேரங்களை வைத்துக் கொள்வதுடன் அதில் ஒன்று 4வது வகையைச் சார்ந்ததாக இருப்பது பொருத்தமாக இருக்கும். கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு தியானத்திற்குப் பதிலாக பயிற்சி பெறுவோர் ஞாயிறு அல்லது புதன் (வார நடுவில் ஆராதனை இருக்குமானால்) கிழமைகளில் ஆராதனையின் போது செய்யப்ட்ட பிரசங்கத்தின் சுருக்கத்தை தியானம் செய்யும் படி சொல்வது மற்றொரு ஆலோசனையாக இருக்கிறது. பயிற்சி பெறுவோர் தியானப் பகுதியை அவசரமாக வாசிப்பதுடன் முடித்து விடாமல் அந்த பகுதியைக் கொண்டு தாங்கள் செய்யும் தீர்மானங்களையும் அவற்றை செயல்படுத்தும் விதத்தையும் குறித்து கவனமாகச் சிந்திக்கவும் அவற்றைத் தங்கள் அன்றாடக வாழ்க்கையில் சரியானபடி செயல்படுத்தவும் அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தியானத்திற்குரிய பகுதியை அவர்கள் வாசித்து இந்த 4வது வகையான வாழ்க்கையில் செய்லபடுத்துதல் என்ற தியானத்தைச் செய்யும்படி அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
7. தலைவர்கள் தற்பரிசோதனை செய்வதற்கான பட்டியல்
தலைவர்கள் தங்கள் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளைக் குறிக்கோள் கண்காணிப்பு முறையில் மதிப்பீடு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். பின்வரும் பட்டியல் சீஷத்துவப் பயிற்சித் தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களையும் தங்கள் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளையும் மதிப்பீடு செய்வதற்கு உதவியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீஷத்துவப் பயிற்சி பாடத்தையும் முடித்த பின்பு பின்வரும் பட்டியலின் படி தலைவர்கள் சுயமதிப்பீடு செய்தபின் தங்கள் பெலவீனங்களை அறிந்து அதற்கு ஈடு செய்வது சுய மேம்படுத்துதலுக்கு உதவியாக இருக்கும்.

(ப.22) தலைவரின் தற்பரிசோதனை பட்டியல்
தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களை சுயமதிப்பீடு செய்வதற்கு உதவியாகப் பின்வரும் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

1. மனத்தின் வரைபடத்தின் உபயோகம்
. இந்தப் பாடம் முழுவதின் பொருளடக்கத்தையும் நான் போதிய அளவு புரிந்துணர்ந்திருந்தேனா?
. பாடத்தின் கருப்பொருளையும் ஒவ்வொரு கேள்வியின் நோக்கத்தையும் புரிந்துணந்திருந்தேனா?
. ஒவ்வொரு கேள்விக்கும் இடையேயும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையேயும் கடந்து செல்லும்போது சுமூகமாக இருந்ததா?
2. அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்)
. அறிமுகப்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்ட அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்) பொருத்தமானதாக இருந்ததா?
. நான் அறிமுக நடவடிக்கையை நல்ல விதமாகவும் சரியான விதத்திலும் உபயோகம் செய்தேனா?
3. கேள்வி
. நான் வகுப்பில் சுற்றி நடந்து பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டேனா?
. பயிற்சி பெறுவோர் கேள்வியைப் போதுமான அளவு புரிந்து கொண்டார்களா?
. (   ) தெளிவாக விபரமாக பதில் கூற வேண்டிய கேள்விகளையும் ஆம்-இல்லை என்று மாத்திரம் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் நான் சம அளவிலும் சரியான விதத்திலும் உபயோகித்தேனா?
. கூர்ந்து கவனித்தல் விளக்கம் சொல்லுதல் ஆழ்ந்த சுய சிந்தனை வாழ்க்கையில் செயல்படுத்துதல் ஆகியவற்றைச் சார்ந்த கேள்விகளை நான் சம அளவிலும் சரியான விதத்திலும் உபயோகித்தேனா?
4. கவனித்துக் கேட்டலும் சுருக்கமாகக் கூறுதலும்
. பயிற்சி பெறுவோர் விடையளிக்கும்போது நான் அனுதாபத்துடன் கேட்டு பொருத்தமான பாவனை சைகை குரலில் ஏற்றத் தாழ்வு  நேருக்கு நேர் பார்த்தல் ஆகியவற்றை உபயோகித்தேனா?
. பயிற்சி பெறுவோரின் கேள்விகளையும் விடைகளையும் நான் பயனளிக்கும் விதத்தில் சுருக்கமாக ஒழுங்கு படித்தினேனா?
5. திறந்த மனப்பான்மை
. பயிற்சி பெறுவோரிடம் மனம் விட்டுப் பேசினேனா?
. பயிற்சி பெறுவோர் தங்கள் வாழ்க்கை குணாதிசயம்  பற்றி வெளிப்படையாகப் பகிர்நது கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்களா?
. மனம் திறந்து பேசிய பயிற்சி பெறுவோரிடம் நான் எனது அங்கீகாரத்தைக் காண்பீத்தேனா?
. பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களைப் பாடத்தின் கருப்பொருளுடன் சரியான பிரகாரம் இணைத்தேனா?
6. ஊக்குவிப்பு
. பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளுக்கு நான் சரியான பிரகாரம் மறுமொழி கொடுத்தேனா?
. பகிர்நது கொண்டதற்காக அவர்களைப் பாராட்டி நன்றி கூறி ஊக்குவித்தேனா?
7. நேரத்தை நிர்வாகித்தல்
. ஒவ்வொரு வகையான கேள்விக்கும் நான் விவேகத்துடன் நேரத்தை ஒதுக்கினேனா? கூர்ந்து கவனித்தல் விளக்கம் சொல்லுதல் ஆழ்ந்த சுய சிந்தனை வாழ்க்கையில் செயல்படுத்துதல்.
. பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளின் நீளத்தை நான் சரியான பிரகாரம் கட்டுப்படுத்தினேனா?
8. பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலை உணர்தல்
. பரிசுத்த ஆவியானவரின் ஒயியூட்டித் தெளிவு படுத்துவதை நான் நாடித் தேடினேனா?
. பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் ஏவுதலையம் உள்ளத்தில் உணர்து அதின் படி செய்லபட்டேனா?
9. கண்டு பிடித்தலும் வாழ்க்கையில் செயல்படுத்துதலும் . பாடத்தில் போதிக்கப்பட்ட வேதாகம சத்தியங்களைப் பயிற்சி பெறுவோர் சரிவரப் புரிந்து கொண்டார்களா?
. பயிற்சி பெறுவோர் தாங்கள் கண்டிறிந்த உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையிலும் குணாதிசயங்களிலும் செயல்படுத்துவதற்குத் தீர்மானம் செய்து சரியான திட்டம் வகுப்பதற்கு நான் அவர்களுக்கு உதவி செய்தேனா?
10. பயிற்சி பெறுவரைப் புரிந்துணர்ந்து கொள்தல்
. பயிற்சி பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவர்களுடைய ஜெப விண்ணப்பங்களையும் நான் புரிந்துணர்ந்து கொண்டேனா?
. இவ்வாரத்தில் தொலை பேசியின் மூலமாக அழைக்கப்பட வேண்டியவர்களையும் ஆலோசனை தேவைப்படுவோரையும் நான் பகுத்தறிந்து கொண்டேனா?

1. அன்றாடக வாழ்க்கை வீட்டுப் பாடப் பயிற்சி.
பயிற்சி பெறுவோர், தங்கள் ஜெப வாழ்க்கையில் கண்டு பிடிக்கும் ஏதாவது பிரச்சனைகளையும், இந்த வாரத்தில் தங்கள் ஜெப வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதாவது மாற்றங்களையும் குறிப்பிட்டு எழுதி வைக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
2. வாசிக்கும் படியாகக் கொடுக்கப்பட்ட வேலைப் பகதி.
3. மனப்பாட வசனங்கள்
நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். யோவான் 15:7
ஆகையால், பொல்லாதவர்களாகயி நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு, நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? மத்தேயு 7:11
4. தியான நேரம்
எலியாவின் உத்தரவு அருளப்பட்ட ஜெபம். 1 இரலாஜாக்கள் 18:41-46

No comments:

Post a Comment