Sunday, August 20, 2017

அருட்பணி சிந்தையுடைய சபையாக வளர்தல் (அமர்வு 10)

தொகுதி:
“சுவிசேஷமும் வட்டாரச் சபையும்”

அமர்வு 10: அருட்பணி சிந்தையுடைய சபையாக வளர்தல் (நேர அளவு: 60 நிமிடம்)


முன்னுரை:

         பிரச்சனையை அடையாளம் கண்டு அதற்குத் தீர்வு காணாமல் விட்டு விடுவது போதுமானதன்று.

         கீழே, வட்டாரச் சபைகளை மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


படி 1: உறுமாற்றத்திற்காக ஜெபித்தல்

         நம் வட்டாரச் சபையில் உறுமாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஜெப ஆளுமையில் தேவ சித்தத்தை நாட வேண்டும்.

         ஏக சிந்தையுடைய இதரோடு அல்லது சுவிசேஷ, அருட்பணி குழுவோடு சேர்ந்து இதைத் தொடங்கலாம்.

         நம் சபையின் அனுதின ஜீவியத்தில் இவ்வாறு தொடர்ச்சியாக தேவ கரங்கள் அசைவாடுவதற்கு நாடலாம்.

         தேவ ஆவியின் பணிகளைப் பகுத்தறிந்து, அவர் நடத்தும் வகையில் ஜெபிப்பது அவசியமாகும்.


படி 2: விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்

         சுவிசேஷத்திற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அதை அதிகரிக்கச் செய்வது அடுத்த படியாகும்.

         தற்போதைய விழிப்புணர்ச்சியைப் பற்றி சபையாரோடும் மூப்பரோடும் கலந்தாலோசித்து மதிப்பீடு செய்வது உதவியாக இருக்கும்.

         விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு அணுகுமுறைகளைக் கையாளவும் (உம். பிரசங்க மேடை, அறிவிப்புப் பலகை, சாட்சிகள்).

         இந்த நோக்கத்திற்காக ஒரு ஞாயிறு அல்லது ஒரு மாதத்தை ஒதுக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது சிறந்த அணுகுமுறையாகும்.




படி 3: பயிற்சிகள் நடத்துதல்

         வட்டாரச் சபைகளின் தேவைகள் அடிப்படையில் பயிற்சிகளைத் திட்டமிடுவது அடுத்த படியாகும்.

         பிரபலமான ஊழியங்கள் அல்லது புதியவைகளைப் பல்வேறு அம்சங்களில் அடையாளம் காண்க.

         இந்தப் பயிற்சிகளுக்கு கூடிய மட்டும் அதிக விளம்பரம் கொடுக்கவும். ஆனால், ஆக்கப்பூர்வமான பயிற்சிக்கு சிறிய குழுவே சிறந்தது.

         இந்தப் பயிற்சிகளைத் தேவைகள் ஏற்படும்போது அவ்வப்போது நடத்தவும்.


4. பிணைப்பும் அதற்கு அப்பாலும்

         இந்த ஊழியத்தின் பங்காளிகள் யாவரோடும் இணைந்து அணுக்கமாக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி நடத்துவது அவசியம்.

         ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கும் பொருட்டு வட்டார குருமார்கள் மற்றும் மூப்பர்களோடு அணுக்கமாக பணியாற்றுவது இன்றியமையாதது.

         சபைக்கு வெளியே உள்ள சார்புடைய இயக்கங்களோடு ஒத்துழைத்துக் கொள்வதற்கும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.


5. சுவிசேஷத்தை தொடக்குதல்


         இறுதியாக, சபைகளின் ஊழியம், சுவிசேஷம் அருட்பணிகளில் தொடக்க விழா காணச் செய்வதும் இன்றியமையாததாகிறது. 

No comments:

Post a Comment