Friday, August 4, 2017

சபை மதிப்பீட்டுக் கேள்விகள்

சபை மதிப்பீட்டுக் கேள்விகள்

அவ்வப்போது சற்று நிதானித்து, சபை ஊழியத்தை நாம் மேலும் எப்படி அபிவிருத்தி செய்யலாம் என்று அறிய சபையாரின் கருத்துகளைச் சேகரிப்பது நன்மை தரும். மேலோட்டமாக நம் சபை ஊழியக்காரியங்களில் திருப்தியடைந்தாலும், அதன் சில பகுதிகளில் நாம் திருத்தங்கள் செய்வது நலமாயிருக்கும். உங்கள் சபையை மதிப்பீடு செய்வது இந்த வினாப்பட்டியலின் நோக்கமாகும். சம்பந்தப்பட்ட காரியங்களின் தரத்தை அளக்க, அதன் வலப் பக்கத்தில் பொறுத்தமான மதிப்பெண்களை வழங்கவும்:

1 = மிகச் சிறப்பு (இந்தக் காரியத்தில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறோம்)

2 = போதுமானது (நாங்கள் போதுமான அளவு செயல்படுகிறோம். எதுவும் விதிவிலக்கல்ல. ஆனால், இன்னும் அதிகமான கவனம் செலுத்தப்பட வேண்டும்.

3 = கவனம் செலுத்தப்பட வேண்டும் (இக்காரியத்தில் மேலும் அதிகமான கவனம் செலுத்தப்பட வேண்டும்)

4 = அவசர கவனம் செலுத்தப்பட வேண்டும் (இக்காரியத்தில் நாம் மிகவும் கவலைப்படுகிறோம்)

சபை தலைமைத்துவம்

குருவானவரின் குணநலன்

குருவானவருக்குச் சமுதாயத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது


குருவானவர் தெய்வீகமான இல்லறத்தை வெளிப்படுத்துகிறார்


குருவானவரை அணுகுவது இலகுவானது


குருவானவர் நட்புறவாகப் பழகுகிறார்


குருவானவர் நிதி விவகாரத்தில் நேர்மையாக இருக்கிறார்.


குருவானவர் தெய்வீக குணநலன்களை வெளிப்படுத்துகிறார்


குருவானவர் மிகவும் நம்பிக்கையானவர்


ஆலோசனை பெற குருவானவரை நாடுவதில் எனக்கு ஆறுதலாக இருக்கிறது.

என் கிறிஸ்தவ ஜீவியத்தில் குருவானவர் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.



உபதேசம்

உபதேசம், வேதத்தை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது.


உபதேச நேர அளவு நியாயமானது


உபதேசம் என் தினசரி ஜீவியத்தில் உதவியாக இருக்கிறது.


உபதேசம் என் ஜீவியத்தோடு தொடர்புடையதாய் உள்ளது.


நான் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உபதேசத்தின் மூலம் பதில் கிடைக்கிறது.


என் ஆவிக்குரிய வளர்ச்சிக்குச் சவாலைத் தருகிறது.


உபதேசங்கள் ஊக்கத்தை உயர்த்துவதோடு ஆக்ககரமாகவும் அமைகிறது.


உபதேசங்கள் புரிந்து கொள்வதற்கு எளிதாக உள்ளன.


உபதேசயங்கள் எனக்கு ஊக்கத்தைத் தருகிறது.



குருவானவரின் தலைமைத்துவம்

குருவானவர் தெளிவாக வழி காட்டுகிறார்.


குருவானவர் சரியான திசையில் சபையை வழிநடத்துகிறார்.


குருவானவர் செம்மையாகத் திட்டமிட்டு சபையைச் சரியான திசையில் வழிநடத்துகிறார்.


குருவானவர் கவனிக்கும் பணியில் நான் திருப்தியடைகிறேன்.


சபை நடவடிக்கைகள் மற்றும் ஊழியங்களில் குருவானவர் சரியான திசையில் வழிநடத்துகிறார்.


சபையைக் குறித்த என் அக்கறைக்கு குருவானவர் செவி சாய்க்கிறார்.


ஆலோசனைக்காக குருவானவரை நாடுவது எனக்கு ஆறுதலாக இருக்கிறது.


தேவை ஏற்படும்போது குருவானவர் குருத்துவ பராமரிப்பு தருகிறார்.






தலைமைத்துவம்

பீசிசி (The council) சபைக்கு ஆவிக்குரிய தலைமைத்துவத்தை வழங்குகிறது.


பீசிசி (The council) தெய்வீக குணநலன்களை வெளிப்படுத்துகிறது.


பீசிசி (The council) பின்பற்றுவதற்கான தெய்வீக முன்னுதாரணத்தை வழங்குகிறது.


பீசிசி (The council) என் கரிசனைகளைச் செவி மடுக்கிறது.


சபை எதிர்நோக்கும் சவால்களை பீசிசி (The council) சிறந்த முறையில் தொடர்பு கொண்டு அணுகுகிறது


முக்கியமான தீர்மானங்களுக்கு முன்பு சபையாரின் கருத்துக்கு முன் வைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

சபையில் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் நியாயமான முறையில் கையாளப்படுகின்றன.



சபையின் ஊழியத்தை மதிப்பீடு செய்தல்

சபையின் தோழமை

சபை தோழமை உணர்வோடு பழகுகிறது.


என் நண்பரை அழைத்து வருவதற்கு சபை உகந்த இடமாக அமைந்துள்ளது.


சபையின் ஓர் அங்கமாக என்னைக் கருதுகிறேன்.


தோழமை நடவடிக்கைகளுக்குச் சபை வாய்ப்புகள் வழங்குகிறது


சபையில் நானும் ஏற்றுக்கொள்ளப்படுவதை உணர்கிறேன்.


தோழமை நடவடிக்கைகளில் சபை அனைவரையும் சேர்த்துக் கொள்கிறது.


கஷ்ட நஷ்டங்களில் சபையார் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர்.


சபைக்குள் நெருக்கமான ஐக்கியத்தை உணர முடிகிறது.


இந்தச் சபைக்கு வரும்போது நான் ஒரு பெரிய குடும்பத்தில் அங்கம் வகிப்பதை உணர முடிகிறது.






சபையின் புற ஊழியங்கள்:

சுற்றுவட்டார ஜனங்கள் நாம் யார் என்பதையும் எங்கிருக்கிறோம் என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.


இரட்சிக்கப்படாத நண்பர்களை நான் இந்தச் சபைக்குதான் கொண்டு வருவேன்.


சுற்று வட்டார ஜனங்களுக்கு நியாயமான உதவிகள் மூலம் ஊழியம் செய்கிறோம்.


ஜனங்களுக்கு சுவிசேஷம் கூற நியாயமான ஆற்றலுக்கு உட்பட்ட யாவற்றையும் எங்கள் சபை செய்கிறது.


புதியவர்கள் நம் சபையில் ஆறுதலடைவதோடு, தாங்கள் வரவேற்கப்படுவதையும் உணர்கிறார்கள்.


தரிசனம் மற்றும் சுவிசேஷப் பணிகளுக்கு நம் நிதி ஆற்றலுக்கு உட்பட்டு செலவு செய்கிறோம்.


எங்கள் தரிசனம் மற்றும் சுவிசேஷக் குழுவைப் பற்றி நான் அறிந்திருப்பதோடு அவர்களுக்காக ஜெபிக்கவும் செய்கிறேன்.


எங்கள் சபை, சமுதாய காரியங்களில் ஈடுபட்டிருக்கிறது.



சபையின் ஆராதனை:

பொதுவாக துதி ஆராதனை என் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறது.


இசை என் ஆராதனைக்குப் பொருத்தமாக இருக்கிறது.


ஆலய தளவாட வசதிகள் (விளக்கு, அமர்விடம், சீதோஷ்ணம் போன்றவை) எனக்கு வசதியாக இருக்கின்றன.

ஆராதனை பாணியில் சரிவிகிதம் காணப்படுகிறது (உம் சமகாலம், பாரம்பரியம், பாடல், பல்லவி etc).

ஆராதனை நேரம் போதுமானது.


நாங்கள் ஜெபிக்கும் சபை என்பதையும் ஜெபம் எங்கள் ஆராதனையில் ஒரு பகுதி என்பதையும் உணர்கிறேன்.


ஆராதனை முறைமை இளம் குடும்பங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.



சபையின் உபதேசமும் சீஷத்துவமும்:

சபையின் உபதேசம் என் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுகிறது.


என் விசுவாசம் இன்னதென்றும் அதற்கான காரணம் இன்னதென்றும் அறிந்திருக்கிறேன்.


என் ஆவிக்குரிய வெகுமதி இன்னதென்றும், ஆலய வளர்ச்சிக்கு அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்.


தேவனோடு அந்தரங்க, ஆவிக்குரிய உறவில் சார்ந்திருப்பதற்கு எங்கள் சபை உதவுகிறது.


ஆலயத்தில் நான் ஊழியம் / பணிவிடை செய்வதற்கு அணுகூலங்கள் உள்ளன.


சபையின் உபதேசம் முழுவதும் வேதாகமத்தையே சார்ந்தது.


ஓய்வுநாள் பாடசாலை (சண்டே ஸ்கூல்) வகுப்புகள் நடைமுறைக்கு ஏற்புடையது.


என் ஜெப ஜீவியத்திற்கு எங்கள் சபை ஊக்கமளிக்கிறது.


சுவிசேஷத்தைப் நான் பிறரிடம் நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்கிறேன்.


என் சபை எதை நிலைநிறுத்துகிறது என்பது பற்றியும், எதை விசுவாசிக்கிறது என்றும் எனக்குத் தெளிவான புரிதல் உண்டு.



பொதுவான சபை ஆரோக்கியம்

எங்கள் சபை ஆரோக்கியமானது.


எங்கள் சபையின் நெறி நடைமுறை உயரியது.


சபையின் எதிர்காலம் குறித்து சபையார் உற்சாகம் கொண்டுள்ளனர்.


சபை செல்லும் திசையைக் குறித்து சபையார் உற்சாகம் கொண்டுள்ளனர்.


எங்கள் சபை வேதத்தைக் கற்றுக்கொடுப்பதோடு அதனைப் பின்பற்றவும் செய்கிறது.


எங்கள் சபை ஒருவருக்கொருவர் ஜெபிப்பதோடு, பிறருக்காகவும் ஜெபிக்கிறது.


ஜனங்களைச் சென்றடைந்து அவர்களுக்கு சுவிசேஷம் கூறும் தேவனின் கடைசி பிரதான கட்டளையை நிறைவேற்றும் சபையாக நாங்கள் திகழ்கிறோம்.

இந்த சபையில் அங்கம் வகிப்பதால் கிறிஸ்துவடனான என் உறவில் நியாயமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்
பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் உன் சபை ஆரோக்கியத்தைப் புரிந்து கொள்:

எந்தத் துறையில் உன் சபை மிகச் சிறப்பாக செயல்படுகிறது?

_______________________________________________________________________________________

_______________________________________________________________________________________

உன் சுய வளர்ச்சியில், எந்தத் துறையில் திடப்பட விரும்புகிறாய்?

_______________________________________________________________________________________

_______________________________________________________________________________________

உன் சபையில் ஒரு காரியத்தை நீ மாற்ற விரும்பினால், அது எதுவாக இருக்கும்?

_______________________________________________________________________________________

_______________________________________________________________________________________

உன் சபை புற சமுதாயத்தைச் சென்றடைந்து ஊழியம் செய்வதைச் செம்மையாக்க நீ செய்ய விரும்பும் ஒரு காரியம் யாது?

_______________________________________________________________________________________

_______________________________________________________________________________________

எவ்வளவு காலயமாக நீ சபைக்குச் சென்று வருகிறாய்?

_______________________________________________________________________________________

_______________________________________________________________________________________

ஞாயிறு ஆராதனைகளில் நீ எவ்வளவு ஒழுங்காக கலந்து கொள்கிறாய்?

மாதத்திற்கு ஒரு முறை
மாதத்திற்கு 2 முறை
மாதத்திற்கு 3 முறை
முடிந்த மட்டில்.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட சபையின் ஊழியத்தில் நீ கலந்து கொள்கிறாயா?

_______________________________________________________________________________________

_______________________________________________________________________________________

ஓர் ஊழிய ஆயத்தத்திற்கு நீ எத்தனை மணி நேரம் ஒதுக்குகிறாய்?

_______________________________________________________________________________________

_______________________________________________________________________________________

மாதா மாதம் நீ தசம பாகம் செலுத்துகிறாயா?

_______________________________________________________________________________________

_______________________________________________________________________________________

பிறரிடம் உன் விசுவாசத்தை எத்தனை முறை பகிர்ந்து கொள்கிறாய்?

_______________________________________________________________________________________


No comments:

Post a Comment