Saturday, August 19, 2017

சுவிசேஷமும் வட்டாரச் சபையும் - தொகுதி 8

தொகுதி 8:
“சுவிசேஷமும் வட்டாரச் சபையும்”

அமர்வு 8: சபையும் காணாமற் போனோரும் – பகுதி 1 (நேர அளவு: 60 நிமிடம்)

1. இயேசுவின் ஊழிய பொன் மொழி (வழிகாட்டி)
         நம் ஆண்டவராகிய இயேசு ஊழிய மற்றும் சுவிசேஷ வழிகாட்டியைப் புரிந்து கொள்ளும் அளவு எளிமைப் படுத்தியுள்ளார்.

லூக்கா 19:10

இழந்துபோனதைத்
தேடவும்
இரட்சிக்கவுமே
மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.


2. சிறு குழு நடவடிக்கை:
         லூக்கா 15.1-3 காணக்கூடியது போல் பின்வரும் பகுதியில் இதன் அடக்கம் விளக்கப்பட்டுள்ளது:

லூக்கா 15:1-3
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

v  நம் ஆண்டவராகிய இயேசு ஆயக்காரரோடும் ‘பாவிகளோடும்’ சாப்பிடுவதைக் கண்டார்கள்.

v  இவர்கள் வசனங்களைக் கேட்கும்படி இயேசுவண்டை வந்து சேர்ந்தனர்.

v  பரிசேயர்களும் வேதபாரகர்களும் அங்கிருந்தனர்.

v  இதைக் காணப் பொறுக்காத அவர்கள் முறுமுறுத்தனர்.

v  இயேசு தாழ்த்தப்பட்டோரோடு அமர்ந்து சாப்பிடுவதில் பரிசேர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் கேவலமாய் இருந்தது.

v  இதற்குப் பிரதியுத்திரமாக இயேசு பின்வரும் உவமானங்களை உபதேசிக்கிறார்.

ü  லூக்கா 15:4-7
ü  லூக்கா 15:8-10
ü  லூக்கா 15:11-32

         மூன்று குழுக்களாகப் பிரிந்து கொடுக்கப்பட்ட வேத வசனங்களைப் பற்றிக் கலந்துரையாடு.


        லூக்கா 19.10ன் அடிப்படையில் ஒரு சிறு விளக்கப் படைப்பு வழங்கு 

No comments:

Post a Comment