Friday, August 4, 2017

வட்டாரச் சபைகளில் சுவிசேஷக் குறைவு

தொகுதி:
சுவிசேஷமும் வட்டாரச் சபையும்

அமர்வு 3: வட்டாரச் சபைகளில் சுவிசேஷக் குறைவு (நேரம்: 60 நிமிடம்)

சிறு குழு கலந்துரையாடல்: கிறிஸ்தவர்ள் (சபைகளும்) சுவிசேஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணங்கள் யாவை?

சுவிசேஷத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குத் தடையாக அமையக் கூடிய காரணங்கள்:
காரணிகள்
பின்னூட்டம்
1.   காணாமற்போன ஜனங்களைத் தேடுவதில் கிறிஸ்தவர்கள் அவசரவம் காட்டாமை.

2.   காணாமற் போனவர்களோடு பேசுவதற்கும் நேரம் ஒதுக்குவதற்கும் கிறிஸ்தவர்களும் சபைகளும் நட்பு கொள்ளாமை.

3.   பல கிறிஸ்தவர்களும் சபைகளும் உணர்ச்சியற்று சோம்பல் கொண்டுள்ளமை.

4.   நாம் எதற்காக ஜீவிக்கிறோம் என்பதைவிட, நாம் இன்னார் என்பதில் அக்கறை காட்டுகிறோம்.

5.   நாம் புறப்படுகிறோம்என்பதை விட்டு, ‘நீ வாஎன்ற ஆக்கப்பூர்வமற்ற அணுகுமுறையை நம் சபைகள் கொண்டிருக்கின்றன.

6.   சுவிசேஷம் என்பது குருவானவர் பணி என்றும், அதற்காகதான் அவருக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறது என்றும் பல சபையார் கருதுகின்றனர்.

7.   இன்றைய சபையார் காணாமற்போனவர்களைச் சந்திப்பதை விட, தங்கள் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

8.   இன்றைய கலாச்சாரம் உலகப்பிரகாரமாகவும் வேதத்திற்குப் புறம்பாகவும்  இருப்பதால் சபையார் பின்வாங்கிப் போகிறார்கள்.

9.   கிறிஸ்து மாத்திரமே மீட்புக்கு வழி என்பதைப் பல கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில் பிரச்சனை இருக்கிறது.

10.  காணாமற் போனவர்களைச் சென்றடைவதற்கு நம் திருச்சபைகள் ஜெப கூடங்களாக செயல்படவில்லை.

11.  காணாமற்போனவர்களைச் சென்றடையும் ஆற்றலைக் கொண்ட சீஷர்களை ஆயத்தம் செய்து ஊக்குவிக்கும் கடமையில் சபைகள் கவனம் செலுத்துவதில்லை.

12.  சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதால் பிறரைக் குற்றப்படுத்தி விடுவோமோ என்ற அச்சத்தினால் கிறிஸ்தவர்கள் பின்வாங்குகிறார்கள். அரசியல் கட்டுப்பாடுகளும் அதற்குத் தடையாகின்றன.

13.  கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் விசுவாசத்தைத் திடப்படுத்தாத சபைகள் பல உள்ளன.

14.  பல நடவடிக்கைகளில் சபைகள் மூழ்கிவிட்டன,, அத்தியாவசியமான காரியங்களுக்கு அவர்களுக்கு நேரமில்லை.




கருத்தாடல் அமர்வு: மேற்காணும் கருத்துகளுக்கு நீ உடன்படுகிறாயா? காரணங்களைப் பின்னூட்டப் பகுதியில் எழுதவும்.

No comments:

Post a Comment