Saturday, August 19, 2017

சபையும் காணாமற்போனோரும் – பகுதி 2 : தொகுதி 9:

தொகுதி 9:
“சுவிசேஷமும் வட்டாரச் சபையும்”

தொகுதி 9: சபையும் காணாமற்போனோரும் – பகுதி 2 (நேர அளவு: 60 நிமிடம்)

1. உவபமானம்: காணாமற் போனவரும் கண்டு பிடிக்கப்பட்டவரும்:

1.1 காணாமற் போன ஆடு

லூக்கா 15:4-7
உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 

v  ஒருவனுக்கு 100 ஆடுகள் இருந்தன – ஆனால், அதில் ஒன்று காணாமற்போனது.

 

v  அவன் 99 ஆடுகளையும் விட்டு விட்டு, காணாமற்போன அந்த ஆட்டைத் தேடினான்.

 

v  கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஆட்டுக்காக அவன் சந்தோஷப்பட்டதோடு சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட அழைத்தான்.


v  பாவிகள் மனந்திரும்புவதால் பரலோகத்தில்ச சந்தோஷமுண்டாயிருக்கும் என்று இயேசு கூறி முடிக்கிறார்.

 

1.2 காணாமற்போன வெள்ளிக்காசு

லூக்கா  15:8-10
அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ? கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா? அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 

v  ஒரு ஸ்திரீ 10 வெள்ளிக்காசை உடையவளாயிருந்தாள் – அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனது.

 

v  அmவள் விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, மிகவும் ஜாக்கிரதையாய் அதைக் கண்டுபிடிக்கிறாள்

 

v  அவள் அதில் மகிழ்ந்து தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் வரவழைக்கிறாள்.


v  பாவிகள் மனந்திரும்புவதால் பரலோகத்தில்ச சந்தோஷமுண்டாயிருக்கும் என்று இயேசு கூறி முடிக்கிறார்.

 

1.3 காணாமற்போன குமாரன்

 

லூக்கா  15:11-32

பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு; ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான். அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.


v  ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். – ஆனால் இளையவன் தன் தகப்பனுடைய ஆஸ்தியில் பாதி பங்கைக் கேட்டான்.

 

v  இளையவன் தூர தேசத்திற்குச் சென்று, பாவகரமான ஜீவியத்தில் தன் செலவழித்து அழித்துப் போட்டான்.

 

v  பின்னர் அவன் கொடிய பஞ்சத்தை எதிர்நோக்கி, பன்றிகள் மேற்க்கும் பணி செய்து, அவற்றுக்கு உண்டான திணிகளை சாப்பிட்டான்.


v  நிதானம் தெளிந்த அவன், மனந்திரும்பி தன் தகப்பனின் வீட்டுக்குத் திரும்ப தீர்மானித்தான்.


v  தூரத்தின் தன் குமாரன் வருவதைக் கண்டு, அவனுக்கு இரக்கங்காட்டி, ஓடின்சென்று அவனை மீண்டும் வரவேற்றான்.


v  தகப்பன் தன் வேலைக்காரர்களிடத்தில் மகனுக்கு ஆடை, மோதிரம் மற்றும் காலணியை அணிவிக்கச் சொன்னான்.


v  மேலும் தகப்பன் அவனுக்காக ஒரு கொழுத்த ஆட்டை அறுத்து, ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்யச் சொன்னான்.


v  வயலில் இருந்து வீடு திரும்பிய மூத்த மகன் ஆத்திரமடைந்து வீட்டுக்குள்ளே சென்று விருந்தில் கலந்து கொள்ள மறுத்து விட்டான்.


v  வீட்டுக்கு வெளியே வந்த தகப்பன் அவனைச் சமாதானப்படுத்தி விருந்தில் கலந்து கொள்ளச் சொன்னான். ஆனாலும் அதில் அவன் கலந்து கொள்ள மறுத்து விட்டான்.


வகுப்பு கலந்துரையாடல்:

கேள்வி 1: இந்த மூன்று உவமானங்கள் மூலமும் இயேசுவானவர் என்ன போதிக்கிறார்?

கேள்வி 2: இந்த உவமானங்களை நம்மையும் நம் திருச்சபையையும் எவ்வாறு ஒப்பிட்டுக் காணலாம்?

 

2. காணாமற்போனவர்களைக் குறித்து நம் சபையும் துலங்கல்:

 

         தரிசணம் மற்றும் சுவிசேஷம் குறித்து நம் சபைகளின் நிலைப்பாட்டை மதிப்பீடு செய்வது இன்றியமையாதது.

 

         அப்போஸ்தல நடவடிகளை வாசிக்கும் போது நாம் ஆதித் திருச்சபையில் 3 விதமான மனமாற்றங்களைக் காண்கிறோம்:

 

v  கூட்டம் கூட்டமான மனமாற்றம் (அப்போஸ்தலர் 2:41)

 

v  ஒவ்வொரு நாளும் மனமாற்றம் (அப்போஸ்தலர் 2:42)


v  தனி நபர் மனமாற்றம் (அப்போஸ்தலர் 8:37)


         இந்த மூன்று விததிலும் மனமாற்றம் அடைகிறவர்களை நம் வட்டாரச் சபைகள் ஏற்றுக் கொள்ள எந்த அளவுக்குத் தயாராக உள்ளது?

No comments:

Post a Comment