Sunday, June 5, 2016

இயேசு கிறிஸ்துவின் பாதச் சுவடுகள் - 1 பேதுரு 2:21


இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.”

  1. அப்போஸ்தலனாகிய பேதுரு நமக்கு ஒரு அழைப்பையும் சவாலையும் முன் வைக்கிறார், “இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வர வேண்டும்”.
  2. இயேசு கிறிஸ்து தம் ஜீவியத்தில் நமக்கு முன்மாதிரியை விட்டுச் சென்றிருக்கிறார்.
Ø  இயேசுவானவர் இப்புவியில் செய்த காரியங்கள் யாவும் நான்கு சுவிசேஷங்களில் பதியப்பட்டிருக்கின்றன.
Ø  இயேசு கிறிஸ்து பின்பற்றப்பட வேண்டிய ஒரு பரிபூரண முன்மாதிரி.
Ø  பாடுகளிலும், தாழ்மையிலும், மன்னிப்பிலும், அன்பிலும் அவர் காட்டிய முன்மாதிரி, நாம் பின்பற்றுவதற்கு சாலச் சிறந்த உதாரணங்கள் ஆகும்.
  1. இயேசு கிறிஸ்துவின் தாழ்மையும் பணிவும் பலவீனத்தின் சான்றல்ல. மாறாக தேவனின் வல்லமை ஆகும்.


  1. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுதல்           1 கொரிந்தியர் 11:1-2
Ø  எபிரேயர் 12:1-2 – நமது பார்வையை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் நிலைக்கச் செய்தல்
Ø  மத்தேயு 11:28-30 – இயேசுவிடம் இருந்து கற்றல்
Ø  அவரைப் பின்பற்றுவதன் மூலம் நாம் ஜீவியத்தில் அதிகம் கற்றுக் கொள்கிறோம்.

  1. இயேசு கிறிஸ்துவின் அடிச் சுவடுகளை முழு மனதோடு பின்பற்றுதல்
  2. தேவனுடைய சாயலில் அதிகதிகமாய் வளருதல்
  3. இது நமது அழைப்பாக இருக்கிறது: எபேசியர் 4:1-6


  1. சிந்தை, உள்ளம், கிரியைகளுக்கிடையல் உள்ள தொடர்பு

Ø  மாற்கு 12:30
Ø  எரேமியா 17:10
Ø  நீதிமொழிகள் 3:5-6


இயேசு கிறிஸ்துவின் சிந்தையையும் உள்ளத்தையும் நமது மனதில் பதிய வைப்பது கிறிஸ்துவத்துக்கான அழைப்பாகும். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிறகு நமது செயலிலும், சிந்தையிலும், சொல்லிலும், ஏற்படும் விளைவு, ஆண்டவரும் எஜமானுமாகிய இயேகு கிறிஸ்துவின்  அனுதின ஜீவியம் / நடவடிக்கையையைப் பிரதிபலிக்கும்.  அதன் இறுதி விளைவு  இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடாக பின்பற்றுவதில் வெளிப்படும். 

No comments:

Post a Comment