Tuesday, June 7, 2016

இயேசுவானவருக்கு ஏற்பட்ட சோதனை

”- 5 பகுதிகளில் 1வது பாடம்
வேத பகுதி: மத்தேயு 4:1-11
--------------------------------------------------------------------------------------------------------------
முன்னுரை:
    சோதனை- மனுஷ ஜீவியத்தில் இந்த உலகில் ஏற்படுகிற பிரச்சனை (1 கொரி. 10:13)
    இயேசுவானவர் சோதனைகளைக் கடந்து வெற்றியோடு வந்தார். (எபிரேயர் 2:18; 4:15)

மத்தேயு 4:1-2
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டார்.
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
முக்கிய கதாபாத்திரங்கள்: இயேசுவானவர், பரிசுத்த ஆவியானவர், பிசாசு

1. பழைய ஏற்பாட்டுச சோதனை:
1.1 ஆதாம்ஏதேன் தோட்டம் (ஆதியாகம்ம் 3:1-24) - தோல்வி

1.2 இஸ்ரவேலர் வனாந்திரம் (உபாகமம் 8:1-20) - தோல்வி

 

1 கொரிந்தியர் 10:6

அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.

1.3 இயேசுவானவருக்குச் சோதனைபுதிய ஆதாமும் புதிய இஸ்ரவேலரும் (1 கொரி. 15.45) - வெற்றி


2. இரண்டு ஞானஸ்நானங்கள்ஜலம் & ஆவி: (மத்தேயு 3:13-17)
ஏன்:எல்லா நீதியையும் நிறைவேற்றுவதற்கு
ஏன்:
1. இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்றார்,      2. அவர் ஜலத்தில் இருந்து வெளியே வந்தார் (வாசிக்கவும் - Luke 3:21)
3. வானம் திறக்கப்பட்டது        4. தேவ ஆவி புறாவைப்போல் அவர் மேல் இறங்கி வந்தது
வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
(வாசிக்கவும் 2 சாமுவேல் 7:14, ஏசாயா 42:1 & சங்கீதம் 2:7)

 3. ஆவியானவரால் (வனாந்திரத்திற்குக்) கொண்டு போகப்பட்டார்: (மத்தேயு 4:1-2)
மத்தேயு 4:1-2
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப் பட்டார்.
 
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. (ரோமர் 8:14-15)

லூக்கா  4:1-2
 இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டுநாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். (வாசிக்கவும் கலாத்தியர் 5:16)

4. வனாந்திர அனுபவம்: (மத்தேயு 4:1-2)
மத்தேயு 4:1-2
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப் பட்டார்.
 
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

உபாகமம் 8:2

உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. (வாசிக்கவும் கலாத்தியர் 1:17)

5. பிசாசால் சோதிக்கப்பட்டார்: (மத்தேயு 4:1-2)

லூக்கா  4:2
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப் பட்டார்.
 
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. (வாசிக்கவும் மாற்கு 1:13)

1 தெசலோனிக்கேயர் 3:5

ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன். (வாசிக்கவும் 2 கொரிந்தியர் 2:11)

முடிவுரை:
   இயேசுவானவர் சோதிக்கப்பட்டாலும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் வெற்றிகரமாக உயிர்த்தெழுந்தார்.
   இன்றளவும் பிசாசானவன் தன் முழு நேர பணியான சோதனைகளை நமக்கு உண்டு பண்ணுகிறான்.
--------------------------------------------------------------------------------------------------------------------
கலந்துரையாடுவதற்கான கேள்விகள்:

1. இன்றைய நவீன உலகில் நமக்கு உண்டாகும் சோதனைகள் யாவை?


2. இந்தச் சோதனைகளை எதிர்கொள்ள நமது ஆயத்தங்கள் யாவை? (லூக்கா 4:1; 2 கொரி. 2:11)

No comments:

Post a Comment