Sunday, June 5, 2016

ஜெபித்தல்

எல்லா மதச் சடங்கிலும் ஜெபிக்கும் (இறை வணக்கம்) அப்பியாஷம் காணப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவர்த்தில் தனித் தன்மையும் மாறுபாடும் காணப்படுகிறது:

A.            ஆண்டவர் நமது அருகில் இருப்பதால் நீ சொல்வதையும் கேட்பதையும் அவர் கேட்கிறார்;

B.            நாம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். இதையே இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். யோவான் சுவிசேஷத்தில் இயேசுவிந் நாமத்தில் ஜெபிக்கும் போது பரலோகா பிதா சாதகமான பதிலைத் தருகிறார் என்று வாசிக்கிறோம்.

எனவே நண்பர்களே, இந்த ஓயாத ஜெப சலுகையின் வல்லமையைப் புறக்கணித்து விடாதீர்கள். இயேசுவின் பெயரில் என்ன சொல்லி ஜெபித்தாலும் அது அவரின் உள்ளத்தைத் தொடும். ஏன்? ஜெபிப்பதுதான் இயேசுவின் உள்ள ஊழியமாய் இருக்கிறது! இயேசுவானவர் ஜெபத்தைக் கேட்ட ஆண்டவரின் வலது புறத்தில் அமர்ந்து தமது பிள்ளைகளின் விண்ணப்பங்களைக் கேட்கிறார் என்று வேதம் சொல்கிறது.,


இயேசுவின் உள்ளத்தை விடாமல் தொடுவதற்குக் கற்றுக் கொள்வோம். ஜெபத்தின் வல்லமையை தேவனுடைய பிள்ளைகள் கற்றுக்கொள்வது நன்மையாய் இருக்கிறது. இடைவிடாத ஜெபத்திற்கான நேரத்தை ஒதுக்கும் படி உங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment