"ஆவியில் நிரப்பப்படுவோம் "
எபேசியர் 5:18
(மேம்பட்ட கிறிஸ்தவ ஜீவியத்திற்காக முயலுதல்)
நமது தரிசணம்:
பின்வரும் காரியங்களுக்காக புத்தம்
புதிய பரிசுத்த ஆவியால் நிறப்பப்பட்ட நபர்களாக உலு கிள்ளான் தமிழ் மெதடிஸ்ட்
சபையாகத் திகழ விரும்புகிறோம்:
i. சீஷர்களை உருவாக்கும் சீஷத்துவ சபை [சீஷத்துவம்]
ii. விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளும் சபை [சுவிசேஷம்]
iii. ஜெபிக்கும் சபை [ஜெபம்]
பயண பாதை
A.
சீஷத்துவம்:
ஓயாமல் வேதத்தை வாசித்து, அதை
ஆராய்ந்து, வார்த்தைகளைக் கீழ்ப்படியும் பொருட்டாக ஜெபிப்பதின் வழி இயேசு
கிறிஸ்துவின் உபதேசங்களைப் பின்பற்றும் சீஷராகுதல்
தனிநபர்
அர்ப்பணிப்பு:
- அனுதினமும் புதிய ஏற்பாட்டை வாசித்தல்
- தசமபாகக் கொள்கைக்குக் கீழ்ப்படிதல்
- உள்ளூர் சபை ஊழியங்களில் ஈடுபடுதல்
- சீஷத்துவ வகுப்புகளில் கலந்து கொள்ளுதல்
B. சுவிசேஷம்:
பின்வரும் வழிகளில் பிறரை
சீஷர்களாக்குதல்:
- மாதத்தில் ஒருவருக்கு சுவிசேஷத்தைப்
பகிர்ந்து கொள்ளுதல்
- ஒத்த வயது அடிப்படையில் ஜெபித்து நட்பு
பாராட்டுதல்
- சுவிசேஷப் பள்ளியில் இணைந்து கொள்ளுதல்
C. ஜெபம்:
தனிநபர் அர்ப்பணிப்பு:
- கையேட்டுக் குறிப்பு அடிப்படையில்
அனுதினமும் ஜெபித்தல்
- வெள்ளிக்கிழமை நடைபெறும் துதித்தல் மற்றும்
சுகமளிப்பு ஆராதனைகளில் தேவையோடு வருவோருக்காக ஜெபித்தல்
- ஒவ்வொரு இல்லத்திலும் குடும்ப ஜெப அறை
வைத்திருத்தல்
கூடுதலான
ஊழிய ஆதரவுகள்:
A.
சமூகத்தில்
ஓர் உறவு பாலத்தை அமைக்க சமூகநல நடவடிக்கைகளில் ஈடுபடுதல் – ஜாபெஸ் ஊழியம்.
B.
நம்மைச்
சுற்றி வசதி குறைந்த நிலையில் வாழும் பிள்ளைகளுக்கு நமது ஆலயத்தை இலவச டியூஷன்
நிலையமாக மாற்றுதல்.
C.
நமது
அருட்பணி கடப்பாட்டைத் தொடர்தல்.
No comments:
Post a Comment