முன்னுரை
மாற்கு 1:40-42
இன்று, கடும் சிரமங்களுக்கு மத்தியில் இயேசுவைப் பார்க்க வந்த குஷ்டரோகி ஒருவனையும் அவனுடைய ஆவியிக்குரிய ஜீவியத்தின் மூலம் கற்றுக் கொள்ளக் கூடிய தங்கப் பாளையம் பற்றியும், அதிசயமாக சுகம் பெற்றதைப் பற்றியும் கற்றுக் கொள்ளப் போகிறோம். நமது அறியாமையைப் போக்கக் கூடிய சில வேத வசனங்களை ஆராய்வோம்.
ஆழமாக ஆராய்வதற்கு முன் இந்த குஷ்டரோகியைப் பற்றி ஆராய்வோம்:
a. அவனின் பெயர், வயது, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
b. அவன் எப்பளவு காலம் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டான் என்று வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், லூக்கா 5.12ல் அவன் குஷ்டத்தால் மூடப்பட்டிருந்தான் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இது அவன் நெடுங்காலம் குஷ்டத்தால் பேரளவில் பாதிக்கப்பட்டிருந்தான் என்று புரியத் தருகிறது.
c. இயேசுவைப் பற்றி அவனுக்கு யார் அறிவித்தார் என்ற தகவல் எதுவும் கிடையாது.
இந்தக் குஷ்டரோகு குணம்பெற்ற மூன்று நிலைகளைக் காயப்போகிறோம்!
1. நிலை 1 – மாற்கு 1: 40
குஷ்டரோகி ஒருவன் இயேசுவை அணுகுதல்)....
அவன் சுகம் பெறுவதற்கு இதுவே முதல் படி...
சுகத்துக்காக அவன் இயேசுவை நாடி வந்ததை நாம் பாராட்டிப் போற்ற வேண்டும்!
ஏன்? இயேசுவண்டை அவன் வருவதைப் போற்றிப் புகழுவதற்கு முன்பு அவனுடைய அறுஅறுப்பான நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும்!
குஷ்டரோகி இயேசுவண்டை வரதற்கு ஒரு சில ‘தடைகள்’ இருந்தன!
அவை யாவை என்பதைக் காண்போம்:
a. மோசேயின் சட்டம் அல்லது யூத சட்டம்
பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் இயேசுவின் காலத்திலும குஷ்டரோகம் பயங்கரமான வியாதியாகக் கருதப்பட்டது! பரலோக ஈடுபாடு இல்லாதமல் எந்த மருந்தும் குணப்படுத்த முடியாது! ஒரு ஆசாரியனே நோயாளியை ஆராய்ந்து அவன் நோய் நிலையை உறுதிப்படுத்த முடியும்!
இவ்வியாதி ஒருவனின் புலனை அழித்துப்போடும்; நரம்பு முனைகளைச் சேதப்படுத்தும். புலன்கள் செயல்பட முடியாததால், மேலும் தங்கள் உடலில் காயப்படும்படி தங்களை அறியாமல் செயல்பட்டு விடுவார்கள். இதன் கடை நிலை பக்கவாதம்!
குஷ்டரோகம் உறுதிப்படுத்தப்படும் முதல் வாரத்தில் ஒருவர் ஒருவார காலத்துக்கு jனியறையில் அடைக்கப்படுவார். அவனுக்கு சுகம் ஏற்படவில்லை என்றால், அவன் அடைபட்டு கிடக்கும் காலம் மாதங்களாகவும் வருடங்களாகவும் நீடிக்கும்.!
இஸ்ரேலியே முகாமுக்கு வெளியே அவன் தங்கியிருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. – அது ஒரு குகையாகவோ, புறம்பான காடாகவோ இருக்கலாம்.(இப்படி இருந்தும் அவர்குளுக்கும் மற்றவர்களுக்கும் தொடர்பு கிடையாது. தீண்டப்படாதகவர்களாக அவர்கள் நடத்தப்படுவார்கள்; சமுயத்திலும், சமயத்திலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. சட்டம் அவர்கள் தீட்டானவர்கள் என்று அறிவிக்கிறது. பிற நபர்களோடு எந்த தொடுதலும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, அவர்கள் நெறுங்கி வராதபட மற்றவர்கள் அவர்களுக்கு எதிராக கற்களை விட்டு எறிவார்கள். அதனால்தான் அவர்கள் துக்கத்தை வெளிப்படுத்தும ஆடை அணியவேண்டும், தலை சீவப்படாமல் அலங்கோலமாகவும், தாடிகள் மூடப்பட்டும், ‘தீட்டு, தீட்டு…..’ என்று அவடுத்தவர்கள் விலகிச் செல்லும்படியும் கூவிக்கொண்டு செல்ல வேண்டும்!
தீட்டு!" இதற் மூலம் பிறர் அப்பால் சென்றுவிட முடியும்!
இந்த நோய் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தினாலும், ஒரு சில குடும்ப உறுப்பினர்கள், பிச்சை எடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, அவ்வப்போது உணவும் உடைமைகளும் கொடுக்கப்படும்.
குறிப்பு: சட்டம் மற்றும் கூட்டத்தினிமித்தம் உள்ள அச்சத்தினால் (மத். 8.1) அவன் இயேசுவிடம் இருந்தும் ஒதுங்கியிருந்திருக்கலாம்.!
இந்தக் குஷ்டரோகி சரீரம் – மனம் – உணர்வு – சமூக ரீதியாக துன்பம் அனுபவித்திருப்பான்!
b. உடன் வியாதிக்காரர்கள்
அவனுடைன் சேர்ந்து வாழ்ந்துவந்த குஷ்டரோகிகள், அவனை, இயேசுவண்டைச் செல்லவேண்டாம் என்று பின்வாங்கச் செய்திருப்பார்கள்!
c. "சொந்த மனசாட்சி"
அந்த வியாதி மனசாட்சியாக, ‘உன் நிலைமையைப் பார், நான் (குஷ்டரோக) நீண்ட நாளாக உன்னோடு இருக்கிறேன்! நான் உன்னை விட்டு விலகுவதில்லை! இது உன் விதி (தலையெழுத்து)!"
இந்தத் தடைகள் யாவும் அவனின் சிறையிருப்புக் கூட்டில் இருந்து விடுவிடுத்திருக்காது. ஆனால் இவை யாவாற்றுக்கும் மத்தியில் ஏதோ ஒன்று அவனின் சிந்தையைத் திறந்திருக்கும்!
குறிப்பு: இயேசுவண்டை வர எது தடுக்கிறது? நீ இயேசுவண்டை வர எது தடையாக இருக்கிறது? சுயமாகவே அனுதாபத்தைத் தேடிக் கொள்ளாதே, உன் நிலைமைக்கு நொண்டிச் சாக்கு தேடிக் கொள்ளாதே! குறை கூறுவதை நிறுத்து! கவனத்தைக் குவி! மனதில் தீர்மானமாய் இது! மன உறுதியாய் இரு! குஷ்டரோகியைப்போல், பர்த்திமேயுவைப் போல், உரிப்போக்குடைய பெண்ணைப் போல் நீயும் இயேசுவண்டை வர தீர்மானம் கொள்...
2. இரண்டாவது நிலை – மாற்கு 1:40
... முழங்காலிட்டு இயேசுவிடம் மன்றாடினான்,
இப்படிச் செய்வதன் மூலம் அவன் இயேசுவிடம் என்ன சொல்ல வருகிறான்?! இயேசுவுக்கு அவன் சொல்லும் ‘செய்து’ யாது?
‘நீர் மாத்திரமே என் நம்பிக்கை’ என்றச் செய்தியைச் சொல்கிறான். என்னை உம்மிடத்தில் சரணடையச்செய்கிறேன்! உம்மைப் போக விடேன்..."
3. மூன்றாம் நிலை – மாற்கு 1:40
... "உமக்குச் சித்தமானால், நான் சுத்தமாவேன்."
இந்தக் குஷ்டரோகியின் வல்லமையான அறிக்கையைக் காணுங்கள்!
குஷ்டரோகி இதைத்தான் சொல்கிறான், "இயேசுவே, நீர் என்னைச் சுத்தமாக்க முடியும், நீர் என்னைச் சுகப்படுத்த முடியும்... ஆனால், எல்லாம் உம் கரத்திலே உண்டு." இந்தக் குஷ்டரோகியின் விசுவாசத்தைப் பாருங்கள்!
இந்தக் குஷ்டரோகி தன் நிலைமையை இயேசுவிடம் ஒப்படைத்தாலும் அவனுடைய விசுவாவம் அற்புதம் நிறைந்தது!
நீரே என்னைச் சுகப்படுத்த முடியும் CAN HEAL ME!!! என்று குஷ்டரோகி இயேசுவண்டைச் சொல்கிறான். ஆனால் உமது கிருபையையே சார்ந்திருக்கிறேன்!
இயேசுவின் பிரதியுத்திரத்தைக் காணுங்கள்... மாற்கு 1:41
A. இயேசுவானவர் இரக்கத்தால் துலங்கினார்! அல்லேலூயா!
B. இயேசுவானவர் தம் கரத்தை நீட்டி அந்தக் குஷ்டரோகியை சொஷ்டமாக்கினார்
குறிப்பு: குஷ்டரோகி எப்போது கடைசியாகத் தொடப்பட்டான் என்று அறியோம். ஆனால், சட்டம் தொடப்படுவதற்குத் தடையாக இருக்கிறது ... யாரும் அவனைத் தொட விரும்பவில்லை. ஆனால், இயேசு தொட்டார்.
C. இயேசு என்ன சொன்னார்?
"சுத்தமாகு"
இயேசுவானவரின் ஒரு தொடுதலும் இரு வார்த்தைகளும் மாத்திரமே!
என்ன நடந்தது? மாற்கு 1: 42 உடனடியாக குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கி அவன் சுகம் பெற்றான்! என்ன அற்புதம்! என்ன சந்தோஷம்!
குறிப்பு: இயேசுவின் தொடுதல் சரீர சுகத்தை மாத்திரமல்ல, சிந்தை, உணர்வு, ஆவியையும் குணமாக்கியது. இயேசுவின் தொடுதல் எப்போதும் ‘மொத்தமாக’ வரும்.. அது முழுமையான சுகம்! ஆமென்!
"...நீர் என்னைச் சுத்தப்படுத்த முடியும்"
பாஸ்டர் ஜோசுவா ரமேஸ்
எழுப்புதல் அறுவடை தரிசனம்
No comments:
Post a Comment