கடந்த
வார மீள்பார்வை:
1. மன்னிக்கப்படுதல் 2.
மன்னித்தல்
முன்னுரை: கர்த்தருடைய
ஜெபத்தின் இந்தப் பகுதி சோதனை மற்றும் பொல்லாப்பைப் பற்றியது.
1.
சோதனைக்குப் பிரவேசிக்கப் பண்ணாமல்
மத்தேயு 6:13 - எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்,
தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.
1.1 சோதனையும் சோதிக்கப்படுதலும்
† ஆங்கிலத்தின் இதன் மூலம்
கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது (‘peirazein’)
† ‘பாவத்தில்’ விழச் சோதனை உண்டாகிறது. நமது ‘நேர்மை’ உறுதி
செய்யப்படுவதற்கு சோதனை தருவிக்கப்படுகிறது. (யாக்கோபு
1.3, 12ஐ வாசிக்கவும்)
1.2 தேவன் நம்மைச் சோதிப்பதில்லை
யாக்கோபு 1:13 - சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும்
அவர் சோதிக்கிறவருமல்ல. (ஆதியாகமம் 22.1ஐயும் வாசிக்கவும்)
† தேவன் நம்மைச் சோதிப்பதில்லை.
மாறாக, நாம் ‘சோதிக்கப்படுவதற்கு’
அனுமதிக்கிறார். இதன் மூலம் நம்மை நாம் அறிய முடியும்.
1.3 பிசாசானவனே சோதிக்கிறான்
மத்தேயு 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து:
நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள்
அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். (2 கொரி.2.11, எபே.6.12ஐயும் வாசிக்கவும்)
† நாம் தேவனுக்கும் அவருடைய
வார்த்தைக்கும் விரோதமாகப் பாவம் செய்வதற்கு நம்மை ‘சோதிக்கிறான்’.
1.4 நம் பாவ சுபாவத்தினால் சிக்க வைத்தல்
யாக்கோபு 1:14 - அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு,
சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
1
கொரிந்தியர் 10:12 - இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
† தேவனில் சார்ந்திருக்க
வேண்டியவர்கள் என்பதால் ஆவிக்குரிய தற்பெருமையிலும், அறியாமையிலும்
எச்சரிக்கையாய் இருங்கள்.
1.5 உதவிக்கான ஜெபம்
மத்தேயு 26:41 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து
ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். (சங்கீதம்
19.13, லூக்கா 22.31-32யும் வாசிக்கவும்)
1
கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல்
வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்;
உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல்,
சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத்
தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
2.
விடுவியும்:
மத்தேயு 6:13 - எங்களைச்
சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.
2.1 பிசாசானவன் பொல்லாதவன்
1
யோவான் 5:19 - உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள்
கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
2.2 பொல்லாங்கள் குருடாக்கி பறித்துக் கொள்ளுகிறான்.
மத்தேயு 13:19 - ஒருவன், ராஜ்யத்தின்
வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து,
அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
2
கொரிந்தியர் 4:4 - அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப்
பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய
மனதைக் குருடாக்கினான்.
2.3 பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்
யாக்கோபு 4:7 - ஆகையால், தேவனுக்குக்
கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்,
அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். (யோவான்
17.15, சங்கீதம் 141.4ஐயும் வாசிக்கவும்)
சுருக்கம்:1. சோதனைக்குள்
பிரவேசிக்கப் பண்ணாமல் 2. விடுவியும்
---------------------------------------------------------------------------------------------------------------
பின்வரும்
கேள்விகளைக் கலந்துரையாடவும்:
சோதனைகளையும்
பொல்லாங்கனையும் எதிர்கொள்வதற்கு நாம் தேவனைச் சார்ந்திருக்க எவ்வாறு கற்றுக் கொள்ள
முடியும்?
No comments:
Post a Comment