Friday, June 17, 2016

வெளிப்படுத்தலில் காணப்படும் 7 சபைகள் (9ல் 3வது பகுதி)





சிம்ரினா (வெளிப்படுத்தல் 2:8-11) - ஒடுக்கப்படுதலைச் சந்திக்கும் சபை  (2:10)

முன்னுரை
 சிம்ரினா - சிறிய ஆசியாவில் முக்கியமான பட்டணம் - மருத்துவம் மற்றும் அறிவியல் கல்விக்குப் பிரபலமானது.
 பரி. பவுல் தமது 3வது சுவிசேஷப் பயணத்தின் போது நிறுவியிருக்கலாம் (அப்போஸ்தலர் 19:10).

1. சபையைப் பற்றிய வர்ணனை
வெளிப்படுத்தல் 2:8
சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;

வெளிப்படுத்தல் 1:17b-18
பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;  மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
 இயேசுவானவர் ஆதியும் (அல்பா) அந்தமுமாய் (ஒமேகா) இருக்கிறார். அவர் சிருஷ்டிகளின் ஆண்டவர் (யோவான் 8:58; கொலேசேயர் 1:15-17).
 அவர் மரித்தாலும் உயிரோடிருக்கிறார் – ஜீவிக்கிறவர் (1 கொரிந்தியர் 15:3-4)
 அவர் பிறப்புக்கும் இறப்புக்கும் கர்த்தாவாய் இருக்கிறார் – ஜீவனுக்கும் மரிப்புக்கும் அவரிடத்தில் அதிகாரம் உண்டு. (மத்தேயு 10:28)
 எனவே, உயிர்த்தெழுந்த கிறிஸ்து படைப்புக்கும் நித்தியத்திற்கும் ஆண்டவராய் இருக்கிறார்.

2. சபையைக் குறித்த வர்ணனை:
வெளிப்படுத்தல் 2:9
 உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.

 சிம்ரினா கிறிஸ்தவர்கள் பல பாடுகளையும் உபத்திரவங்களையும் அனுபவித்தார்கள்.
 சாத்தியப்பூர்வமான ஜீவியத்திற்காக அவர்கள் ஏழ்மையாய் இருந்தாலும் தேவனுடைய பார்வையில் அவர்கள் ஐசுவரியவான்களே.
 இந்தச் சபையைம் யூதர்கள் மத்தியில் தேவனை நிந்திக்கிறவர்களாய் காணப்பட்டார்கள்.

3. சபைக்கு வரவிருக்கும் ஆபத்து:
வெளிப்படுத்தல் 2:10a
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

 எனவே, சபைக்கு இன்னும் பெரிய உபத்திரவம் வரவிருக்கிறது.
 ஆனால், அவர்களை அஞ்ச வேண்டாம் என்று இயேசு நினைவு படுத்துகிறார்.
 விசுவாசிகளைச் சிறையில் போடுவதில் பிசாசு உண்மையான எதிரி என்று அவர் வெளிப்படுத்துகிறார். (1 பேதுரு5:8)
 ‘பத்து நாள்’ என்பது தெய்வீக அடையாளமாய் இருக்கிறது. இது ஆண்டவரே அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று காட்டுகிறது.
 ஆயினும் விசுவாசிகளை சிறைப்படுத்துவது அவர்களைச் சோதிப்பது ஆகும்.

4. சபையின் செயலாக்க திசை
வெளிப்படுத்தல் 2:10
ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்

 மரணபரியந்தம் உண்மையாயிருக்கும்படி தேவன் சபையை உண்மையாய் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறர்.
 ஜீவ கிரிடம் அவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதி – கிரிடம் நித்திய ஆட்சியைக் காட்டுகிறது.

5. சபைக்கு வாக்குத் தத்தம்:
வெளிப்படுத்தல் 2:11
காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

 அவர்கள் இரண்டாவது மரணத்தை அனுபவிப்பதில்லை என்பது வெற்றிபெறும் விசுவாசிகளுக்குக் கிடைக்கும் வாக்குத் தத்தம்

முடிவுரை:
 உபத்திரவமான காலத்தில் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று சிம்ரினா சபை உபதேசிக்கிறது.
—————————————————————————————————————–———————
கலந்துரையாடல் கேள்வி: ஒடுக்கப்படும் காலத்துக்காக நாம் எப்படி சிறந்த முறையில் ஆயத்தமாகலாம்?


No comments:

Post a Comment