கடந்த வார மீள்பார்வை:
1. அன்றன்றுள்ள அப்பம்; 2. எங்களுக்குத்
தாரும்
முன்னுரை:
மத்தேயு 6:12 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள்
கடன்களை எங்களுக்கு மன்னியும்.
† கர்த்தருடைய
ஜெபத்தில் இந்தப் பகுதி மாத்திரமே விளக்கத்தைக் கொண்டிருக்கிறது.
மத்தேயு 6: - 14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள்
அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள்
பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
1. மன்னிப்பு:
மத்தேயு 6:12 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள்
மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
1.1. நாம் அனைவரும் பாவிகளாய் இருக்கிறோம்
† ரோமர் 3:23
- எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
† உங்கள்
அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள்
பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு
மறைக்கிறது. (ஏசாயா 59:2)
† பாவத்தின்
சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். (ரோமர் 6:23).
1.2. நமக்குத் தேவனின் மன்னிப்பு தேவை
† கர்த்தாவே, நீர்
அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார்
நிலைநிற்பான், ஆண்டவரே. (சங்கீதம்
130:3).
† தேவன்
நமது பாவங்களை மன்னிக்கும் பொருட்டு நாம் மனந்திரும்பி அவருடைய மன்னிப்பை நாட
வேண்டும்.
1.3. தேவன் நம்மை மன்னிக்கிறார்
† அவருடைய
கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு
இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. (எபேசியர் 1:7).
† நம்முடைய
பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு
மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும்
நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:9).
2. மன்னிப்பு:
மத்தேயு 6:12 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள்
மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
2.1 மன்னிக்கப்பட்டதால் மன்னிக்க வேண்டும்:
மத்தேயு 6:14-15 - 14 மனுஷருடைய
தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள்
பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள்
பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
2.2 மன்னிப்புக்கான உவமானம்
மத்தேயு 18:21-22, 35 (வாசிக்கவும்: 18:21-35)
21 அப்பொழுது, பேதுரு
அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன்
எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான்
எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ
என்று கேட்டான்.
22 அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும்
என்று உனக்குச் சொல்லுகிறேன்……
35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை
மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும்
உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
2.3. தேவனைப் போல் மன்னித்தல்:
கொலோசெயர் 3:13 - ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில்
ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர்
மன்னியுங்கள். (எபேசியர் 4:31-32–உம் வாசிக்கவும்)
2.4 கிறிஸ்துவைப் போல் மன்னித்தல்:
லூக்கா 23:34 - அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு
மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே
என்றார்.
மேற்கோள்: மன்னியாமை ஆவிக்குரிய அசுத்தமாகும். ஆதலால், பாவமன்னிப்புக்கான
தேவ வார்த்தையால் கழுவப்பட்டு பரிசுத்தமாயிருங்கள். ~ ஜாய்ஸ்
மேயர்
சுருக்கம்: 1. மன்னிக்கப்படுதல் 2. மன்னிப்பு
முடிவுரை: பிறரை நாம் மன்னிப்பதற்காக நாமும்
இலவசமாக மன்னிக்கப்பட்டிருக்கிறோம்.
பின்வரும் கேள்விகளைக் கலந்துரையாடவும்:
1. பிறர் குற்றங்களை மன்னிக்க சித்தமில்லாத நமது குணம்
எப்படி தேவனுக்கும் பிறருக்கும் உள்ள நமது உறவைப் பாதிக்கிறது?
2. தேவனுடைய உதவியால் நாம் எப்படிப் பிறர் குற்றங்களை
மன்னித்து மறக்க முடியும்?
No comments:
Post a Comment