Tuesday, June 7, 2016

நமது வாலிபர்களுக்காக ஜெபிப்போம்

நமது வாலிபர் ஞாயிறு ஆராதனைக்கு வரவேற்கிறோம்.

நமது வாலிபர்கள் சபை மற்றும் சமுதாயத்தின் எதிர்கால இலக்கை நிர்ணயிப்பவர்கள். அவர்களே எதிர்காலத்தைத் திட்டமிடும் தலைவர்கள். தேவன் தமது ராஜ்யத்தைக் கட்டப்போவதற்கு அவர்களே அஸ்திபாரம். தேவ சித்தத்தின் நிறைவை அவர்களிடத்தில் காண்பதில் மகிழ்வடைகிறோம்

இதன் நிமித்தம் பிசாசானவன் அவர்களை அழித்துப் போடுவதற்கு வகை தேடுவதும் உண்மைதான்.

இன்று, அவர்களை எப்போதும் நமது ஜெபத்தில் நினைவுகூற ஒரு கூட்டுத் தீர்மானத்தை எடுப்போம். ஒவ்வொரு ஞாயிறும் ஒரு வாலிபர்களிடத்தில் பேசுவதற்கு நாம் ஒரு நிமிடம் ஒதுக்குவோம். உங்கள் தொடர்பும் ஊக்கமளித்தலும் அவர்களுக்கு அதிகமான சந்தோஷத்தையும் சுகத்தையும் கொண்டு வரக் கூடும். இது ஒரு முக்கியமான ஊழியம். முயன்று பார்த்து வாலிபர்கள் எப்படி வளம் பெறுகிறார்கள் என்பதைக் காணுங்கள்! 


தேவன் நமது வாலிபர்களையும் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment