கிறிஸ்மஸ் காலம் ஈகையின்
காலமாகவும் கருதப்படுகிறது. அதே வேளையில் நட்பைப் புதுப்பிப்பதற்காகவும், நம்மைச்
சூழ்ந்துள்ளவர்களோடு நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுத்திக்
கொள்கிறோம்.
அது அற்புதத்தின் காலம் என்பதையும்
நீங்கள் அறிவீர்களா! நம்பிக்கை, மகிழ்வு, நிச்சயித்திருந்தல் ஆகியவை மாபெறும்
அற்புதத்திற்காக காத்திருக்கின்றன! அதுவும் உங்களுக்கு! நம்பிக்கையானது நம்மை
சமாதானத்திற்கு வழி நடத்திச் செல்கிறது. மகிழ்வு என்பது நடவடிக்கை அன்று (அரிஷ்டோட்டல்
அது ஒரு நடவடிக்கை என்றுதான் நம்பிக்கொண்டிருந்தார்). உண்மையில்
அது கலவரம் இல்லாத ஒரு அமைதியான நிலைமை!
நம்பிக்கை இல்லாத உள்ளம், அன்பு
இல்லாத வரட்சி நிறைந்த உள்ளமாக ஆகிவிடும். நம்பிக்கையை இழக்கும் பலர் ஏமாற்றத்தை
அடைகின்றனர். என்ன நடந்தாலும், இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்து
பயணத்தைத் தொடங்குங்கள்.
உலகம் என்னதான் குழப்பம் நிறைந்து போனாலும், உலகச் சூழல் சீரழிந்து போனாலும்,
பண வீக்கத்தினால் மக்கள் அவதியுற்றிருந்தாலும், உங்கள் உள்ளத்தின் ஓர் ஓரத்தில்,
இவற்றையெல்லாம் வெல்லும் சமாதானம் சாந்தியாய் அமர்ந்திருக்கும் போது – தேவன் தக்க
தருணத்தில் அற்புதமான காரியங்களை நடத்துவார் – அவை யாவும் சரியாய் முடியும்.
உங்கள்
அன்பானவர்களுடன், நம்பிக்கை, சந்தோஷம், விசுவாசம் நிறைந்த பண்டிகையின் காலமாக இது
உங்களுக்குத் திகழட்டும்.
No comments:
Post a Comment