Tuesday, June 7, 2016

இயேசுவானவரின் கிருபை தேசத்தைச் சூழ்ந்து கொள்வதா

கடந்த வாரத்தில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் முழு தேசத்திற்கும் அதிர்ச்சியைத் தருகிறது.

நேப்பாளப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த மிக மோசமான நில நடுக்கம். நமது தேசத்தில் பணியாற்றும் நேப்பாளத் தொழிலாளர்கள், தாயகத்தில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்தைக் குறித்த சோகக் கதைகளைக் கூறுகிறார்கள். நமது தேசத்திற்காக நாம் ஜெபிக்க வேண்டும். நேப்பாளத்தில் உள்ள சபைகளுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். அந்தச் சபைகள் தங்கள் தேவைகளுக்கும் அப்பால், பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி நல்க களத்தில் இறங்க வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். அடுத்த ஞாயிறில் அத்தேசத்திற்கு உதவ விஷேச காணிக்கை ஏறெடுப்போம்.

ஒரு சாலை விபத்தில் பெற்றோரும் சிசுவுமாக உயிரிழந்த சம்பவம் இன்னொன்றாகும். ஒரு வேளை அவர்கள் வாகனப் பந்தயத்தில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம்! நம்மைச் சூழ்ந்துள்ள இந்தச் சோகமான சம்பவங்களை வாசிக்கும் போது நமது உள்ளம் உடைந்து போகிறது. இந்த விபத்துக்கு என்ன காரணமாக இருந்தாலும், சட்டவிரோத சாலைப் பந்தயங்களை முறியடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெபிப்போமாக.


இயேசுவானவரின் கிருபை தேசத்தைச் சூழ்ந்து கொள்வதாக. தேவன் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. 

No comments:

Post a Comment