Tuesday, June 7, 2016

ஆடம்பரத்தோடு தேவனை ஆராதிக்கும் சபையாக நாம் மாறுவோமாக!

டார்லென் ஹெச்செக் என்பவர் ஆராதனைப் பாடலை வழிநடத்துவதில் தலை சிறந்தவர். அவர் ‘ஆடம்பரமான ஆராதனை’ என்ற புத்தகத்தை எழுதியவர். தமது உற்சாகமும் பரிபூரணமும் நிறைந்த தேவ ஆராதனையின் அனுபவத்தை அவர் அதில் பகிர்ந்துள்ளார்.

தேவனை அறிவதோடு, அவர் நமது ஜீவியத்தில் இடைபடுவதைப் புரிந்து கொள்ளும் போது, அவரை ஆராதித்துச் சரணடைவதைத் தவிர வேறொன்றையும் செய்ய இயலாது. அவரை பேரிகை ஆவி நிறைந்த ஆராதனை செய்வதன் மூலம் நம் உள்ள பாரத்தை இறக்கிக் கொள்ள முடியும் என்றும் நம்புகிறேன். தாவீது உரத்த குரலோடு பாடி, நடனமாடி, கைதட்டி, பணிந்து குனிந்து, துள்ளிக் குதித்து இன்னும் பல இசைக் கருவிகளை மீட்டு, தேவனை ஆராதித்தான்.

நாம் உயிரோடு ஜீவிப்பதற்காகவும், தேவனுடைய கிருபையைப் பெறும் பாக்கியத்திற்காகவும் பேரானந்தத்தோடு ஜெபிக்கிறேன்.

ஆடம்பரத்தோடு தேவனை ஆராதிக்கும் சபையாக நாம் மாறுவோமாக!


தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment