ஐந்து தீவிரவாத வட்டாரக் குழுக்கள் நமது சபைகளில் செயல்படுவதாக சமீபத்திய
தகவல்கள் கூறுகின்றன. அவை பின்வருமாறு அடையாளப்படுத்தப்படுகின்றன: உறக்கக்
குழு, விவாதக் குழு, சண்டைக் குழு, புகார்க் குழு, தலைமறைவுக் குழு அவை ஆகும்.
லூசிவர் இக்குழுக்களுக்கு தலைமை வகித்து, கிறிஸ்துவின் சரீரத்தை நாசமாக்க
பயிற்சி வழங்கியுள்ளான். கிறிஸ்தவர்கள் போல் மாறு வேடத்தில் ஆலயங்களில் உலாவி சபையைப்
பெலவீனப்படுத்தி, இடையூறு செய்து அழிப்பதே இக்குழுக்களின் நோக்கம்.
ஆயினும், ஆறாவதாக ஒரு குழு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதன் பெயர் ஜெபக்
குழு என்பதாகும். இது மட்டுமே மேற்கூறப்பட்ட தீவிரவாதக் குழுக்களின்
செயல்பாட்டை முறியடிக்கும் வல்லமை பெற்றது. இந்த ஜெபக் குழு கிறிஸ்துவின்
சரீரத்தைப் பெலப்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய பாடுபடும். மற்ற தீவிரவாதக்
குழுவைக் காட்டிலும், இந்த ஜெபக் குழுவுக்கு வேறு விதமான குணாதிசயங்கள் உள்ளன என்பதை நாம் கவனித்துள்ளோம். அவை, விழிப்புணர்வு,
பொறுமை, உபவாசம், இயேசு கிறிஸ்துவாகிய தேவ வருகைக்கான வாஞ்சை ஆகியவை
அவை.
நீ எந்தக் குழுவில் அங்கம் வகிக்கிறாய்? நாள் முழுவதும் ஜெபத்தால் தங்கள்
ஜீவியத்தை நிரப்பும் வீரர்கள் நம் நாட்டுக்குத் தேவை… ஆலயத்தில் மட்டும்
ஜெபித்தால் போதாது. எனவே, நீ ‘ஜெபக் குழுவில்’ அங்கம் வகிக்கிறாயா?
மொழிபெயர்ப்பு - Via Don Boice (http://www.vscoc.org/Bulletinfdr/terrorist_groups_operating_in_ch.htm)
No comments:
Post a Comment