Tuesday, June 7, 2016

இயேசுவானவர் அனைவருக்கும் பரிபூரண வெகுமதி

அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!

இயேசுவானவர் அனைவருக்கும் பரிபூரண வெகுமதி ஆவார். அவர் நம்பிக்கையின் வெகுமதி.

இந்த உலகுக்கு இயேசுவானவர் தேவை. நீங்களும் நானும் இச்செய்தியைப் பிறருக்கு அறிவிக்காத வரைக்கும் உலகம் அதனை அறியாது.

இவ்வுலகம் சோர்வோடும், களைப்போடும் மனமுடைந்தும் காணப்படுகிறது.

இந்த ஓராண்டில் மட்டும் நம்மைச் சூழ்ந்து பல பொல்லாத காரியங்கள் நடந்து விட்டன. ஜீவாதாரச் செலவு அதிகரிப்பு, சமய பயங்கரவாதம், மந்தமான தலைமைத்துவம், தூசி மூட்டம் அவற்றில் சில. ஜனங்கள் இவற்றில் சிக்கி சோர்வோடு காணப்படுகிறார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் இளைப்பாறுதல் தேவைப்படுகிறது. 

இயேசுவானவர் நமக்கு இளைப்பாறுதலையும் சமாதானத்தையும் தர முடியும்.

தேவையுடைய ஒருவரைச் சந்திக்க தேவன் வழிநடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இயேசுவானவரின் அன்பையும் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். கிறிஸ்மஸ் அற்புதம் எந்த நேரத்திலும் யாவரிடத்திலும் நிகழலாம்.


தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment