Tuesday, June 7, 2016

கிறிஸ்துவுக்குள் வளர்தல்

      
வேத பகுதி: 1 யோவான் 2:12-14
---------------------------------------------------------------------------------------------------------------
முன்னுரை:

   உண்மை: மனித உடல் வளரும் தன்மையைக் கொண்ட விந்தையைக் கொண்டுள்ளது.
   கேள்வி: மனித உடல் வளர்ச்சியடையும் போது எந்த உறுப்பு சிறுகி வருகிறது?
   பதில்: எலும்புகள்நாம் பிறக்கும் போது 350 எலும்புகள் இருக்கும். ஆனால், முதுமைக்கு வளரும்போது அவை 206-ஆக குறைகிறது.
   அது போலவே, வேதாகமம் நாம் கிறிஸ்துவுக்குள் ஆவியில் வளர கற்றுக் கொடுக்கிறது.

1. மீண்டும் பிறக்கும் சிசுகள்

யோவான் 3:3-7
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.

   நிக்கொதேமுவுக்கு இயேசு தேவனுடைய ராஜ்யத்தில் மீண்டும் பிறக்க வேண்டிய அவசியத்தைக் கற்றுக் கொடுத்தார்.
   மறு பிறவிஆவிக்குரிய பிறப்பைக் குறிக்கிறது. இது புதிய தொடக்கத்தையும் நிலைமைய்யும் குறிக்கிறது.

2 கொரிந்தியர் 5:17

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.


2. தேவ பிள்ளைகள்

யோவான் 1:12

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

1 யோவான் 2:12, 13c
12 பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால்

அடிப்படை வளர்ச்சி பாவங்கள் மன்னிக்கப்படுதலும் தேவனோடு பிதா நிலையிலான உறவு.

3. இளைஞர்

1 யோவான் 2:13b, 14b
13, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

   பொல்லாங்கனை தொடர்ந்து மேற்கொள்வதற்காக, ஆவிக்குரிய பெலத்துக்கான வளர்ச்சி தேவைப்படுகிறது. இது தேவ வார்த்தையில் வளர்வதிலும் அவருக்குக் கீழ்ப்படிதலிலும் ஏற்படுகிறது.

4. தந்தை

1 யோவான் 2:13a-14
13 பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். 14 பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

   இதைத் தவிர தேவனை ஆழமாக அறிந்து கொள்ளவும், உறவிலும், நெறுக்கத்திலும் ஆவிக்குரிய நிலைத் தன்மையிலும் முதிர்ச்சியிலும் வளர்ச்சியடைவதுவும் உண்டு.

முடிவுரை:
   ஆவிக்குரிய வளர்ச்சியென்பது தேவனுடைய உதவியோடு நாம் அனைவரும் நாட வேண்டிய செயற்பாங்கு ஆகும்.
---------------------------------------------------------------------------------------------------------------
பின்வரும் சுய ஆராய்ச்சி வினாக்களைக் கலந்துரையாடவும்:

1. உனது தற்போதைய ஆவிக்குரிய வளர்ச்சியை நீ எப்படி மதிப்பிடுகிறாய்?

2. நாம் படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியடைய மேற்கொள்ள வேண்டிய சாத்தியப்பூர்வமான படிமுறைகள் யாவை

No comments:

Post a Comment