Friday, June 10, 2016

வெளிப்படுத்தலில் உள்ள 7 திருச்சபைகள் (9ல் 2வது பாகம்)



எபேசு (வெளிப்படுத்தல் 2:1-7) – முதற் பங்கான அன்பை நிராகரித்த சபை (2:4).
முன்னுரை:
V எபேசு – சிறிய ஆசியாவிலேயே மிகப் பெரிய நகரம்வர்த்தக மற்றும் சமய மையம்
V எபேசு சபையின் வரலாற்றை வேதாகமத்தில் வாசிக்கிறோம் (எபேசு 1; அப்போஸ்தலர் 18 & 19).
V 30 வருடங்களுக்குப் பின்னர் எபேசு சபை புத்தாக்கம் பெற்றது

1. சபையைப் பற்றிய வர்ணனை:
வெளிப்படுத்தல் 2:1
எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;


V V ஒருவர் = மனித குமாரன் (ஆண்டவரலகிய இயேசு கிறிஸ்து)
V V ஏழு நட்சத்திரங்கள் = ஏழு சபைகளின் ஏழு தேவ தூதர்கள்
V V ஏழு பொன் குத்துவிளக்குகள் = ஏழு சபைகள்

2. சபைகள் பற்றிய வர்ணனை: 
வெளிப்படுத்தல் 2:2-3, 6
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
V கிரியைகள், பிரயாசம் மற்றும் விடா முயற்சி – அவர் நலனுக்காக பொறுமையாய் இருத்தல் – வளர்ச்சியினிமித்தம் சோர்வடையவில்லை.
V துன்மார்க்கரைச் சகித்துக் கொள்ள முடியாமை – தங்கள் அப்போஸ்தலர்கள் என்று கூறிக்கொள்கிறவர்களைச் சோதித்துப் பார்த்தல்.

3. சபைகளை நிராகரித்தல்: 
வெளிப்படுத்தல் 2:5
V ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. 

V V முதற்பங்கான அன்பை விட்டுவிட்டதால் இயேசு இச்சபையைக் கடிந்து கொள்கிறார்.

4. சபைக்கான திசை: 
வெளிப்படுத்தல் 2:5
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

V ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக – மனந் திரும்பினால் ஒழிய
V உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்

5. சபைக்கு வாக்குத்தத்தம்: 
வெளிப்படுத்தல் 2:7
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.


V செவிமடுத்துக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் வாக்குத் தத்தமாக தேவ வார்த்தை வருகிறது.
V ஜெயங்கொள்ளுகிறவர்கள் – தேவனுடைய பரதீசின் மத்தியிலிருந்து ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கும் உரிமை கிடைக்கும்

முடிவுரை:  
V தம்மை மீண்டும் நேசிக்கத் திரும்பும் சபைகளைக் குறித்து ஆண்டவராகிய இயேசு அக்கறை காட்டுகிறார்.

—————————————————————————————————————–——————————
சிறு குழு கலந்துரையாடல்: 
1. நான் தனிப்பட்ட முறையிலும் சமுதாயத்திலும் அவரின் முதற் பங்கான அன்பை எப்படி நிராகரித்தேன்? 
2. தேவனுடைய முதற்பங்கான அன்பிற்கு நாம் எப்படி மனந்திரும்பி ஏற்றுக் கொள்வது?

V இந்தப் பயணத்தைத் தொடங்கும் நாம் ஜெபத்தோடு இயேசுவானவருடைய குரலை இன்று கேட்போமாக 


No comments:

Post a Comment