Tuesday, June 7, 2016

கர்த்தருடைய ஜெபம்


----------------------------------------------
கடந்த வார மீள்பார்வை:
1. சித்தம்           2. தேவனுடைய சித்தம்              3. தேவனுடைய சித்தம் செய்யப்படுதல்

முன்னுரை:

Trivia:  
1.        தற்போதைய அரசியல் தலைவர்களில் மிக நீண்ட காலம் பொறுப்பில் இருந்த தலைவர் யார்?
2.        உலகில் வாழ்வதற்கு மிகச் சிறந்த நாடு எது?
    ஆனால், நமது நீண்ட மனித வரலாற்றின் காரணமாக பரிபூரணத்தை இன்னும் கண்டு கொள்ளவில்லை.

1. பரலோகத்தில் செய்யப்படுவது போல:

மத்தேயு 6:10: உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
      பரிபூரணத்தில் மூலம் எது என்பதை இயேசுவானவர் பரலோகத்தில் தேடச் சொல்கிறார்.
    நாம் பரலோகத்தில் நித்தியமாக ஜீவிக்கப் போகிறோம். தற்போதைக்கு பூலோகத்தில் ஜீவிக்கிறோம்.

1.1 பரலோகம் தேவனுடைய சிம்மாசனம்:
மத்தேயு 5:34-35: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.  பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்
    தேவன் பரலோகத்தில் வாசம் செய்கிறார். அங்கேயிருந்து அவர் சகலத்தையும் ஆட்சி செய்கிறார்.
    பரலோகமே அவரின் பரிபூரண ராஜ்யம். அங்கேயே அவருடைய பரிபூரணம் நிறைவேற்றப்படுகிறது.

1.2 பரலோகம் பரிபூரணமானது:

வெளிப்படுத்தல் 21:1-4: பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

    பரலோகமே பரிபூரணமான இடம். அங்கேயிருந்து படைப்புகளுக்குப் பரிபூரணம் பாய்கிறது.

2. நமது பூலோகம்:

மத்தேயு 6:10: உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
    பூலோகம் பரலோகமாக மாறிஎன்றென்றும் நிலைத்திருக்க இயேசு உபதேசிக்கிறார்.

மத்தேயு 5:34-35: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; …
    பூமி தேவனுடைய பாதபடி. எல்லா படைப்புகளிலும் அவர் அக்கறையுள்ளவராய் இருக்கிறார்.

எபிரேயர் 11:16: அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
    பழைய ஏற்பாட்டில் உள்ள ஜனங்கள் இந்த பரிபூரண பரலோகத்தை வாஞ்சித்தார்கள்.

யோபு  38:33: வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?

    ஜெபிக்கவும், ஜீவிக்கவும், தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய சித்தத்தையும்  அடையாளம் காட்டவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

சுருக்கம்:           1. பரலோகத்தில் செய்யப்படுவது போல் 2. பூமியிலும்

சுருக்கம்: தேவனுடைய பரிபூரண ராஜ்யத்திற்காக ஜெபிப்பதோடு அதை பூமியிலும் முன்னுதாரணமாகக் காட்ட வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------
பின்வரும் கேள்விகளைக் கலந்துரையாடவும்:

 


சுவிசேஷத்தின் அடிப்படையில் பூமியில் நமது கடமை என்ன? பிலி. 3:20 & மத். 5:13-16

No comments:

Post a Comment